2025 ஜூன் 11, புதன்கிழமை

அட்டாளைச்சேனையில் 'ஊரைச் சுத்தம் செய்வோம்' வேலைத்திட்டம்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 28 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

சூழலைச் சுத்தம் செய்யும் மாபெரும் நடவடிக்கையொன்று அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது. அட்டாளைச்சேனை பிரதேச சபையுடன் - அக்கரைப்பற்றுப் பொலிஸார், அட்டாளைச்சேனை வர்த்தக சங்கம் ஆகியவை இணைந்து 'ஊரைச் சுத்தம் செய்வோம்' எனும் தலைப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம்.நசீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேசசபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ், அட்டாளைச்சேனைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பறூஸா நக்பர், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஜி.ரஸீன் முகம்மட், வர்த்தக சங்கத் தலைவர் ஏ.ஹக், பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந் நடவடிக்கையின் போது, பிரதேசத்தின் வீதியோரங்களிலிருந்த குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டதோடு, சூழலைச் சுத்தமாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து  பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் துண்டுப் பிரசுரங்களும் அதிகாரிகளால் விநியோகிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0

  • சிறாஜ் Thursday, 29 September 2011 01:00 AM

    ஆஹா இது எப்படி வேலை அட்டாளைச்சேனை தவிசாளர் நசீரும் உறுப்பினர் முனாசும் ஊரைச்சுத்தம் செய்யும் வேலையில் இறங்கிவிட்டார்கள்.
    வாழ்த்துக்கள் உங்கள் பணிக்கு. எங்கே மற்றவர்கள்
    இதற்கு எல்லாரும் உதவி புரிவது சந்தோசம்.

    Reply : 0       0

    IBNU ABOO Thursday, 29 September 2011 03:25 AM

    இப்படி கிழமைகொரு தரம் இவர்கள் கூடி இதை செய்தால் ஊர் எப்போதும் க்லீனாயிருக்கும் . பொது மக்கள் குப்பை போடத்தான் தெரியும். சுத்தம் செய்ய வேறு யாரையோ எதிர்பார்கிறார்கள். ஜப்பானில் ஒவ்வொரு பொது மகனும் நாட்டு சுத்ததிட்கு பொறுப்பு. மருந்துக்கும் எங்கும் குப்பை கிடையாது. ரயில் சாரதிகளின் நாளாந்த கடமையின் இறுதி வேலை ரயில் நிலைய குப்பைகள் சேகரித்து உரிய தாங்கியில் போடுவது. நம்ம நாட்டில் இது வெட்கம். உருப்படுவோமா?

    Reply : 0       0

    சிறாஜ் Friday, 30 September 2011 05:43 AM

    சரியாகச்சொன்னீர்கள் இப்னு அபு. அது சரி இப்னு என்றால் பின்னுரித்து மகன் என்று அர்த்தம். அபூ என்றால் அப்பா என்று அர்த்தம்.
    அப்படின்ன உங்க பெயர் மகன் வாப்பாவா? சிரிப்பா இருக்கே. அப்படி இருக்காது. நீங்க சும்மா தமாசா வைத்திருப்பீர்கள் அப்படித்தானே? எதுக்கு பெயரையும் சரி பாருங்க.

    இல்லாட்டி மகன் வாப்பா என்று எல்லாரும் அழைப்பினம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10