Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 06 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்திற்கு எதிரான அடையாள உண்ணாவிரதப் போரட்டம் முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை தேர்தல் வேட்பாளருமான ஏ.எம்.றியாஸின் தலையீட்டினையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை மாலை முடிவுக்கு கொண்வரப்பட்டுள்ளது.
உண்ணாவிரத போரட்டம் இடம்பெற்ற கல்முனை, இஸ்லாமாபாத் பிரதேசத்திற்கு ஏ.எம்.றியாஸ் இன்று செவ்வாய்க்கிழமை மாலை விஜயம் செய்தார்.
அதன்போது அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்த அவர், இது தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுடன் தொடர்பு கொண்டு அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றித்தருவதாக உறுதியளித்தார்.
இதனையடுத்து உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு முன்னாள் மாநகர சபை உறுப்பினர் றியாஸ் குளிர்பானத்தை வழங்கி உண்ணாவிரதத்தை கைவிட செய்தார்.
இதேவேளை, போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு பல கட்சிகளின் முக்கியஸ்த்தர்கள் வியஜம் செய்த போது தேர்தலில் தமக்கு வாக்களித்தால் மாத்திரம் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக தெரிவித்துள்ளனர்.
இதன் பின் போராட்டக்காரர்களில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 29 வருடங்களாக நாங்கள் எங்களுடைய உயிரை பணயம் வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்காக பாடுபட்டோம்.
ஆனால், அக்கட்சியின் தலைமைத்துவம் சரியான முடிவுகளை எடுக்க தவறி வருகிறது. இந்த சிறிய தேர்தலில் சிறிய ஊருக்குக் கூட ஒரு வேட்பாளரைப் போடுவதில் உறுதியான முடிவு எடுக்க முடியாத தலைவர் எப்படி எதிர்காலத்தில் இந்த நாட்டு முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கான முடிவை எடுக்க போகிறார்? ஏன அவர் கேள்வி எழுப்பினார்.
கல்முனை மாநகர சபை தேர்தலில் இஸ்லாமாபாத் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் வேட்பாளர் நிறுத்தப்பட்டாமையினை கண்டித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்திற்கு எதிராக இஸ்லாமாபாத் பிரதேசத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.
Thariq Niyas Wednesday, 07 September 2011 08:34 PM
சரி இந்த உண்ணாவிரதம் கட்சி தலைமைக்கு எதிராகவா......... இல்லை ஒரு சிறந்த விளம்பரத்துக்காகவா..... இன்னமும் முட்டாள்கள் என்று நினைத்திருக்கிறார்கள் போலும்..
Reply : 0 0
siraj Friday, 09 September 2011 08:30 PM
யாருப்பா றியாஸ்? அப்படி ஒருவர் யாருக்கும் தெரியாதே.
Reply : 0 0
siraj Friday, 09 September 2011 06:55 AM
புரியுதுப்பா எல்லாம் யாருக்கு யார் பேசுறது என்று. ஆனால் தலைவன் நல்லதே நினைப்பான். நல்லதே செய்வான்.
Reply : 0 0
alm faizar Thursday, 08 September 2011 07:39 PM
எல்லாம் நல்ல இருக்கு கா கா கா ..........
Reply : 0 0
anas Thursday, 08 September 2011 07:02 PM
இவர்கள் தேவைக்காக மக்களை பகடைக்காக பயன்படுத்தக்கூடாது வேட்பாளர் இப்போது இல்லையேல் எப்போதாவது ஆனால் எமது அரசியல் கட்சியை ஒருபோதும் காட்டிக்கொடுக்கக் கூடாது.
Reply : 0 0
Nusky Thursday, 08 September 2011 06:40 AM
இந்த தேர்தலை P T ஜமாளுக்கான அல்லது ஊர் வாதம் பேசுகின்ற தேர்தலாக கருதாமல் முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவத்துக்கு எதிரான தேர்தலாகவும் எமது தொகுதியை சுயலாபங்கள் கருதாத தன்னம்பிக்கை உள்ள சுறுசுறுப்பான தலைமையிடம் கொடுக்கப்படவேண்டும்.
Reply : 0 0
samrana Thursday, 08 September 2011 06:05 AM
தலைவர் வரப் போவதும் இல்லை, நமது பிரச்சினைகள் தீரப் போவதும் இல்லை . இன்னும் சிறிது நாளில் ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்து வந்தானுடன் வருவார் நமக்கெல்லாம் பம்மாத்து காட்ட.
Reply : 0 0
jaleeljawa Thursday, 08 September 2011 05:31 AM
kalmunai சரியான ஊருக்கு துணிவான அரசியல் riyas
Reply : 0 0
siraj Thursday, 08 September 2011 04:41 AM
உண்ணாவிரதம் இல்லை . பிள்ளையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டின நாடகம் போனால் போகட்டும் போடா. அங்கு பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
எம்பிட தம்பிய போடலன்னு அவர்ர நாடகம் வேறு இது வேறா?
Reply : 0 0
kulathooran Wednesday, 07 September 2011 05:32 AM
ஊரில் எது நடந்தாலும் களத்தில் நிற்பவர் ரியாஸ் தான்,தொகுதி எம்.பி.யை காண்பது அரிதாகவே உள்ளது.
Reply : 0 0
aj Wednesday, 07 September 2011 06:41 PM
கனி கிடைத்ததா? கேட்டது ஓன்று கிடைத்தது இன்னுமொன்று.
Reply : 0 0
Kavi Wednesday, 07 September 2011 04:39 PM
நாடகம் இனிதே நடந்தது. நல்லா நடிக்கிறாங்கையா.
Reply : 0 0
Mohammed Rizvi Wednesday, 07 September 2011 04:31 PM
எல்லா ....................................லாம் அவன் செயல் (நான் நினைக்கிறேன் இது குளிர்பானம் கொடுத்தவரின் தயாரிப்போ...... எதுக்கும் கொஞ்சம் அவதானமாக இருங்க மக்களே.
Reply : 0 0
iqbal Wednesday, 07 September 2011 02:22 PM
ஜமால் உண்ணா விரதம் இருந்தது தலைவர் வரவேண்டும் என்று . ஆனால் ரியாஸ் வந்தால் எப்படி உண்ணாவிரதம் முடியும் ?
Reply : 0 0
samrana Wednesday, 07 September 2011 11:45 AM
நுச்கி, இலகுவாக எழுதி விடலாம். இஸ்லாமாபாத் மக்களுகென்று ஒரு பிரதிநிதி பெயருக்காவது இருக்க வேண்டும் . மற்றவர்களை நம்பி இருக்க முடியாது. இந்த விடயத்தில் ரவுப் ஹக்கீம் நல்ல முடிவு எடுக்க வேண்டும் . சிறிய கிராமம் என்பதற்காக இலகுவாக ஒதுக்கி விட முடியாது.
ஜமாளுக்கு இடம் கிடைக்கவில்லை என்பதை விட ஒரு கிராமத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விட்டது என்பதுதான் கவலை. இதே போன்றுதான் மூன்று உறுப்பினர்கள் கொண்டிருந்த மற்றுமொரு சிறிய கிராமமான நட்பிட்டிமுனைக்கு அதிகமான வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர் அங்கும்?
Reply : 0 0
sahabdeen Wednesday, 07 September 2011 09:30 AM
ஊருக்கு எம்பி இப்பொழுது அவர் வரமாட்டார். அடுத்த தேர்தலுக்கே அவர் ஊருக்கு வருவார். உங்களுக்கு ஏதாவது தேவை என்றால் தேடித்தான் போகனும்.
Reply : 0 0
Nusky Wednesday, 07 September 2011 06:09 AM
ஆறு நோன்பின் இறுதி நாளில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதம் "இப்தாருடன்" இனிதே நிறைவுற்றது..." இப்படி நியூஸ் வந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்...என்ன நாடகம்...!! யாரு மச்சான் டைரக்டர்...???
Reply : 0 0
mi rizath Wednesday, 07 September 2011 05:50 AM
ஊர் எம்பி எப்பொழுது ஊர் வருவரோ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago