Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 12, வியாழக்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அமதுரூ அமரஜீவ, ஹனீக் அஹமட்)
கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது.
தற்போது கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகவே கிழக்கு மாகாண பொலிஸாரின் விடுமுறைகள் இரத்துசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
குறித்த அறிவித்தல் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் மர்ம மனிதனின் நடமாட்டத்தினையடுத்து பதற்ற நிலை ஏற்றப்பட்டது. இதனால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான மருதமுனை முதல் பொத்துவில் வரையான பிரதான வீதியோரங்களில் அதிகமான இராணுவத்தினர் இன்று சனிக்கிழமை கடமையில் ஈடுபட்டுள்ளமையை காணக்கூடியதாகவிருந்தது.
மர்ம மனிதன் விவகாரம் தொடர்பில் பொதுமக்களுக்கும் - பொலிஸாருக்குமிடையில் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் கடந்த சில தினங்களில் மோதல்கள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
meenavn Saturday, 13 August 2011 10:19 PM
பொலிசாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டால் மர்மமனிதர்களுக்கு வாலாட்டவும் முடியாதுபோல?
Reply : 0 0
aj Saturday, 13 August 2011 11:09 PM
இவர்களின் விடுமுறையை ரத்துசெய்தால் எல்லா பிரச்சனையும் முடிந்துவிடும் ?
யார் அந்த மர்ம மனிதர்கள் ? இதுவரை அரசிடம் எதுவித விளக்கமும் இல்லை, மக்களால் பிடிக்கப்பட்டவர்களும் விடுதலை.
இதில் இருந்தே தெரிகிறது இதற்கு பின்னால் நிக்கும் அந்த மர்மமனிதர் .
Reply : 0 0
hari Saturday, 13 August 2011 11:28 PM
போலீசாரில்ல படையே குவிச்சுப் போட்டும் மர்மம் துலங்குமா? போலீசாரின் எண்ணிக்கையை விட படையினரின் எண்ணிக்கை கூடிட்டே ஆமி கேம்புகளும் எஸ்டிஎப் கேம்புகளும் மீண்டும் அமைக்க அண்மைக்காலமாக திட்டமிட்டவர்களுக்கு மர்மமனிதன் வேலையே லேசாக்கிவிட்டான்.
Reply : 0 0
மௌனி Saturday, 13 August 2011 11:45 PM
பொலிசாருக்கு விடுமுறை வழங்கப்பட்டால்தான் மர்ம மனிதர்களால் வாலாட்ட முடியாது. ஏனெனில் மக்கள் விழிப்பாகத் தான் இருக்கிறார்கள்.
Reply : 0 0
மீனா Saturday, 13 August 2011 11:50 PM
நீங்க எல்லாருமா சேர்ந்து காது குத்துறது மக்களுக்கு தெரியாதா என்ன? நீங்க வெளிநாடுகளுக்குப் போறப்போ தானா இதெல்லாம் நடக்கணும்? எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு ஆடுங்க. இது உங்களின் வசந்த காலம். .
Reply : 0 0
mohamed Sunday, 14 August 2011 10:32 AM
போலீஸ், 'கிரீஸ் மனிதன' போலீஸ் நிலையத்துக்கு கொண்டு ஏன் போகனும், இத ஏன் மினிஸ்டர் மார் கேக்கல்ல?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago