Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 08 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை கல்முனைப் பிரதேசத்துக்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கு கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் புதிய காரியாலயத்தினை அமைச்சர் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்ததோடு, அங்கு இடம்பெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
இதன்போது, பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அமைச்சரால் இலவச கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மேற்படி திறப்பு விழா நிகழ்வில், உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.சுபைர், எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.ஏ.அப்துல் மஜீத் மற்றும் வைத்திய அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலும் புதிய கட்டிடமொன்றினைத் திறந்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர் கலந்து கொள்ளவுள்ளார்.
roomy Friday, 09 September 2011 04:08 AM
ஊடகங்கள் அமைச்சர்களின் கை பொம்மைகளா?
Reply : 0 0
rozan Friday, 09 September 2011 05:12 AM
இதுமட்டும் அக்கறைபற்றுக்கு கொண்டு போக முடியாமல் போகிவிட்டது ஏன்ற வருத்தமா? முயற்சி செய்தால் முடியும்.?
Reply : 0 0
kulathooran Friday, 09 September 2011 12:18 PM
rozan அப்படி சொல்ல வேணாம்,ஹரீஸ் தம்பியும் அவரும்,நல்ல கல கலப்பாக பேசிக்கொண்டார்கள். இறுதிவரை ஹரீஸ் தம்பி நின்று அவரை முஸாபஹா செய்து அனுப்பினார்.
Reply : 0 0
deenmohamed Friday, 09 September 2011 02:40 PM
ennada codumai inku ealorum ore mEdail amanthu irukkiraarcal. theruthel vanthal aaluku aal potti eana intha ulacam ..........
Reply : 0 0
bis Friday, 09 September 2011 02:53 PM
ஒரே கட்டிடத்தை எத்தனை தடவைகள் திறந்து வைப்பது?
Reply : 0 0
rozan Friday, 09 September 2011 11:10 PM
kulathoorann ஹரிஸ் தம்பி முசாபா செய்வது கல்முனை மண்ணின் மகிமை......கல்முனைக்கு ஆப்படிப்பது அவரின் மகிமை......
Reply : 0 0
kulathooran Saturday, 10 September 2011 02:18 AM
rozan ஆடி கறக்கும் பசுவை ஆடி கறக்கவேனும் ,பாடி கறக்கும் பசுவை பாடி கறக்கவேனும் என்று கூறுவர். இரண்டுமே நம்ம எம்.பி.க்கு பூச்சியம். இதனால் ஆப்படிப்பவர். ஆப்பு என்ன அதற்கு மேலும் செல்வர். நல்ல உ+ ம் பள்ளிவாசல் சந்தையை ஊடறுத்து செல்லும் பாலம்.
Reply : 0 0
rozan Saturday, 10 September 2011 12:25 PM
குலதூரன்...ஒரு முழு மந்திரி பாலம் போடுவதை .....ஜனாதிபதியால் தடுக்க முடியும் ஏன்றால் உண்மை... தேர்தலில் தோல்வி கொண்ட ஒரு நபரால் தடுக்க முடிந்தது ஏன்ற நொண்டிச் சாட்டை நம்பும் அளவுக்கு கல்முனை மக்கள் முட்டாள்களா?
Reply : 0 0
Nusky Sunday, 11 September 2011 06:44 AM
இந்த முறை "அர மந்திரியாகும்" அவசரத்தில் அடுத்த முறை பாராளுமன்ற தேர்தலில் MP யாகும் விடையத்தை மறந்துவிட்டார்.. அனுபவப் பாடமும் பயனில்லாமல் போயிட்டு... யாரோட போயி சேந்து இருக்கார் பாருங்கோ..!!! கல்முனை தொகுதியில் அடுத்த முறை MP யாகும் சந்தர்ப்பத்தை காரியப்பருக்கு விட்டு கொடுத்திருக்காரு போல...அதுவும் நல்ல முடிவுதான்..!!! ஹி..ஹி ..ஹி
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
46 minute ago
49 minute ago
51 minute ago