2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள்

Super User   / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நிருவாகம் மற்றும் வைத்தியர்கள் மீது பிரயோகிக்கப்படும் தேவையற்ற அழுத்தங்களுக்கு எதிராக வைத்தியசாலைக்கு முன்னால் இன்று புதன்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வைத்தியர்கள், தாதியர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு சிலர் தேவையற்ற விதத்தில் அழுத்தங்கள் பிரயோகிக்கின்றனர். இதனால் மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க முடியாதுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களினால் நோயாளிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்தது பாதிக்கப்பட்டவர்களினாலும் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலுக்கு முன்னாள் இன்று ஆர்ப்பாட்டமொன்றும் இடம்பெற்றது.

இதன்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்று தருமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • appleman Wednesday, 14 September 2011 10:58 PM

    குடும்பசண்டையை பெரிதாக்கி அரச ஊழியர்களை கேவலப்படுதாமல் ஒழுங்காக வேலையை பார்க்க விடுங்கள் ....

    Reply : 0       0

    mohamed Wednesday, 14 September 2011 11:00 PM

    பொது மக்களை இறைவன்தான் காக்கணும்.

    Reply : 0       0

    kalmunai uraan Wednesday, 14 September 2011 11:12 PM

    இப்படி இருந்தா எப்படி கல்முனையை அபிவிருத்தி செய்யிற ???

    Reply : 0       0

    hatheek Thursday, 15 September 2011 01:27 AM

    சுகாதார வைத்தியரின் உடனடியான நடவடிக்கைக்கு பாராட்டுக்கள்.

    Reply : 0       0

    ziyath Thursday, 15 September 2011 07:08 PM

    குடும்ப சண்டையில் ஆர்ப்பாட்டம்

    Reply : 0       0

    kabeer Friday, 16 September 2011 02:09 AM

    எல்லோரும் போருக்கு புறப்பட்டாங்க போலிருக்கு. நல்லதே செய்து நன்மையை பெறுவோம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8