Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 28 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நகர அபிருத்தி அதிகார சபையினால் கொழும்பில் மாநகரத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளை போன்ற செயற்பாடுகள் கல்முனை மாநகரத்திலும் மேற்கொள்ளப்படும் என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்தாhக கல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை மாலை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி நிசாம் காரியப்பர்,
'வெள்ளத்தினால் மூழ்கும் கல்முனை பிரதேசத்தில் சிறந்த முறையிலான வடிகான் அமைப்பை திட்டத்தை நகர அபிவித்தி அதிகார சபை மற்றும் கல்முனை மாநகர சபை ஆகிய இணைந்து தயாரிக்க இதன்போது கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்தார்.
கல்முனை மாநகர மேயராக நான் தெரிவு செய்யப்பட்ட பின்னர் வெளிநாட்டு உதவிகளுடன் கல்முனை மாநகத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிருத்தி நடவடிக்கைகளுக்கும் உதவி வழங்க தயார் எனவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
இதேவேளை, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் நாவலப்பிட்டியில் புதிய நகரம் அமைக்கப்பட்டமை போன்ற ஒரு நகரத்தை கல்முனையில் அமைக்குமாறும் பாதுகாப்பு செயலாளர் ஆலோசனை வழஙகினார்.
இதற்காக வேண்டி கல்முனை மேட்டு வட்டை பிரதேசத்திலுள்ள சதுப்பு நிலத்தை மூட வேண்டும் என தெரிவித்தேன். இதனையடுத்து இதற்கு தேவையான முழு அனுமதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இச்சந்திப்பின் போது எனது தேர்தல் விஞ்ஞாபனத்தை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்தேன். அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு மிகவும் தேவையானவை என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்ததார் என நிசாம் காரியப்பர் கூறினார்.
சுமார் 30 நிமிடங்கள் இடம்பெற்ற இச்சந்திப்பில் மேல் மாகாண அமைச்சர் உதய கம்பன்பில மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோரும் சட்டத்தரணி நிசாம் காரியப்பருடன் கலந்துகொண்டிருந்தனர்.
MA Thursday, 29 September 2011 06:17 PM
வாழ்த்துக்கள் நிசாம் சார்.
Reply : 0 0
vaasahan Monday, 03 October 2011 02:06 PM
விளையும் பயிரை முளையிலேயே தெரியும். தலைமையின் நம்பிக்கையை வென்ற உள்ளூர் தலைமைக்கு வாழ்த்துக்கள்.
Reply : 0 0
firas Friday, 30 September 2011 05:16 PM
இது எல்லாம் சும்மா அரசியல் விளையாட்டு. பொறுத்திருந்து பார்க்கலாம் யார் மேயர் என்று.
Reply : 0 0
சிறாஜ் Friday, 30 September 2011 05:40 AM
எல்லாம் நல்லா இருக்குப்பா. ஆனால் சிலரின் பொறுக்க முடியாத தன்மை அழகா விளங்குது. நிசாம் காரியப்பர் படித்தவர், பன்புள்ளவர் கல்முனையில் மற்றப்பக்கம் கேட்கும் நபர்களை கொஞ்சம் சிந்தியோங்கப்பா. தலை சுத்துது இல்ல.
அதுதான் சொன்னேன் மரத்துக்கு வாக்களித்து மரம் வெல்ல வைப்போம். சரியா உறவுகளே.
Reply : 0 0
riyas Friday, 30 September 2011 05:38 AM
வருங்கால மேயருக்கு எமது உளம் கனிந்த வாழ்த்துக்கள் !
Reply : 0 0
m.i.samsudeen Thursday, 29 September 2011 11:38 PM
ஏதற்கும் ஒரு முதிர்ச்சி வேண்டுமல்லவா?
குட்டி ஆடு குடல் ஏற கொழுத்தாலும் வழுக்கலே வழுக்கள் தான்.
Reply : 0 0
rifa Thursday, 29 September 2011 11:04 PM
ஜெமீளின் அரசியல் சாணக்கியமும் சுயநலம் அல்லாத அரசியலும் நிச்சயம் சாய்ந்தமருது மக்களுக்கு இப்போது புரிந்திருக்கும், ஜெமீல் சேர் அவர்களே திறமை சாலியின் கையை பலப் படுத்துங்கள். ஊர் மக்கள் எப்பொழுதும் உங்கள் பக்கம் இருக்கும், அல்லாஹ்வின் அருளும் உங்களுக்கு கிடைக்கும் அல்ஹம்துலில்லாஹ்.
Reply : 0 0
uooran Thursday, 29 September 2011 10:11 PM
நீங்க எங்கயோ போயுட்டிங்க. நிசாம் வாழ்த்துக்கள். எங்கட சிராஸ் தம்பிக்கு பிரதி மேயரயவது கொடுங்க. சில்லறைகளிண்ட கதைய உட்டுடுங்க தம்பி சிறசயும் உங்களுடன் சேர்த்துக்கொள்ளவும். சாய்ந்தமருது மக்களும் உங்களுக்கு வாக்களிப்பர் நீங்கள் தான் எங்கள் மேயர்
சாய்ந்தமருதன் ....................
Reply : 0 0
faththa Thursday, 29 September 2011 09:32 PM
நல்லது வாழ்த்துகள். உங்கள் வெற்றி நிச்சயம்.
Reply : 0 0
abdul Thursday, 29 September 2011 08:42 PM
தம்பி போராளிக்கு கொஞ்சம் போராத்தான் இருக்கு. என்னத்துக்குத்தான் போராடினாரோ தெரியாது. கிறீஸ்மேனோடு போராடி ஏதும் சாதித்தாரோ தெரியவில்லை. ஏனப்பா நல்லதை நல்லது என்று சொல்வதுதானே. ஏன் இந்த எரிச்சல்.
Reply : 0 0
abdul Thursday, 29 September 2011 08:40 PM
மீனவனுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் யார் என்று தெரியாதோ! பரவாயில்லை, அந்த செய்தியிலேயே உள்ளதே யார் தலைவர் என்று. அதையாவது வாசிப்பதில்லையா. எல்லாம் நிசாம்போபியா தான்.
Reply : 0 0
nawshad Thursday, 29 September 2011 08:07 PM
same as you should have to follow akk municipal council achivements.
Reply : 0 0
nawshad Thursday, 29 September 2011 08:06 PM
matured political approach by nizam kariyapper.
Reply : 0 0
MH Abdul Kareem BA in Social Science, Thursday, 29 September 2011 07:05 PM
நிசாம் நீ ஒரு மரம் தரும் வரம். நீ பல வெறுப்பு முனைகளுக்கு மத்தியில் கல்முனையின் திருப்புமுனையாகப் போகிறாய். உனது விஞ்ஞாபனம் அதற்கு ஒரு சான்று.
Reply : 0 0
meeran Thursday, 29 September 2011 01:12 AM
நிசாம் கல்முனை மேயருக்கு தகுதியானவர் என்பதை நிரூபித்துவிட்டார்?
Reply : 0 0
Marthooran Thursday, 29 September 2011 11:38 AM
கல்முனையில் 1000 வோட் எடுப்பீர்களா ?
Reply : 0 0
poraali Thursday, 29 September 2011 10:38 AM
சியாத்......உங்களை போன்றவர்கள் இருக்கும்வரை கிரீஸ் மனிதர்களை அழிக்க முடியாது..........
Reply : 0 0
avathane Thursday, 29 September 2011 06:24 AM
வாழ்த்துக்கள். கவனம் கொழும்பை போல் அபிவிருத்தி என்றால் அவர்களுக்கு விருப்பம் இல்லாத வீடுகளை எல்லாம் உடைப்பார்களோ தெரியாது?
Reply : 0 0
meenavan Thursday, 29 September 2011 05:18 AM
சகோதரர் நிசாம் அவர்களே, நகர அபிவிருத்திக்கு ஏன் பாதுகாப்பு செயலரை சந்தித்தீர்கள் புரியவில்லை?
Reply : 0 0
ayoob kalmunai Thursday, 29 September 2011 04:09 AM
நல்ல படித்த மேயார்தான். வாழ்த்துக்கள் சார் . கல்முனை முனிசிபல் பிஸ்கால் வாலவு கவனம். மக்கள் சொத்து அது. காப்பாத்துவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
Reply : 0 0
m.i.samsudeen Thursday, 29 September 2011 03:40 AM
பெயர கேட்டா சும்மா அதிருதல்ல ..... வரே வா ??
கல்முனை தம்பியின் உறவும் போய் விட்டது.
Reply : 0 0
mutha Thursday, 29 September 2011 03:12 AM
வெற்றி நிச்சயம்.
Reply : 0 0
mutha Thursday, 29 September 2011 03:03 AM
இந்த சந்திப்பின் மூலம் நீங்களே மேயர் பதவிக்கு பொருத்தமானவர் என்பதை நிருபித்து விட்டீர்கள் ஜெயவேவா...............
Reply : 0 0
ziyath Thursday, 29 September 2011 02:38 AM
படித்தவர் படித்தவர் தான் என்பதை நிசாம் நீங்கள் நிருபித்துவிட்டீர்கள்.
Reply : 0 0
jawsee Thursday, 29 September 2011 02:04 AM
சபாஸ் நிசாம் ....... அடுத்த சந்திப்பு யாருடன் மஹிந்தவா அல்லது நாமலா?
Reply : 0 0
mohamed Thursday, 29 September 2011 01:52 AM
நிஸாம் எங்கோவோ போய் விட்டீர்கள். கல்முனை மாநகர சபைக்கு இப்போதுதான் சரியான கோஷ்டி கிடைத்துள்ளது.... நாற்றம் எடுக்கவே மாட்டாது....
Reply : 0 0
jawad Thursday, 29 September 2011 01:24 AM
நிஸாம் காரியப்பரின் இந்த சந்திப்பு கல்முனை மாநகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சற்று வயிற்று கலக்கமாகத்தான் இருக்கும்... சொறி... ஒன்றும் செய்யமுடியாது...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
7 hours ago