2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

கல்முனையில் மூன்று சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனு நிராகரிப்பு

Super User   / 2011 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.ரம்ஸான், எம்.சீ.அன்சார்)

கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, இலங்கை தமிழரசு கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உட்பட ஒன்பது அரசியல் கட்சிகளும் 11 சுயேட்சை குழுக்களும் வேட்புமனுக்களை அம்பாறை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்திருந்தன.

எனினும் மூன்று சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியான சுனில் கன்னங்கராவினால் நிராகரிக்கப்பட்டன.

இந்த வேட்புமனுக்கள் முறையாக பூரணப்படத்தப்படாமையினாலேயே நிராகரிக்கப்பட்டதாக அம்பாறை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்ட செயலாளருமான சுனில் கன்னங்கர தெரிவித்தார்.

சிரேஷ்ட சட்டத்திரணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொதுச்செயலாளருமான நிசாம் காரியப்பர் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்புமனு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஹசன் அலியினால் தாக்கல் செய்யப்பட்டது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்புமனுவை சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரட்னவும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்புமனுவை கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் தயா கமகேயும் தாக்கல் செய்தனர்.

அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், கிழக்கு முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பபுடன் இணைந்து போட்டியிடுகின்றன.

சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பார் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதி தலைவர் ஏ.எம்.மஜீட், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப், எம்.எஸ்.நிசார் மற்றும் தொழிலதிபரான கலாநிதி எம்.சிராஸ்  உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகின்றனர்.

இதேவேளை, கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.எம்.றியாஸ், முபீத், யூ.எல்.றியாஸ் மற்றும் ஐ.பி.ரஹ்மான் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக போட்டியிடுகின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சி சார்பாக ரோஹித சதீஸ், சுலைமாலெப்பை முபீஸ் மற்றும் முஹம்மட் அபூபக்கர் அப்துல் ஆசீர் மற்றும் எம்.எம்.சனீஸ் உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர்.

இதேவேளை, இலங்கை தமிழரசு கட்சி குஞ்சித் தம்பி ஏகாம்பரத்தினை தலைமை வேட்பாளராக கொண்ட வேட்புமனுவை கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது. இலங்கை தமிழரசு கட்சி சார்பாக ஏ.அமிர்தலிங்கம், கந்தையா தம்பிராசா உள்ளிட்ட உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர்.

இம்முறை கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் முதற் தடவையாக பல சிங்களவர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • Birdeye Saturday, 27 August 2011 03:31 AM

    இது என்ன பாராளுமன்ற தேர்தலா?

    Reply : 0       0

    Birdeye Saturday, 27 August 2011 03:36 AM

    இது என்ன பாராளுமன்ற தேர்தலா? வேலை இல்லாதவர்கள் கல்முனையில் கூடி விட்டார்கள்

    Reply : 0       0

    siraj Saturday, 27 August 2011 05:35 AM

    ஹா ஆ ஹா ஆ
    மேயர் அப்துல் மஜீட் முழக்கம் உறுதி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7