Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 20 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாய்ந்தமருது மேட்டு வட்டை பிரதேசத்திலுள்ள வயல் நிலங்களை நிரப்புவது தொடர்பில் ஆராய்வதற்கு கமநல சேவைகள் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன குழுவொன்றை நியமித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் காணி மற்றும் வன விலங்குகள் அமைச்சின் ஆலோசனை குழுக்கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமில் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளரும் அக்கட்சியின் கல்முனை மாநகர சபை முதன்மை வேட்பாளருமான நிசாம் காரியப்பர் ஆகியோர் இது தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்தே இக்குழு நியமிப்பதற்கான அங்கீகாரத்தை அமைச்சர் வழங்கியுள்ளார்.
இதனடிப்படையில், கமநல சேவைகள் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எச்.முயினுதீன் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏம்.எம்.சலீம் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டது.
கல்முனை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள காணிப் பற்றாக்குறை மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை அமைத்தல் போன்றவற்றிக்காக சுமார் 150 ஏக்கர் மேட்டு வட்டை பிரதேசத்திலுள்ள சதுப்பு நில வயல்கள் மண்ணிட்டு நிரப்பப்பட்டது.
எனினும் காணி ஆணையாளரின் அனுமதியின்றி வயல் நிலங்களை நிரப்புவது சட்டவிரோதம் என தெரிவித்து குறித்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.
இதனால் குறித்த காணிகளை துண்டு துண்டுகளாக கொள்வனவு செய்த சுமார் 2,000 பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அல் - அமானா நலன்புரி அமைப்பு என்ற பெயரில் பாதிக்கப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டனர்.
இதன்போது, இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமில் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளரும் அக்கட்சியின் கல்முனை மாநகர சபை முதன்மை வேட்பாளருமான நிசாம் காரியப்பர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து இன்று இடம்பெற்ற காணி மற்றும் வன விலங்குகள் அமைச்சின் ஆலோசனை குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட இவர்கள், இது தொடர்பில் காணி மற்றும் வன விலங்குகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இதற்கு மேலதிகமாக உற்பத்தி திறனற்ற இந்த செதுப்பு நில வயல்களை நிரப்புவதில் எந்தவித பாதகமுமில்லை எனவும் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த 150 ஏக்கர் காணிகளையும் அமைச்சரவையின் அனுமதியுடன் விவசாய ஆணையாளரால் நிரப்புவதற்கான உத்தரவினை வழங்குவதற்காக இக்குழுவினை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன நியமித்தார்.
சாய்ந்தமருது மேட்டு வயல்களை நிரப்புவது தொடர்பில் கலந்துரையாடப்பட்ட இந்த ஆலோசனை குழுக்கூட்டத்தில் அல் - அமானா நலன்புரி அமைப்பு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago