2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தேசிய வாசிப்பு மேம்பாட்டு வாரத்தை முன்னிட்டு புத்தக கண்காட்சி

Super User   / 2011 ஒக்டோபர் 23 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா,எம்.சி.அன்சார்)

தேசிய வாசிப்பு மேம்பாட்டு வாரத்தை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச நூலக அபிவிருத்தி குழு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் புத்தக கண்காட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தில் நடைபெறும் இக்கண்காட்சி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை நடைபெறவுள்ளது.

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.உதயகுமார், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தென்கிழக்கு பல்கலை கழகம், சம்மாந்துறை அல் - உஸ்வா இஸ்லாமிய கலாபீடம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலுள்ள புத்தக விற்பனை நிலையங்களின் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் விற்பiயும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .