2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அட்டாளைச்சேனையில் சிறுகைத்தொழிலாளர் சந்தை

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 23 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

'வறியவர்களின் உற்பத்திகளுக்குரிய பெறுமதிகளை வழங்கி, அவர்களை சுரண்டலில் இருந்து விடுவிப்போம்' எனும் கருப்பொருளிலான சிறுகைத்தொழிலாளர் சந்தையொன்று அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்திலுள்ள சிறுகைத்தொழில் உற்பத்தியாளர்களின் பல்வேறு வகையான உற்பத்திப் பொருள்களும்; விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

பன்களால் இழைக்கப்பட்ட பாய், தெங்குப் பொருட்களால் உருவாக்கப்பட்ட அலங்காரப் பொருட்கள், ஆடைகள் மற்றும் உணவுப் வகைகளென பல்வேறு வகையான பொருட்கள் இங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் சிறுகைத்தொழில் உற்பத்தி தற்போது ஆரம்ப நிலையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • ms Sunday, 23 October 2011 11:28 PM

    வரவேற்கத்தக்க நல்லதொரு நிகழ்ச்சி வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    m.s.sulfeek Monday, 24 October 2011 11:53 AM

    இது போன்ற இன்னும் பல சிறுகைத்தொழில்களை ஆரம்பிக்க வேண்டும். வறிய குடும்பங்களை உயர்தர படுத்த வேண்டும். தொழில்வாய்ப்பை அதிகரிக்க வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .