Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 23 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
'உதவும் கரங்கள்' எனும் தனது அமைப்பின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன வறிய மக்களுக்கு ஆடைகள் வழங்கும் திட்டமொன்றினை நேற்று பாண்டிருப்பு பிரதேசத்தில் ஆரம்பித்து வைத்தார்.
மேற்படி ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் புடவைகள் மற்றும் சாரன்களை வழங்கினார்.
வறிய மக்களுக்கு ஆடைகள் வழங்கும் இத்திட்டத்தின் கீழ் 2,500 புடவைகளும், 1,500 சாரன்களும் வழங்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன தெரிவித்தார்.
நேற்றைய தினம், தீகவாபி, நற்பிட்டிமுனை மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆடைகளை வழங்கினார்.
'உதவும் கரங்கள்' எனும் தனது அமைப்பின் மூலம் 1987 ஆம் ஆண்டு முதல் மக்கள் பணிகளில் - தான் ஈபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன இதன்போது கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன தமிழ், முஸ்லிம், சிங்களப் பிரதேசங்களுக்கு பாகுபாடின்றி தனது சேவைகளை வழங்கி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நேற்றைய நிகழ்வில் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே. லவநாதன், கல்முனை பிரதேச திட்டப் பணிப்பாளர் உதயகுமார் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
maazeen Monday, 24 October 2011 06:31 PM
வாழ்க நீங்கள், வளர்க உங்கள் பணி.
Reply : 0 0
pasha Monday, 24 October 2011 10:22 PM
ஏழைகளின் தோழன் பியசேன வாழ்க. அரச பக்கம் போன மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் ?
Reply : 0 0
UMMPA Monday, 24 October 2011 10:38 PM
எங்க நம்மட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் . தேர்தல் முடிந்துவிட்டது அடுத்த தேர்தல் வரை துக்கமா? இந்த பாராளுமன்ற உறுப்பினரின் தூரநோக்கைப் பார்த்து உதவுங்கப்பா !
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago