Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 26 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான் )
அரசாங்கத்தோடு இணைந்திருக்கும் நாங்கள் அரசாங்கத்தை எதிர்த்து கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ.ஹஸன் அலி தெரிவித்துள்ளார்.
கல்முனை மாநகரசபைத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இத்தேர்தலை நேசசக்தியோடுதான் நடத்தவுள்ளோம். எமது பிரசாரங்கள் கூட இனப்பிரச்சினை தொடர்பானதாகவே பெரும்பாலும் அமையும். நாங்கள் ஏழு மாநகரசபைகளில் தனித்தும் அரசாங்கத்துடன் சேர்ந்தும் போட்டியிடுகிறோம். ஆனால் கல்முனை மாநகரசபையில் மாத்திரம் தனித்து போட்டியிடுகிறோம். நாம் இத்தேர்தலில் சிறந்த முறையில் பிரசாரங்களை மேற்கொண்டு அமைதியான நல்லதோர் தேர்தலை நடத்துவதற்காக களமிறங்கியுள்ளோம் என்றார்.
கல்முனை மாநகரசபையை மீண்டும் உங்களது கட்சி கைப்பற்றுமா என வினவியபோது, நிச்சயமாக வெற்றி பெறுவோம். ஏனெனில் கடந்த காலங்களில் மக்கள் எமது கட்சிக்கு அளித்த வாக்குகள் மற்றும் ஆதரவினால் நிச்சயமாக நாம் ஆட்சியை கைப்பற்றுவோம். அத்துடன், திறமையான வேட்பாளர்களை இம்முறைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளித்துள்ளதாகவும் கூறினார்.
roomy Sunday, 28 August 2011 05:01 AM
கலாநிதி சிராஸ் லண்டன் இல் கலாநிதி பட்டம் பெற்ற முதல் சாய்ந்தமருது புத்திஜீவி ஆவார் ....அது தவிர லண்டனின் உள்ள இறைச்சிக்கடைக்கும் அவருக்கும் நல்ல ராசியாம் ......
Reply : 0 0
Peace Lover Saturday, 27 August 2011 08:21 PM
கல்முனை மக்கள் மீண்டும் ஏமாற போகிறார்கள்.
Reply : 0 0
rizadh Rock Kalmunai Saturday, 27 August 2011 08:26 PM
சிராஜ் போன்ற ஏமாளிகள் இருக்கும் வரைக்கும் எமது பிரதேசம் உண்மையை அறிய முடியாது.
Reply : 0 0
samrana Saturday, 27 August 2011 09:03 PM
பணம் மட்டும் போதுமா? அதனை செலவு செய்வதற்கும் மூளை வேண்டுமல்லவா
Reply : 0 0
siraj Saturday, 27 August 2011 11:07 PM
நாங்க உண்மையை சொல்வோம் ஏன்னா ரிசாட் போன்றோர் பிள்ளையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டும் பழக்கம் கொண்டவர்கள்
நாங்க நாட்டிலும் வீட்டிலும் ஊரிலும் நல்லது நடக்கனும் என்பதில் உறுதியா இருப்பவர்கள். அதுதான் நிஜத்தைச் சொன்னேன்.
அரசியல்வாதிகள் மர்மமனிதனுக்காக குரல் கொடுக்க வில்லை என்றால் யார்தான் குரல் கொடுத்திருக்கார்கள்?
நாங்கள் சொல்வது எல்லாம், 'மர்மமனிதனை உரிய ஆதாரத்துடன் தாங்க அதன் பின்னர் என்ன செய்றோம் அரசாங்கம் இல்லை, யாரு வந்தாலும் சரியான நடவடிக்கை எடுப்போம் என்று சொல்றோம்' ஓகேயா.. கல்முனைக்கு மேயர் மஜீட்தான்.
Reply : 0 0
Rozan Sunday, 28 August 2011 12:21 AM
மக்கள் கிரீஸ் மனிதனால் பயமுறுத்தப்பட்டு நிம்மதி இழந்து ரமலான் இரவினில் தொழுகைக்கு போக முடியாமல் கஷ்ட பட்டதனை அக்டோபர் 8 க்கு முன்பு மறந்து விட மாட்டார்கள்.
Reply : 0 0
faizal basha Sunday, 28 August 2011 12:38 AM
ஊர்வம்பு etakku வெற்றிதான் mukkiyam
Reply : 0 0
Roomy Sunday, 28 August 2011 12:42 AM
திரு ஹசன் அலி அவர்களே, நீங்கள் அதிஸ்ட சாலிதான்......மேஜர் சீட்டினை விட தேசியப்பட்டியல் பெரிசுதான். அதுவும் சும்மாவா?
Reply : 0 0
ziyath Sunday, 28 August 2011 01:31 AM
கலாநிதி சிராஸ் எப்படி கலாநிதி பட்டம் எடுத்தார்?
Reply : 0 0
rozan Sunday, 28 August 2011 01:49 AM
சிராஜ் நீங்க கடைசியாக ஏழுதிய கமெண்ட் இணை நீங்க மீண்டும் ஒரு தடவை வாசித்து பாருங்க, உங்களுக்கே விளங்கும் நீங்க குழப்பத்தில இருக்கிறீங்க என்று... இதுதான் இன்று முஸ்லிம் காங்கிரஸை ஆதரிப்பவர்களுடைய நிலைப்பாடு.
Reply : 0 0
salam Sunday, 28 August 2011 03:30 AM
இதைவிட்டிட்டு வேற வேல இருந்தா பாருங்கப்பா......... தேர்தல் வந்தா வாய் கிழிய மேடைல கத்துவாங்க. தேர்தல் முடிந்தால், அவங்க ஏசி ரூம்ல.... வாக்களித்தவர்கள் நடுத்தெருவுல..... சும்மா போட்டுட்டு போயி வேலயப்பாருங்கப்பா....
Reply : 0 0
kavi Saturday, 27 August 2011 07:55 PM
வாபா நீங்க ஏன் சண்ட புடிக்கீங்க? சிராஜ் அரசியலுக்கு வார விருப்பம் இறுக்கி போல. சிராஜ் நீங்க கிரீஸ் மனிதனை பார்கல்ல போல. அதில உங்கட குடும்பம் பாதிக்கல்ல போல. சந்தோசமா பேசிரீங்க. வாழ்க நலமுடன் !
Reply : 0 0
rifai.m.h.m Sunday, 28 August 2011 07:09 AM
உங்களுக்குள் விவாதம் தேவை இல்லை. ஏனெனில் மேயர் பதவியை சாய்ந்தமருது பெற்றே தீரும். திரு நிசாம் காரியப்பர் கட்சியில் உள்ள சிலரின் சதி வலையில் சிக்கி விட்டார். அவரை அடுத்த தேசியப்பட்டியல் எம்பி பதவிக்கு ஆப்பு வைப்பதே அவர்களின் நோக்கமாகும் .
Reply : 0 0
Rozan Sunday, 28 August 2011 07:38 AM
சாய்ந்தமருது மக்கள் நிசாமினை மேயர் வேட்பாளரிளிருந்து வாபஸ் பன்னச்செய்து அதக்கு மஜீத்தை நியமிக்கும் படி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு விரைவில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
Reply : 0 0
siraj Sunday, 28 August 2011 07:58 AM
நானும் கலாநிதி பட்டம் எடுக்க பணம் கட்டியுள்ளேன். எனக்கும் கிடைக்கும் முதல்ல எடுத்திருப்பேன். என்னிடம் பணம் இருக்க வில்லை. இப்ப வட்டிக்கு வாங்கி கொடுத்து இருக்கன்.
கலாநிதி யாருக்கு கொடுக்கனும் என்று தெரியல்லப்பா. சும்மா இறைச்சிக்கடக்காரருக்க்கும் பஸ் டிப்போவில் வடை விற்பவருக்கும் கொடுத்தா சரியா?
அடுத்து ரொசான் தம்பி நான் எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை. தப்பா இருந்தா எல்லாருக்கும் எதிரா குரல் கொடுப்பன். அது ரவூப் ஹக்கீம் இல்லை, அதாவுல்லா இல்லை, மகிந்த என்றாலும் சரிதான். ஓகே?
Reply : 0 0
rizadh Rock Kalmunai Sunday, 28 August 2011 07:37 PM
சிராஜ் கிரீஸ் மனிதனை உரிய ஆதாரத்துடன் தருவது பிறகு பார்ப்போம் முதல்ல நீங்க ஊர் வந்து சேருங்க .... ஊர்ல என்ன நடக்குதுண்டு வந்து பாருங்க ...கிரீஸ் மனிதன உரிய ஆதரத்தோட தந்தா மட்டும் என்னத்த கிழிப்பாங் உங்க அரசியல்வாதிகள் ??? சிவப்பு சால்வைக்கு வக்காலத்து வாங்குவாங்க.
Reply : 0 0
deenmohamed Sunday, 28 August 2011 07:58 PM
வீர வசனம் பேசினா மட்டும் போதாது இவிய ஒன்று கிலிக்கமாட்டாங்க. இப்படித்தான் கதிரைய சூடாக்கிட்டு இருப்பாங்க. ஒரு அவிருத்தியும் செய்யவும் மாட்டாங்க செய்யவும் விடமாட்டாங்க. வேறு யாராவது இச் சபையை கைப்பற்றிதான் கல்முனை மக்களுக்கு விமோர்சனம் கிடைக்கும்.
Reply : 0 0
Thariq Niyas Sunday, 28 August 2011 10:30 PM
இம்முறை மாநகர சபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்ற வேண்டும். அப்போதான் நம்ம அரசியல் வாதிகளுக்கு ரோசம் பிடிக்கும்.
Reply : 0 0
Maha SMT Sunday, 28 August 2011 11:40 PM
நம்ம அரசியல்வாதிகள் திருந்துவது கொஞ்சம் கஷ்டம் ....அல்லாஹ்தான் எம்மைக் காப்பாற்ற வேண்டும்.
Reply : 0 0
siraj Monday, 29 August 2011 06:39 AM
தாரிக், நியாஸ் கொஞ்சம் அப்படித்தான் பிறகு நல்லாபேசுவார். அரசியல் வாதிகளுக்கு ரோசம் பிக்குதோ இல்லையோ மக்களுக்கு என்னமோ பிடிக்கும் எனவே யோசித்து சரியான அரசியல்வாதிக்கு வாக்களித்து மேயராக்குவோம். ஆனால் அவரு நம்ம மஜீத்துக்காக்காதான் மேயருக்கு தகுதியானவர் கட்சிக்காக பல உயிர்களைக் கொடுத்தவர் நல்லவர் வல்லவர்.
Reply : 0 0
amn Wednesday, 07 September 2011 01:09 AM
உங்கள் மனசு அவர்களுக்கு சார்பாகத்தானே இருக்குது, அப்புறம் ஏன் கவலைபடுகுறீங்க...?
Reply : 0 0
samrana Saturday, 27 August 2011 04:33 AM
கல்முனையில் சிறிய கிராமங்களான நற்பிட்டிமுனை, இஸ்லாமாபாத் கிராமங்கள் போராளிகள் நிறைந்த கிராமம் ஆனால் அந்த கிராமம் இரண்டுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது நற்பிட்டிமுனை தௌபீக் மண் கவ்வுவார். மற்றவரும் அறிமுகம் இல்லாதவர் யு.என்பி நபாருக்குதான் அதிஸ்டம்
Reply : 0 0
ஹில்முஸாத் Friday, 26 August 2011 09:39 PM
எங்களுக்குத்தானே தெரியும் இதுக்கு மல்லுக்கட்டின மல்லு... முதுகெலும்பற்ற....தலைமைகள்
Reply : 0 0
Maaim Friday, 26 August 2011 10:15 PM
No much priority to Sainthamaruthu by the Kalmunai MC, only they wants to take tex from this area. So its better just ignoring this election to show our dislike.
Reply : 0 0
Anwer Noushard Friday, 26 August 2011 10:33 PM
சரியான நாடகம் கல்முனை மக்களை மீண்டும் ஒருதரம் முட்டாள்களாக்கும் முயற்சி. ஏன் எதிர்கிறார்கள் என்று கேளுங்களேன்.... உருப்படியா ஒரு விடை வந்தா ..... அது நம்ம ஸ்ரீ.ல.மு.கா வின் உண்மையான போக்கு என விளங்கலாம். இலங்கை முஸ்லிம்களை எல்லா நாளும் முட்டாளாக்க முடியாது.
Reply : 0 0
Roomy Friday, 26 August 2011 11:03 PM
கிரீஸ் பூதத்தினை பற்றி ஒரு வார்த்தை பேச தவறிய இவர்கள் எந்த முகத்தோடு மக்களிடம் .....?
Reply : 0 0
Rozan Friday, 26 August 2011 11:26 PM
சாய்ந்தமருது மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் ........சாய்ந்தமருது மக்கள் ஒற்றுமை இணை இதில் வெளிக்காட்டவேண்டும் ......
Reply : 0 0
rakkish Saturday, 27 August 2011 12:24 AM
சாய்ந்தமரூது,கல்முனைக்குடி பிரதசே வாதம் நோக்கும் தேர்தல் அல்ல இது... இதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவருக்கும் பாடம் புகட்டவேண்டிய தேர்தல். இதை நீங்கள் புறக்கணித்தாலும் அங்கு பெட்டிகள் நிரப்பப்படும்... நாம் ஒரு சிறந்த சுயேட்சை குழுவிற்கு வாக்களித்து எங்கள் வாக்கினை பயனுள்ளதாக மாற்றலாமே???
Reply : 0 0
Rozan Saturday, 27 August 2011 01:27 AM
ரக்கிஷ், உங்களுட கருத்தினை நான் வரவேற்கிறேன். இது சாய்ந்தமருது பிரதேச வாதம் இல்லை. ஏனெனில் நான் கல்முனைக்குடியை சேர்ந்தவன்.
Reply : 0 0
Rizadh Rock Kalmunai Saturday, 27 August 2011 02:14 AM
கடந்த காலங்களை போன்று எமது மக்கள் இன்னும் முட்டாள்களாக இருப்பார்கள் என்று இன்னும் நினைத்து கொண்டிருக்கிறீரா ??? கிரீஸ் மனிதன் விவகாரத்தில் அவர்களுக்கு சார்பாக நடந்தவர்களுக்கெல்லாம் இத்தேர்தலில் எமது மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் .....
Reply : 0 0
samrana Saturday, 27 August 2011 02:33 AM
கல்முனையில் சிறிய கிராமங்களான நற்பிட்டிமுனை, இஸ்லாமாபாத் கிராமங்கள் போராளிகள் நிறைந்த கிராமம் ஆனால் அந்த கிராமம் இரண்டுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது நற்பிட்டிமுனை தௌபீக் மண் கவ்வுவார் மற்றவரும் அறிமுகம் இல்லாதவர் யு.என்பி நபாருக்குதான் அதிஸ்டம்.
Reply : 0 0
Sabry Friday, 26 August 2011 08:58 PM
சாய்ந்தமருது மக்கள் என்ன செய்ய போகிறார்கள் ?
Reply : 0 0
siraj Saturday, 27 August 2011 04:56 AM
இங்கு மனித தன்மையுடன் யாரும் கொமண்ட் பண்ணியதாக விளங்கவில்லை. ஆனால் உண்மை கல்முனையில் யார் எத்தனை காலில் நின்றாலும் முஸ்லீம் காங்கிரஸ் மேயராவது முடிவான உண்மை.
இதில் அவரு மன்கவ்வுவார், இவரு இப்படி இருப்பார் என்பது எல்லாம் தேவை இல்லாத பேச்சு. ஆனால் சாய்ந்தமருதுக்கு இம்முறை மேயர் நிச்சயமாக நம்பலாம். ஏன் என்றால் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் மாகான சபை உறுப்பினருமான முழக்கம் மஜீட் வேட்பாளராக இருக்கும் போது நிச்சயமாக மக்கள் ஒற்றுமையுடன் வாக்களிப்பார்கள் எனவே ஒற்றுமையே எமது பலம்.
Reply : 0 0
siraj Saturday, 27 August 2011 04:58 AM
சும்மா அநியாயமாக சுயேட்சையில் காசைக்கட்டி முஸ்லீம் காங்கிரசுக்கு கிடைக்க இருக்கும் வாக்குகளை வீணடிக்க நினைத்தவர்களுக்கு பணம் மட்டும் நஸ்டமாகும் வேறு ஒரு பிரயோசனமும் இல்லை. இது தேவையா சுயேட்சை..........
Reply : 0 0
siraj Saturday, 27 August 2011 05:00 AM
மர்ம மனிதனுக்கு குரல் கொடுக்காதவர்கள் இங்கு வரவேண்டாம் என்று கூறியிருக்கும் தோழரே, நீர் கிறீஸ் மனிதனை கண்டாயா? சும்மா அது இது என்று உளம்பாமல் இருக்கனும். யாரு யாருக்கு குரள் கொடுக்க. சுபைர் சொல்லியிருக்கார்.
சோமவன்சயை கைது செய்தால் மர்ம மனிதன் வரமாட்டானாம் அதனை செய்யலாமா????/// சும்மா பேசக்கூடாது யோசிக்க வேண்டும். வாய்க்கும் கைக்கும் வேலை இல்லை என்றால் இப்படித்தான் எழுதுவீர்களா?
Reply : 0 0
siraj Saturday, 27 August 2011 05:01 AM
நான் போட்டிருக்கும் கொமண்ட் எல்லாத்தையும் அப்படியே போடுங்க தோழரே தயவு செய்து.
Reply : 0 0
meenavan Saturday, 27 August 2011 05:41 AM
பிரதேசவாதத்தின் உச்ச கட்ட நிலையையே கருத்துகள் குறிக்கின்றன.ஈமானிய சகோதரர்களே மானுடன் வாழும் இடமெல்லாம் நம் தேசமாக அமைய முயற்சி செய்யுங்கள்.
Reply : 0 0
Rozan Saturday, 27 August 2011 06:50 AM
சிராஜ், வெளிநாட்டிலிருந்து கமெண்ட் ஏழுதி இருக்கிறிங்களா? ஏனெனில் மர்ம மனிதனால் பாதிக்கப்பட்ட ஆறுக்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் சிகிச்சைக்காக அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இருந்தது உங்களுக்கு தெரியாதா? முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர்களும் ஏம்பிகளும் வாய் பேசாமல் இருந்ததும் உங்களுக்கு தெரியாதா?
Reply : 0 0
ruzny Saturday, 27 August 2011 08:14 AM
மக்களுக்கு நன்மை செய்யகூடிய ஏதாவது திட்டம் உள்ளேதா ? கட்சியிடம் எல்லாம் ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦.
Reply : 0 0
ruzny Saturday, 27 August 2011 08:15 AM
மக்களுக்கு நன்மை செய்யகூடிய எதாவது திட்டம் உள்ளேதா ? கட்சியிடம் எல்லாம் ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦.
Reply : 0 0
oor kuruvi Saturday, 27 August 2011 11:16 AM
அன்புச் சகோதரர்களே சாக்கடை அரசியலுக்காக அனாவசிய சண்டை எதற்கு? நீதி வெல்லும் .இறைவன் எப்பொழுதும் உண்மையாலனின் பக்கம் இருப்பான். இந்த அரசியல் எல்லாம் செப்டம்பர் எட்டாம் திகதியுடன் முடிந்திடும் அதற்கு பின்னர் ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
51 minute ago
55 minute ago
2 hours ago