2025 ஜூன் 12, வியாழக்கிழமை

கல்முனை, அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 07 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்முனை  அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் மாணவ தலைவர்கள் ஒழுங்கு செய்திருந்த ஆசிரியர் தின நிகழ்வுகள் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றன.

பாடசாலை அதிபர் எ.எம்.எம்.பரீட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்  மாணவர்கள் ஆசிரியர்களை இனிப்புக்கள் வழங்கி வரவேற்றத்துடன்  ஆசிரியர்களின் ஆசியையும் பெற்றுக்கொண்டனர்.

இதன்போது, மாணவத்தலைவர்கள் ஆசிரியர்களுக்கிடையே   தேசிக்காய் உருட்டும் போட்டி, சங்கீத கதிரை, பலூன் ஊதி உடைத்தல், கால்பந்து. ஊசியில் நூல் கோர்த்தல், கிரிக்கட்  போன்ற போட்டி நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இதேவேளை, நிந்தவூர் அல் அஸ்றக் தேசிய பாடசாலையிலும் ஆசிரியர் தின நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.  

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன்போது, ஆசிரியர்கள், தரம் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியல் 4 ஆம் இடத்தைப்பெற்ற மாணவன் முஹம்மட் முர்சித் ஆத்திப், தேசிய ரீதியில் முப்பாய்ச்சல் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கம் வென்;ற மாணவன்  எம்.எஸ்.எம்.நுஸ்கி ஆகியோர் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13