Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 02 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
வேள்ட்விஷன் லங்கா நிறுவனத்தின் நாவிதன்வெளி பிராந்திய அபிவிருத்தி திட்டத்தினூடாக செயற்படுத்தப்படும் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் 'கலையும் நாமும்' எனும் தொனிப்பொருளில் சமாதானத்திற்கான கலை நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நாவிதன்வெளி நாமகள் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
வேள்ட்விஷன் லங்கா நிறுவனத்தின் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் நாவிதன்வெளி பிராந்திய அபிவிருத்தி திட்ட இணைப்பாளர் கே.லிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் பிரதம அதிதியாகவும் நாவிதன்வெளி பிரதேசசபைத் தவிசாளர் ரி.கலையரசன், சவளக்கடை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி கருணாதிலக, வேள்ட் விஷன் லங்கா நிறுவனத்தின் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் நாவிதன்வெளி பிராந்திய அபிவிருத்தி திட்ட முகாமையாளர் லலிந்திர ரணசிங்க ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் நாவிதன்வெளி பிரதேச செயலக பணிக்குழு உதவியாளர் எஸ்.பகீரதன், பிரதேச இளைஞர் சேவை அதிகாரி கே.சுந்தரலிங்கம், வேள்ட்விஷன் லங்கா நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், அதிபர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இளைஞர், சமூக அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்கள் ஆகியோர்கள் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலை, கலாசார நிகழ்சிகளும் இடம்பெற்றதோடு, நாவிதன்வெளி பிரதேசத்தில் வறிய நிலையிலுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 18 பேருக்கு தையல் இயந்திரத்திற்கான பத்திரங்களும் வழங்கப்பட்டன.
Nafeel Saturday, 03 September 2011 03:33 PM
சமாதானத்தை கட்டி எழுப்பும் வேலைத்திட்டத்துக்கு மக்கள் மத்தியில் ஜனரஞ்சகமான ஒருவர் அதிதியாக வருவதே விரும்பத்தக்கது.
Reply : 0 0
Majeed Sunday, 04 September 2011 11:48 AM
இப்போது Mr. மன்சூர் நல்ல திருத்தம். மாகாண சபை உறுப்பினரையும் கிட்ட சென்று நலம் விசாரிக்கிறார். பெரியவரிடம் (முன்னை நாள்) கற்ற பாடம் போல.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
52 minute ago
56 minute ago
2 hours ago