Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
A.P.Mathan / 2011 செப்டெம்பர் 28 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதுக்காக அம்பாறை மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்தவர்களில் தன்னுடைய சகோதரரும் உள்ளடங்கி இருந்தமையை அறிந்தவுடன், விருது பெறுவோரைத் தெரிவு செய்யும் குழுவினில் அங்கத்துவம் வகித்த மருதூர் ஏ.மஜீத் - அவ்விடயத்தை உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும் என கிழக்கு மகாண கல்வி மற்றும் கலாசார அமைச்சின் பிரதிச் செயலாளரும், கிழக்கு மாகாண பதில் கல்விப் பணிப்பாளருமான எம்.ஈ.போல் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதுக்காக அம்பாறை மாவட்டத்தில் கவிதைத்துறை சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள அலியார் பீர்முகம்மது எனும் நபரின் சொந்த சகோதரரான மருதூர் ஏ.மஜீத் என்பவர் விருதுகளைப் பெறுவோரைத் தீர்மானிக்கும் தெரிவுக் குழுவில் இடம்பெற்றிருந்தமையினால் இந்தத் தேர்வு குறித்து தமக்குச் சந்தேகமுள்ளதாக அம்பாறை மாவட்டத்தின் மூத்த படைப்பாளிகள் தெவித்துள்ளமை குறித்து கருத்துக் கேட்டபோதே எம்.ஈ.போல் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், இப்படியானதொரு போட்டித் தன்மையுடைய விருதுக்காக விண்ணப்பித்திருந்தவரின் சொந்த சகோதரர் ஒருவர் - விருதுக்குரியவர்களைத் தெரிவு செய்யும் குழுவில் இடம்பெற்றிருந்தமையினை ஏற்றுக்கொள்ள முடியாது என முன் வைக்கப்படும் கருத்தினையும் கிழக்கு மகாண கல்வி மற்றும் கலாசார அமைச்சின் பிரதிச் செயலாளரும், கிழக்கு மாகாண பதில் கல்விப் பணிப்பாளருமான எம்.ஈ.போல் ஏற்றுக் கொண்டார்.
இதேவேளை, இவ்விடயம் குறித்து தான் - உரிய வகையில் ஆராயவுள்ளதாகவும் போல் மேலும் கூறினார்.
neethan Wednesday, 28 September 2011 07:52 PM
ஐயா, கல்வி, கலாசாரம் என்றால் நம் நாட்டில் ஊழல் சகஜமே. இதில் மண்டையை உடைப்பதைவிட, ஒத்திவைக்கப்பட்டுள்ள ஆசிரிய இடமாற்றங்களை நீதமாக செய்வதற்க்கு உரிய நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். புதிய வருட ஆரம்பம் நெருங்கிவருகிறது.
Reply : 0 0
papa Wednesday, 28 September 2011 08:57 PM
மஜீத் உடைய சகோதரன் சிறந்த கவிஞன் ஆக இருக்க முடியாதா?
Reply : 0 0
pasha Wednesday, 28 September 2011 09:18 PM
வேலை இல்லாதவர்கள் கடைசியில் செய்யும் வேலை தான் கவிதை எழுதுவது. இதற்கு ஒரு விருது வேறு.
Reply : 0 0
Riyal A.M Saturday, 01 October 2011 05:21 PM
பாச்சா சரியாக சொன்னீர்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
7 hours ago