Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 12, வியாழக்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அக்கரைப்பற்றில் மர்ம மனிதன் தொடர்பான சம்பவங்ளின் போது பொலிசார் மீது கல்வீசி கலகம் விளைவித்த குற்றச்சாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரை இன்று பகல் கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
சாகம வீதியில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் மர்ம மனிதன் என்று கூறப்படும் ஒருவரை பொதுமக்கள் துரத்திச் செல்லும்போது ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனாவின் வீட்டுக்கு அருகில் காவல் கடமையில் ஈடுபடடிருந்த பொலிஸாருடன் பொதுமக்களுக்கு கைகலப்பு ஏற்பட்டது.
அப்போது பொலிஸார் மீது கல் வீசி கலகம் விளைவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்ட யோ.உதயராஜை பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை பகல் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago