2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

நிந்தவூரில் நெல் களஞ்சியசாலை திறப்பு

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

விவசாயிகளின் நலன்கருதி நிந்தவூரில் இன்று திங்கட்கிழமை நெல் கொள்வனவு களஞ்சியசாலை திறக்கப்பட்டு சிறுபோக நெல் கொள்வனவு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிந்தவூர் கமநல சேவை மத்திய நிலையத்திற்கு உட்பட்ட 7,182 ஏக்கர் காணியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லில் ஒரு விவசாயிடம் இருந்து 2,500 கிலோ கிராம் வீதம் நெல்லை கூட்டுறவு உள்நாட்டு வர்த்தக அமைச்சின் கீழ் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்வதற்கான விண்ணப்பங்களை வழங்கல், நெல்லை கொள்வனவு செய்தல் மற்றும் நெல்லை களஞ்சியப்படுத்த களஞ்சியசாலையை திறந்து வைத்தல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிந்தவூர் கமநல சேவை மத்திய நிலையத்தின் கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ.ஹார்லிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சீ.பைசால் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


You May Also Like

  Comments - 0

  • thasleem Tuesday, 30 August 2011 12:00 AM

    எமது ஊரில் இவ்வாறான விடயங்கள் மேலும் விருத்தி அடைய முயற்சிப்போம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7