Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 11 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
பாரிய அபிவிருத்தி காணாத கல்முனை மாநகரை கொழும்பு மாநகரைப் போன்று சகல வசதிகளுமுடைய மாநகராக அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம். கல்முனை வாழ் மக்களின் இந்த நீண்டநாள் கனவை நனவாக்க சகலரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் போட்டியிடுபவரும் முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் மருமகனுமான ஏ.சி.யஹியாகான் தெரிவித்தார்.
சாய்ந்தமருது சீபிரிஸ் ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
கல்முனை மாநகரசபையை எங்களிடம் ஒப்படைப்பதன் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் துரித அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும். இதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் எமது கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிசாட் பதியுதீன் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவுள்ளனர்.
கல்முனை மாநகரசபையை கடந்த 11 வருடகாலமாக ஆட்சி செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்களுக்கு எதைச் செய்துள்ளது என்பதை சிந்தித்துப்பாருங்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் இரண்டு மேயர்கள் ஆட்சி செய்தார்கள். அவர்கள் எதனை மக்களுக்கு செய்தார்கள்.
ஒரு சிலர் காடையர்களை தூண்டிவிட்டு எங்களுக்கு கிடைக்கும் வெற்றியை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கெல்லாம் நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை.
கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற கல்முனை நகரம் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் இருந்ததைப் போன்றே தற்போதும் காணப்படுவதுடன், அபிவிருத்தியில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. கல்முனை மாநகரை துரிதமாக அபிவிருத்தி செய்ய பல்வேறு திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம். நாங்கள் வெற்றியடையும் பட்சத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இதற்கு மக்களின் ஆணை தேவை.
எனவே, கல்முனை நகரை கொழும்பு நகர் போன்று அழகான நகரமாக்க சகலரும் கட்சி பேதமின்றி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் எனது முதலாம் இலக்கத்துக்கும் வாக்களிக்க வேண்டும் என்றார்.
Mo...mo...moo Sunday, 11 September 2011 03:43 PM
நீங்க எல்லாம் மக்களுக்கு சேவை செய்யவா தேர்தலில் இரங்கி உள்ளீர்கள்? உங்களுக்கும் உங்கட தலைவருக்கும் அப்படி சமூக பற்று இருந்தால் ஏன் இந்த அபிவிருத்தியை தேர்தல் வருவதற்கு முன்னர் கதைக்கவில்லை?
Reply : 0 0
siraj Sunday, 11 September 2011 06:58 PM
கோவிந்தா கோவிந்தா நல்லா இருக்கு
Reply : 0 0
Thariq Niyas Sunday, 11 September 2011 10:13 PM
கொழும்பு நகரைப் போன்று மக்களை வெளியேற்றி விட்டு அபிவிருத்தி செய்யவா....????
Reply : 0 0
alm faizar Sunday, 11 September 2011 10:38 PM
இப்போதுதான் கல்முனை திருத்த வந்துள்ளார்கள் . அது எங்களுக்கு நல்லாத்தான் இருக்கு....
Reply : 0 0
rakkish. Sunday, 11 September 2011 11:44 PM
முன் இருந்தவர்களும் மக்களுக்கு உருப்படியாக எதுவும் செய்யவில்லை.. நீங்களும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.. செய்து விட்டு நாங்கள் இதை செய்து இருக்கிறோம் என்று சொல்லி மக்களிடம் வாக்கு கேளுங்கள்..அபிவிருத்தி என்ற நிலையில் வீதிகளையும் கட்டடங்களையும் மட்டும் கருதாமல் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு உதவுங்கள்...
Reply : 0 0
meenavan Monday, 12 September 2011 01:10 AM
அரசியலுக்கு வந்தால்,பொய் வாக்குறுதிகள் சகஜம் தானே? ந சமுக உரிமை,விடுதலை என்று சொல்லி வந்தவர்கள் எம்.பி. யானதும் அம்மக்களுக்கு துரோகமிழைத்து அரசுடன் சங்கமித்து, வாய் மூடி மௌனித்து இருக்கும்போது? உங்களால் மாநகர தேர்தல் வெற்றி மூலம் எதைத்தான் பெரிதாக செய்யமுடியும்? மக்கள் ஏமாளிகளாக உள்ளவரை உங்கள் காட்டில் மழை(rain)தான்.
Reply : 0 0
master Monday, 12 September 2011 04:10 AM
போங்கையா வெட்டியா பேசாம.... எதாவது நல்லதா பண்ணுங்க.
Reply : 0 0
rozan Monday, 12 September 2011 05:09 AM
வித்தியாசமா ஏதாவது செய்ங்களன் ......முஸ்லிம் காங்கிரஸ் இணை தாண்டி வெல்லன்னும்னா ......நீங்க கடுமையாக முயற்சிக்க வேணும்...இது வெல்லாம் வேலைக்கு ஆகாது ....
Reply : 0 0
siraj Monday, 12 September 2011 05:19 AM
ஆனால் ஒரு விடயம் உங்க தலைவர் இங்கு இருக்கும் ஒரு ஊருக்கான தலைவரை விட திறமானவர் என்பதில் சந்தோசம். இருந்தாலும் உங்கட பருப்பு இங்கு வேகாது. இப்பவே மூட்டை முடிச்சுளை கட்டிவைத்து எங்காவது போய் இருந்துட்டு பிறகு வாங்க.
Reply : 0 0
ummpa Monday, 12 September 2011 02:17 PM
நாடாளுமன்ற உறுப்பினர் மந்திரிமார் இப்படி சொல்லிகொண்டே போகலாம். இவர்களால் முடியவில்லையாம். நீங்களளெல்லாம் வந்து ! மக்களுக்கு ஒன்றுமே தேவை இல்லை . சொல்லுங்க உங்களின் ஆட்களிடம் கிரீஸ் மனிதனிஞன் தொந்திரவு வேண்டாமென்று. அதுவே போதும் தம்பி ! மாமா எங்கே இருக்கிறார்கள்? கேட்டதாக சொல்லுங்க.
Reply : 0 0
deen Monday, 12 September 2011 09:30 PM
இதற்கு முதல் இவர்கலெல்லாம் முதல் எங்கு போனார்கள் இப்ப மட்டும் வந்து வீராப்பு பேசுகின்றார்கள்.
Reply : 0 0
Nusky Tuesday, 13 September 2011 03:22 AM
சும்மா விடுங்க ஐயா... எமது ஊடக நண்பர்களுக்கு நல்ல சாப்பாடாவது கிடைக்கும்.. !!!
Reply : 0 0
Sam Wednesday, 14 September 2011 11:14 PM
நல்ல பெட்டி
Reply : 0 0
Whistle Blower Friday, 16 September 2011 02:37 AM
ஆஹா , அதுக்கு என்ன !!! நாலு கடா மாடு அறுத்து போடுங்கோ ! உங்களோட நாங்க தேர்தல் நாள் வரை நிப்போம். ஆனா வோட் போடா மாட்டோம். நீங்க சோறு போட தான் சரி .
Reply : 0 0
Rizadh SMT Saturday, 17 September 2011 05:13 PM
ஆளுக்கொரு கட்சியாகி விட்டது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
41 minute ago
49 minute ago
54 minute ago