Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 10 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை மாநகரத்தை அபிவிருத்தி செய்ய அமெரிக்கா அரசு தயாராக உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்ரீசியா ஏ. புட்டேனிஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொது செயலாளர் நாயகமும் சிரேஷ்ட சட்டத்தரணியும் அக்கட்சியின் கல்முனை மாநகர சபைக்கான முதன்மை வேட்பாளருமான நிசாம் காரியப்பருக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்ரீசியா ஏ. புட்டேனிஸுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று சனிக்கிழiமை மட்டக்களப்பு வாடி வீட்டில் இடம்பெற்றது.
இதன்போதே அமெரிக்க தூதுவர் பற்ரீசியா இந்த உறுதிமொழியை சட்டத்தரணி நிசாம் காரியப்பரிடம் வழங்கியுள்ளார்.
கல்முனை மாநகர சபை தேர்தலின் பின் நிசாம் காரியப்பரினால் கல்முனை மாநகர அபிவிருத்தி தொடர்பாக முன்வைக்கும் அனைத்து திட்டங்களுக்கும் அமெரிக்கா அரசும் அமெரிக்க மக்களும் உதவுவர் என அவர் குறிப்பிட்டார்.
எனினும், கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் காலம் என்பதனால் எந்தவித உதவிகளையும் தற்போது வழங்க முடியாது என தூதுவர் பற்ரீசியா தெரிவித்துள்ளார்.
யுத்தம் மற்றும் சுனாமி ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் முகங்கொடுக்கும் சவால்கள் பற்றி அமெரிக்க தூதுவருக்கு சட்டத்தரணி நிசாம் காரியப்பர் விளக்கியதுடன் கல்முனை மாநக மக்களின் உடனடி தேவைகள்; குறித்தும் விளக்கியுள்ளார்.
அத்துடன் சுனாமியால் பாதிக்கப்பட்டு கல்முனை மேற்கு இறவெளி கண்டம். சாய்ந்தமாருது மேற்கு வட்டை பெலிவேரியன் கிராமம், மருதமுனை மேற்கு பிரான்ஸ் சிட்டி மற்றும் இஸ்லாமாபாத் குடியேற்ற திட்டங்களிலுள்ள குடியிருப்பவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின் போது அமெரிக்க தூதுவரிடம் விரிவாக எடுத்துக்காட்டப்பட்டது.
கல்முனை மாநகர எல்லைக்குள் சிறந்த முறையிலான வடிகாலமைப்பு வசதியினை சிறந்த முறையில் மேற்கொள்வதற்காக ஆழமாக தோண்டப்பட்ட வாவியொன்றை அமைப்பதற்கு உதவுமாறு நிசாம் காரியப்பர் தூதுவர் பற்ரீசியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு சாதகமான பதிலளித்த அமெரிக்க தூதுவர் பற்ரீசியா ஏ. புட்டின் யுத்தத்திற்கு பின்னரான நிலையில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, பாதுகாப்பு போன்ற பல விடயங்களை கேட்டறிந்ததாக சட்டத்தரணி நிஸாம் காரியப்பார் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் காத்தான் குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டல் மற்றும் அபிவிருத்திக்குமான அமைப்பின் பணிப்பாளருமான சல்மா ஹம்ஸாவும் கலந்துகொண்டார்.
Rakkish.. Sunday, 11 September 2011 01:54 AM
பாராட்டுக்கள்... எப்படியோ கல்முனை மா நகர சபைக்குள்ளும் அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது என்பதை உணர்ந்து கொண்ட உங்கள் சொல் செயல் வடிவம் பெற வாழ்த்துக்கள்.. இதற்கு உதவிய தேர்தலுக்கு தான் நன்றி சொல்லணும் ..
Reply : 0 0
vaasahan Sunday, 11 September 2011 02:00 AM
விளையும் பயிர் முளையில் தெரியும்.
Reply : 0 0
Nusky Sunday, 11 September 2011 04:08 AM
காரியப்பரின் ஆரம்பம் நல்லாத்தான் இருக்கு... மொழிப் பிரச்சினை இருக்காது. அதுதான் அவர PLUS POINT...இவருக்கு ஓடி ஒழிகிறதுக்கு ஒருபோதும் அவசியம் இருக்காது...
Reply : 0 0
siraj Sunday, 11 September 2011 06:58 AM
கல்முனைக்கு மட்டும்தான் அமெரிக்கா உதவுவாங்களாமா??????????
Reply : 0 0
kl kalanthar Sunday, 11 September 2011 05:01 PM
இப்போதே அமெரிக்கா நிசாமை உண்மையான மேயராக கண்டுவிட்டது.
Reply : 0 0
abdul mohamed Monday, 12 September 2011 03:20 AM
எதையோ அறுப்பதற்கு முதல் எதையோ அறுத்த கதை மாதிரி.
Reply : 0 0
hismy Tuesday, 13 September 2011 06:39 PM
காரியப்பர் நல்ல மனிதர்
Reply : 0 0
jesniyabanu Wednesday, 14 September 2011 04:00 AM
muthal மேயர் ஆகுவதற்கு valiyaip parunka.
Reply : 0 0
Nusky Wednesday, 14 September 2011 04:28 PM
Jesniya, naanga thaan vote pottu awara mayor Aakkanum.... Avaru aakirathu yenda naalu adiyaatkal erukkanum, illati kai niraiye kaasi irukkanum, illati oor MP da support irukkanum... athuwum illati iwar UPFA le election kettu iruntha "awanga" aakkuwaanga.... Purinchi irukkumnu ninaikiran... nallawangalukku Kaalam illa ma Banu..
Reply : 0 0
Shifan Wednesday, 14 September 2011 05:14 PM
காரியப்பர் மேயராக வெற்றி பெறுவார் அது நிச்சயம்.
Reply : 0 0
rozan Thursday, 15 September 2011 12:06 AM
அமெரிக்க பஞ்சதில இருக்கு..... அவங்களுக்கு யார் உதவகிறது என்று இருக்கு.....தென் கொரியா இங்கிலீஷ் ஆசிரியர் தொழில் வழங்குது.....இப்படி இருக்க இது ஒரு வெறும் பொய்.....ஏன்னால் இப்ப வாக்குறுதி தரமுடியாது ஏன்பதுதான் உண்மை....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
43 minute ago
46 minute ago
48 minute ago