2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அறிவூட்டல் வேலைத்திட்டம்

Kogilavani   / 2011 ஒக்டோபர் 20 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)
அம்பாரை மாவட்ட சமூர்த்தி முகாமையாளர்கள், மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அறிவூட்டல் வேலைத்திட்டம் எதிர்வரும் 5ஆம்; திகதி நடைபெறவுள்ளது.

இதற்கமைவாக அம்பாறை தேர்தல் தொகுதிக்குட்பட்ட சமூர்த்தி உத்தியோகர்களுக்கு அம்பாரை நகர மண்டபத்தில் காலை 9 மணிக்கும், பொத்துவில் தேர்தல் தொகுதிக்குட்பட்ட உத்தியோகத்தர்களுக்கு அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் காலை 9 மணிக்கும், சம்மாந்துறை தேர்தல் தொகுதிக்குட்பட்ட உத்தியோகத்தர்களுக்கு சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் பிற்பகல் 2 மணிக்கும், கல்முனை தேர்தல் தொகுதிக்குட்பட்ட உத்தியோகத்தர்களுக்கு சாய்ந்தமருது வளநிலையத்தில் பிற்பகல் 2 மணிக்கும் இரண்டு பிரிவுகளாக நடைபெறவுள்ளதாக அம்பாரை மாவட்ட சமூர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார் தெரிவித்துள்ளார்.

இவ் அறிவூட்டல் வேலைத்திட்டத்தில் அமைச்சர் ராஜித சேனாரட்ன, பிரதியமைச்சர் றோஹித அபேகுணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர்களான மனூஸ்ஸ நாணயக்கார, ஜானக பக்கும்புர, மாவட்ட செயலாளர் சுணில் கன்னங்கரா, மாவட்ட சமூர்த்தி உதவி ஆணையாளர் கிரிந்தகே உட்பட அம்பாரை மாவட்ட அரசியல் தலைவர்கள், அமைப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .