Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 ஒக்டோபர் 18 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த திருக்கோவில் சோமன் கண்ட பிரதேச விவசாயத்தை மீண்டும் மேற்கொள்ளுவதற்காக சோமன் குளம், வட்டவீதி என்பவற்றின் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்படடுள்ளன. இப்பணிக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
வீதி, குளம் என்பவற்றை நிர்மாணித்துத் தருமாறு இப்பிரதேச விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கிழக்கு மாகாண வீதி அமைச்சர் எம்.எஸ்.உதுமா லெப்பையிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய அமைச்சரின் துரித நடவடிக்கை காரணமாக அமைச்சின் மீள் எழுச்சி திட்டத்தில் சுமார் 17 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ் இவை புனரமைக்கப்படவுள்ளன.
இற்கமைவாக சோமன் குளத்தை நிர்மாணிப்பதற்கு 13 மில்லியன் ரூபாவும்; வட்டவீதியை நிர்மாணிப்பதற்கு 4 மில்லியன் ரூபாவும் ஒதுக்கிடப்பட்டுள்ளது.
திருக்கோவில் பிரதேச செயலாளர் வி.அழகரெட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்குமாகாண வீதி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்குமாகாண சபை உறுப்பினர் எஸ். செல்வராசா, அமைச்சர் ஏ.எல்.எம்.nஅதாவு;லாவின் இணைப்புச் செயலாளர் ஏ.பி.தாவூட், மாகாண நீர்பாசனப் பணிப்பாளர் எஸ்.திலகராஜா, பிரதிப்பணிப்பாளர் யு.எல்.எம்.நஸார், திருக்கோவில் பிரதேச பொறியலாளர் சுஜிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்அபிவிருத்தி பணியினால் 3 ஆயிரம் ஏக்கர் நிலபரப்பில்; வோளாண்மை மேற்கொள்ள முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago