2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

கல்முனையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 19 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள ஸ்ரீதரவைசித்தி விநாயகர் ஆலயத்திற்கு பின்னாலுள்ள பல்தேவைக்கட்டடத்தில்  இந்தியாவைச் சேர்ந்த சிற்பக் கலைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று திங்கட்கிழமை காலை 7 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஆலயங்களுக்கெல்லாம்  சிற்பங்களை செதுக்கும் இந்தியக், திருச்சி மாவட்டத்தின் தொண்டிக் கிராமத்தைச்; சேர்ந்த சிற்பக்கலைஞரான 'உலக ஆச்சாரியர்'  உ.கருப்பையா (வயது 58) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்  இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த இவர் பல்தேவைக்கட்டடத்தில் சிற்பங்களைச் செதுக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார். அவ்வாறே இன்று திங்கட்கிழமை காலையும் சிற்பங்களை செய்வதற்கான கலவையை கலக்குமாறு தனது பணியாளரிடம் கூறிவிட்டு அறைக் கதவை மூடிக்கொண்ட இவர் நீண்டநேரமாகியும் வெளியில் வராததையடுத்து பணியாளர் கதவைத் திறந்து பார்த்தபோது மின்விசிறியில்  கட்டப்பட்ட கயிற்றில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 இது தொடர்பில் கல்முனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 11

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8