Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இன்று புதன்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
திகாமடுல்ல மாவட்ட நாடாறுமன்ற உறுப்பினரும் சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான எச்.எம்.எம்.ஹரிஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதேசத்தில் காணப்படும் குறைபாடுகளை இனங்கணப்பட்டதுடன் பிரதேசத்தின் அத்தியாவசிய தேவைகளான பொது விளையாட்டு மைதானம், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீகுதி வீடமைப்பு திட்டம் மற்றும் உள்ளூர் வீதிகள் புனரமைப்பு போன்ற பல விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டன.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்டீன், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் நெக்டெப் பிரதி திட்டப் பணிப்பாளர் ஐ.எல்.தௌபீக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
jamal Wednesday, 14 September 2011 10:18 PM
ஏதோ கொஞ்சமாவது நடக்கிற வேலையும் நிற்கப்போகுதெண்டு சொல்லுங்க ....
Reply : 0 0
Neebum Wednesday, 14 September 2011 11:11 PM
12 million ரூபாய்களையும் meeting வெச்சே முடிச்சிருவிகள் போல
Reply : 0 0
kalmunai uraan Wednesday, 14 September 2011 11:24 PM
சொந்த வீதியைகூட போடமுடியாத பெரும் தலைவர் இப்ப சாய்ந்தமருதை நாசமாக்க போகின்றார் ...
Reply : 0 0
kulathooran Wednesday, 14 September 2011 11:34 PM
எலும்பிட்டான் அய்யா எலும்பிட்டான் கும்பகர்ணன்.மாநகர தேர்தல் முடிவதற்கு முதலே,இருக்கும் நிதியினை மைதானதிட்க்கு மண்ணை போட்டு மண்ணாக்கி விடுவான்.
Reply : 0 0
rozan Wednesday, 14 September 2011 11:53 PM
தூக்கத்திலிருந்து மீட்டிங்க்காக நேர காலத்தோடு எழும்புகிறார் ....பொறுத்திருந்து பார்ப்போம்....
Reply : 0 0
rakkish.. Thursday, 15 September 2011 12:37 AM
இப்படியோ கூடி கூடி ஆராய்ந்து கொண்டே இருங்க தேர்தல் முடியும் வரை.. அந்த மக்களுக்கு அது போதும்.. அவர்கள் நிச்சயம் உங்களுக்கு தான் வாக்களிப்பார்கள்..இது என்ன புதுசா??
Reply : 0 0
majeed Thursday, 15 September 2011 02:33 AM
என்னய்யா ஒரே meeting மயமாக இருக்கு - மாயமென்ன. இப்பதான் paper ல போடுறாங்களா?
Reply : 0 0
mca fareed Thursday, 15 September 2011 03:19 AM
அலிபாபாவும்... வசனம் மறந்து போய்விட்டது யாராவது வந்து முடித்துடுங்கப்பா, இன்னும் ஒரு வட்டமேசைபோட்டு,
Reply : 0 0
harees Thursday, 15 September 2011 04:09 AM
இதுக்கொரு உட இதுக்கொரு நட........
ஒன்னும் நடக்காது.......
Reply : 0 0
Nusky Thursday, 15 September 2011 04:49 AM
"விளக்கு அணையும் போது அதன் கடைசி சுடர் மிகவும் பிரகாசத்தூடு சுடர் விட்டு எரியும்"
Reply : 0 0
razeen Friday, 16 September 2011 10:23 AM
இதக்கு முதல் செய்தது எல்லாம் மீட்டிங் போட்டுதான் செய்தது போல.
Reply : 0 0
uvais.m.s Friday, 16 September 2011 07:03 PM
மீட்டிங் போடுறது எல்லாம் இருக்கட்டும் நீங்கள் ஒரு அபிவிருத்தியும் செயாயாட்டியும் பரவா இல்லை சாய்ந்தருதில் அதிகமாக மக்கள் புழக்கத்தில் உள்ள கரக்கடை வீதியில் உள்ள குப்பைகளை அகற்றி அங்கு உள்ள துர்நாற்றத்தை இல்லாது ஒழியுங்கள். கடற்கரை பக்கம் போகவே முடியவில்லை.
Reply : 0 0
Rizadh SMT Saturday, 17 September 2011 05:03 PM
எப்பதான் சாய்ந்தமருது அபிவிருத்தி பற்றி நினைப்பு வந்திருக்கு ... ஒக்டோபர் 08 க்கு பிறகு மறந்திடும் ..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
49 minute ago
52 minute ago
54 minute ago