2025 ஜூன் 11, புதன்கிழமை

இழப்பீடுகள் வழங்கப்படவில்லையென செங்கல் உற்பத்தியாளர்கள் விசனம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 25 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட செங்கல் உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படுமென அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் பல்வேறு தடவைகள் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ள போதும், இதுவரை தமக்கு எந்தவிதமான நஷ்ட ஈடுகளும் கிடைக்கவில்லை என அட்டாளைச்சேனைச்சேனைப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாலமுனை செங்கல் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த வெள்ளத்தின் போது இப்பிரதேசத்தின் செங்கல் உற்பத்தியானது முழுவதுமாகப் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி உற்பத்தியாளர்களில் சிலர் மீண்டும் தமது தொழிலினை ஆரம்பித்துள்ள போதிலும், கடந்த வெள்ளத்தினால் தமது தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து தாம் இன்னும் மீளவில்லை என இவர்கள் கூறுகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் நடைபெறும் கட்டிட நடவடிக்கைகளுக்குத் தேவையான செங்கற்களில் கணிசமானதொரு தொகையினை உற்பத்தி செய்யும் பிரதேசமாக பாலமுனைக் கிராமம் திகழ்கின்றது.

பாலமுனையிலுள்ள செங்கல் வாடிகளில் முன்னர்  நாளொன்றுக்கு சுமார் 50 ஆயிரம் செங்கற்கள் உற்பத்தி செய்யப்பட்டன.  

ஆயினும், வெள்ளத்தின் பின்னர் பலர் தமது செங்கல் உற்பத்தித் தொழிலைக் கைவிட்டுள்ளதால், தற்போது இப்பகுதியில் செங்கல் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.

எனவே, வாக்குறுதி வழங்கியமைக்கிணங்க வெள்ளத்தினால் தமது தொழிலில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நஷ்ட ஈட்டினை வழங்கி வைக்குமாறு இப்பிரதேச அமைச்சர்கள் மற்றும் அதிகாரம் மிக்க அரசியல்வாதிகளிடம் செங்கல் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.    

                                         


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10