2025 ஜூன் 12, வியாழக்கிழமை

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் இருவர் கைது

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 06 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும், கடற்றொழில் பரிசோதகர்களும் ஒன்றிணைந்து பொத்துவில் பிரதேசத்தில் இன்று திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது, தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைத் தொகுதி மற்றும் 85 மில்லிமீற்றருக்குக் குறைந்த கண்களையுடைய தடைசெய்யப்பட்ட வலைகள் என்பவற்றினைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட வலைகளும் கைப்பற்றப்பட்டன.

இந்நடவடிக்கையின் போது தப்பியோடியவர்கள் கைவிட்டுச் சென்ற சுமார் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. பொத்துவில், அறுகம்பைக்குடாக் களப்பு, பொத்துவில் வெளிக்களப்பு ஆகிய இடங்களில் மேற்படி திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந் நடவடிக்கைகளில், கடற்றொழில் மாவட்டப் பரிசோதகர்களான கே.எம். சம்சுதீன், ஈ. தேவராசா, கடற்றொழில் பரிசோதகர்களான எம்.எஸ்.முனாசிர ஷெரீப் (அட்டாளைச்சேனை), எம்.ஐ.ஜௌபர் (நிந்தவூர்), எஸ்.பாபு (பொத்துவில்), எம்.ஏ.பிரசன்ன (உல்லே), ஏ.ஜே.சம்பத் (பாணம), எம்.வை.நிஸ்ரின் (அக்கரைப்பற்று) ஆகியோர் கலந்துகொண்டனர்.      

                              


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13