Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 05 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
நாடு முழுவதிலுமுள்ள 52 சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்களையும் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பரீட்சித்து பார்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய ஊடக பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
குறிப்பிடப்பட்ட நேரத்தில் இக்கோபுரங்களில் இருந்து இடைக்கிடையே எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்படும். இவ்வேளையில் மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை என அவர் குறிப்பிட்டார்.
இதுவரை காலமும் முன்னெச்சரிக்கை மையங்கள் குரல் பதிவுகளை கொண்டே இயங்கிவந்தது. எனினும் புதிய தொழில்நுட்பத்திற்கினங்க வீ.எச்.எப் அலைவரிசையை பயன்படுத்தி நாளை நேரடி ஒலிபரப்பை பரிசோதித்து பார்க்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவில் முன்னெச்சரிக்கை நிலையம் 9 மணிக்கும், காரைதீவு மற்றும் நிந்தவூர் முன்னெச்சரிக்கை நிலையங்கள் காலை 11 ணிக்கும் பொத்துவில் முன்னெச்சரிக்கை நிலையம் நண்பகல் 1 pக்கும் கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது முன்னெச்சரிக்கை நிலையங்கள் மாலை 3.00 மணிக்கும் பரிசீலிக்கப்படவுள்ளதாக அம்பா மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இணைப்பாளர் சியாத்து தெரிவித்தார்.
Maha SMT Tuesday, 06 September 2011 04:38 PM
முன்னெச்சரிக்கை நிலையத்தை பரிசீலிக்கும் முன்னர் பொது மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் கொடுத்தால் நல்லது .... இல்லை என்றால் பொது மக்கள் ஓட்டம் பிடித்து விடுவார்கள் ..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
53 minute ago
57 minute ago
2 hours ago