Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Kogilavani / 2011 செப்டெம்பர் 28 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
உள்வாரிப் பட்டதாரிகளுக்கான நியமனங்களை துரிதமாக வழங்கக் கோரி, தனித்தனியாகவும், அமைப்புரீதியாகவும் பதிவுத் தபால் கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்றில் மருதமுனை உள்வாரிப் பட்டதாரிகள் இன்று புதன்கிழமை காலை ஈடுபட்டனர்.
இக்கவன ஈர்ப்பு நடவடிக்கையினை மருதமுனை உள்வாரிப் பட்டதாரிகள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இப்பட்டதாரிகள் தமது அமைப்பு சார்பாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் மூன்று கோரிக்கைகளைப் பிரதானப் படுத்தியிருந்தனர்.
'பட்டதாரிகளுக்கான நியமங்களை வழங்கும் போது, உள்வாரிப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்'.
'நீண்ட காலமாக வேலையற்றிருக்கும் பட்டதாரிகளுக்கு பட்டம் பெற்ற ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு, நியமனத்தில் முதன்மை இடம் வழங்கப்படுதல் வேண்டும்'.
பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்கும் போது போட்டிப் பரீட்சைகளைத் தவிர்த்து, நேர்முகப் பரீட்சைகளை மாத்திரம் நடத்தி தொழில் வாய்ப்புகளை வழங்குதல் வேண்டும். என்பவையே மேற்படி மூன்று பிரதான கோரிக்கைகளுமாகும். மருதமுனையில் மாத்திரம் தொழில்வாய்ப்பற்ற 96 உள்வாரிப் பட்டதாரிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
suran Wednesday, 28 September 2011 08:16 PM
சரவணா , நாட்டின் நிலைமை , ஹ ஹ ஹ
Reply : 0 0
pasha Wednesday, 28 September 2011 09:16 PM
தொழில் இல்லாமல் யார் இவர்களை கலியாணம் முடித்து பிள்ளை பெற சொன்னது. அரசாங்கமா இதற்கு பொறுப்பு?
Reply : 0 0
ma azeen Wednesday, 28 September 2011 09:35 PM
நல்ல விடயம்
Reply : 0 0
rizlan Thursday, 29 September 2011 02:32 AM
நடக்கட்டும்.
Reply : 0 0
Riyal A.M Saturday, 01 October 2011 05:17 PM
இதே போன்று எல்லா இடங்களிலும் நடத்த வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
8 hours ago