Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 18 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார், எஸ்.எம்.எம்.றம்ஸான்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அளிக்கும் வாக்குகள் மஹிந்த ராஜபக்ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசுக்கு வழங்கும் வாக்குகளாகும். மஹிந்த அரசாங்கத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதே முஸ்லிம் காங்கிரஸின் நோக்கமாகுமென ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்க கல்முனை மாநகர சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கல்முனை ஜூம்ஆ பள்ளிவாசல் முன்பாக நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
"முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்து அரசாங்கத்துடன் இணைந்தது. இணைந்து ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் முஸ்லிம் மக்களுக்கு எதனை செய்துள்ளது. அவர்கள் ஏதாவது அபிவிருத்தி திட்டங்களை செய்துள்ளார்களா அல்லது வேலை வாய்ப்புக்கள் பெற்றுக் கொடுத்துள்ளார்களா என்றால் எனக்கு கூறுங்கள். இந்த கல்முனைக்கு அவர்கள் எதனைச் செய்துள்ளார்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்துள்ளதால் முஸ்லிம் மக்களுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் பிரயோசனம் கிடைத்துள்ளது. அநுராபுரத்தில் பள்ளிவாசல் உடைக்கப்பட்டுள்ளது. இதனைப்பற்றி முஸ்லிம் காங்கிரஸ் ஏதாவது கூறியுள்ளதா?
கிறிஸ் மர்ம மனிதர்களினால் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. அதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
கடந்த காலங்களில் எங்களுடைய வாக்குகள் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கட்சியினை ஏமாற்றி விட்டது" என்றார்.
கல்முனை மாநகரசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் றசீட் குறூப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அனோமா கமகே, கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தயா கமகே, மத்திய மாகாணசபை உறுப்பினர் லாபிர் ஹாஜியார், சம்மாநதுறை ஐ.தே.கட்சியின் அமைப்பாளர் ஹஸன் அலி, வேட்பாளர்கள், கட்சியின் ஆதாரவாளர்களும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, கல்முனை, சாய்ந்தமருது, நற்பட்டிமுனை மற்றும் மருதமுனை போன்ற பிரதேசங்களுக்கும் ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்தார். அத்துடன்இ கல்முனை நகரிலுள்ள கடைகள் மற்றும் சந்தை போன்ற பல வியாபார ஸ்தாபனங்களுக்கு சென்ற ரணில் விக்கிரமசிங்கஇ அங்குள்ள பொதுமக்களையும் வர்த்தகர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் சுனாமியினால் பாதிக்கப்பட்ட இடைத்தங்கல் முகாம்களில் வாழும் சாய்ந்தமருது பிரதேச மக்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
rozan Sunday, 18 September 2011 11:19 PM
நோ கமெண்ட்ஸ் ரணில்.....வின் சால்வை.....
Reply : 0 0
Naleem Monday, 19 September 2011 01:25 AM
நீங்களும் முன்னர் கல்முனை சந்தாங்கேனி மைதானத்தில் ரவுப் ஹக்கிமை வாழ்த்தினீர்கள். இப்பொழுது துாற்றுகிறீங்க. நல்லா இருக்கா? முதலில் உங்கட கட்சிப்(வெட் றுாம்) பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்து தலைமையில் இருந்து ஒதுங்குங்க.
Reply : 0 0
meenavan Monday, 19 September 2011 05:56 AM
ரணில் உங்களின் குற்றச்சாட்டு முற்றிலும் சரியே? இருந்தாலும் தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளில் கின்னஸ் சாதனை புரிவதற்கு இந்த தேர்தலும் உங்களுக்கு கை கொடுக்கும்?
Reply : 0 0
Rizadh SMT Monday, 19 September 2011 06:49 PM
ஆமாம், ரணிலின் கருத்து மிக மிக சரியானதே ... முஸ்லிம் காங்கிரஸ் மகிந்தவின் அடிமை ....
Reply : 0 0
haroon Tuesday, 20 September 2011 02:26 AM
நான் முஸ்லிம் காங்கிரஸ் தீவிர போராளி. ஆனால் ரணிலின் கருத்தை வரவேற்கிறேன் உண்மையை உண்மையென மக்கள் உணர வேண்டும்.
Reply : 0 0
Meera Mohideen Tuesday, 20 September 2011 03:46 AM
சரியாக சொல்ல போனால் ரணில் சிறந்த ஆளுமை உடைய தலைவர். ஏன் என்றால் எவ்வளவு தடவை தோல்வி அடைந்தும் தலைவராக இருக்கிறார் .
என் ஆராய்வில் எனக்கு ஹலீம் தான் சரியான மேயோர் ஆக படுது . மற்றோர் தொழிலுக்கு அரசியலுக்கு வந்த மாதிரி படுகுது ,
Reply : 0 0
¾®Í Thursday, 22 September 2011 04:18 AM
முஸ்லிம் காங்கிரஸ் மகிந்தவின் அடிமை என்று ரிசாட் என்னும் ஒருவர் கூறுகிரார். நான் கேட்கிறேன் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு உறுதியான முதுகெலும்புள்ள ஒரு கட்சி. நீர் நினைப்பது போன்று நாலாமடித்து எடுத்துக்கொண்டு வீட்ட போகும் கட்சி அல்ல.
இதற்க்கு முதல் எதிர்கட்சியில் முஸ்லீம் காங்கிரஸ் இருக்கும் போது ரணிலுக்கு அடிமை என்று சொன்ன லூசிக்கூட்டம். இப்ப இப்படி சொல்வது வேடிக்கையாக தெரியுது..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
25 minute ago
31 minute ago
56 minute ago