Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 25 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை மாநகரசபை மேயருக்கு கண்ணாடியாக இருப்பேன். அவரின் கீழ் வேலை செய்வதனை அவமானமாகக் கருதவில்லை. மக்களின் தீர்ப்பும் தலைமையின் முடிவும் இதுவாக இருப்பதனால் அதனை சந்தோசமாகவே நான் ஏற்றுக்கொண்டிருக்கின்றேன் என கல்முனை மாநகரசபையின் பிரதி மேயரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளருமான நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
'மக்கள் நீதிமன்றத்தின் முன் நிஸாம் காரியப்பர்' என்ற தொனிப்பொருளில் கல்முனையில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
'நான் கட்சித் தலைமைக்கு எதிரானவனல்ல. ஆனால், பிழைகள் செய்வது யாராக இருந்தாலும் தட்டிக் கேட்பேன். எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநியாயங்களுக்கு கட்சித் தலைமை சரியான நியாயத்தை பெற்றுத் தருமென்ற நம்பிக்கையில் இன்று வரை இருக்கின்றோம். அந்த நம்பிக்கை வீண் போனால் மீண்டும் மக்கள் நீதிமன்றத்தின் முன் நான் வருவேன்.
லிபியாவின் தலைவராக இருந்த முகம்மர் கடாபியுடன் மக்கள் இருந்தபோது அவரை அழிக்க வேண்டுமென்ற மேற்கத்தைய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தது. அதேமக்களே இன்று அவரை கொடூரமாகக் கொன்றுள்ளார்கள். அந்த சம்பவம் நமக்கெல்லாம் ஒரு படிப்பினையாக இருக்கட்டும். இஸ்லாத்தை விட்டு விட்டு அரசியலில் இறங்கியுள்ள அரசியல்வாதிகள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றாவிட்டால் இப்படி யாருக்கும் இந்நிலை ஏற்படலாம்.
2000ஆம் ஆண்டில் தலைவர் அஸ்ரப் மரணித்தபோது அரசியல் கிரிடமென்பது முற்களினாலானது என்று தெரியும் அதனால்தான் அன்று உங்களை விட்டும் ஓடினேன். அன்று அதற்கான முதிர்ச்சி இருக்கவில்லை. இன்று அதற்கான முதிர்ச்சியுடன், உங்களுடன் இருந்து செயற்பட எண்ணியுள்ளேன். அரசியல் தலைமை என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். அல்லாஹ்விற்கு பயந்து நடந்து கொண்டால் தப்பித்துக்கொள்ளலாம். இல்லையாயின் அரபு நாடுகளில் நடப்பது போன்று இங்கும் நடக்கும். குர்ஆன், ஹதிஸின் அடிப்படையில் அரசியல் செய்ய வந்தவர்கள் அதனை மறந்து விடக்கூடாது.
மரச்சின்னத்தில் வந்தால்தான் நாடாளுமன்ற உறுப்பினராக, மாகாணசபை உறுப்பினராக, மேயராக, பிரதேசசபை உறுப்பினராகலாம் என்று சிந்திக்கின்றார்கள். அது அவர்களின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றியல்ல. முஸ்லிம் காங்கிரஸுக்கு நீங்கள் கொடுத்துள்ள கண்ணியமாகும். இதனை மறந்து எனக்காக கிடைத்த வாக்குகள், எனது பின்னால்தான் மக்கள் உள்ளார்கள் என்று மமதை வந்து விட்டால் மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள். இதனை சிலர் இன்னமும் புரிந்து கொள்ளாதிருக்கின்றார்கள்.
எனது வீட்டில் நான் மக்கள் முன் கூறிய கருத்துக்களை வேறுவிதமாக திசை திருப்பிக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸூடன் இருந்த இரு பிரதேசங்களை தமது அரசியல் இலாபத்திற்காக பிளவுபடுத்தியுள்ளார்கள். கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவரினால் நடத்தப்படும் கல்வி நிலையமொன்று உடைக்கப்பட்டுள்ளது. இவைகள் தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பு தலைமைக்கு இருக்கின்றதென்றே கூறியுள்ளேன். தவிர அதன் பொறுப்பை தலைமை ஏற்க வேண்டுமென்று நான் சொல்லவில்லை. இவைகள் பற்றி விசாரணை செய்யவிருப்பதாக தலைவர் உறுதியளித்துள்ளார். மேற்படி சம்பவங்களைச் செய்தவர்கள் இவ்வுலகில் தப்பிக்கொண்டாலும் மறுமையில் நிச்சயமாக தப்பமுடியாது.
கல்முனை மாநகரசபை மேயருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செயலாளர் எழுதிய கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டைத் துப்புரவு செய்வதற்கு நான்கு ஊழியர்களைக் கேட்டுள்ளதோடு ஒரு பெட்டி மண்ணும் கேட்டுள்ளார். இதற்குத்தானா மாநகரசபை என்று கேட்கின்றேன். இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கமாட்டேன். இதற்கு கௌரவ மேயரும் அனுமதியளித்திருக்கமாட்டார் என்று நம்புகின்றேன்.
இவ்வாறான நடவடிக்கைகளை தவிர்த்து இன்றைய ஜனாதிபதியின் ஆட்சியில் புதிய அபிவிருத்திகளைச் செய்ய வேண்டும். புதிய அரசியல் பாதையில் பயணிக்க வேண்டும். நீங்கள் தங்களுக்கான புதிய அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்கி விட்ட சந்தோசத்தில் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்களின் அன்பும் ஆதரவும் இருக்கும் வரை தைரியமாக எனது பொறுப்பை நிறைவேற்றுவேன்.
அரசியல் தலைமைகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும்போது மக்கள் துணிவுடன் வெளிக்கிழம்பி விட்டால் அரசியல்வாதிகள் பயந்து விடுவார்கள். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கக் கூடாது. ஆனால், அரசியலுக்கு வந்து விட்டால் மக்களின் அதிகாரத்தைப் பெற்றுவிட்டால் அந்த அதிகாரமுள்ளவரின் பலவீனத்தை விமர்சித்தேயாக வேண்டும். அவரின் பலவீனம் சமூகத்தைப் பாதிக்கும் என்றார்.
majeed Wednesday, 26 October 2011 05:04 AM
சொந்தப் பணத்தில் மக்களுக்கு சேவை செய்யும் அரசியல்வாதிதிகளை இட்டு எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் தூண்டிலில் இரை போடுவது மாதிரி கொஞ்சம் செலவு செய்துவிட்டு, பிறகு அதை எடுப்பதற்கு குறுக்கு வழியில் அதிகமாக ஊழல்கள் செய்யக்கூடும்.
Reply : 0 0
Sadiq Tuesday, 01 November 2011 04:08 AM
I like the word Transparency used in Mr. Nizam's campaign. I hope he will stick to this while holding the post of Deputy Mayor. You don't have to aspire for big posts. Your political maturity and intelligence should take you long way. Work for the people wholeheartedly and they will chose you.
Reply : 0 0
ruzny Saturday, 29 October 2011 03:03 AM
யார் இந்த நிசாம் சேர் ?
Reply : 0 0
சிறாஜ் Friday, 28 October 2011 03:40 AM
நிசாம் சாரை மேயர் அனுசரித்தால் நன்றாக இருக்கும். எல்லாரையும் நம்பினால் அரசனும் இல்லை புரிசனும் இல்லை என்னும் நிலைதான் வரும்.
Reply : 0 0
uooran Thursday, 27 October 2011 05:07 PM
ரூஸ்நி சார்,
குறைந்தது கண்ணாடியகவாவது இருக்கவிட்டால் இன்றைக்கு மணல் லோட்டும் வேலைக்கு ஆட்களும் கேட்பவர்கள் நாளைக்கு நம்மட மேயர மேய்ச்சி புல்லு போட்டுடுவார்கள். நம்மட மாநகரோட கதி அரோகரா தான்.
Reply : 0 0
Aboothahir. Thursday, 27 October 2011 05:40 AM
சதி திட்டத்திலிருந்து நீங்கள் உங்களை பாதுகாக்க அல்லா போதுமானவன். பயம் தேவை இல்லை, மக்கள் நாம் உங்களுடன். அல்ஹம்துலில்லாஹ்.
Reply : 0 0
arafath Thursday, 27 October 2011 03:42 AM
fareed neenga solvethu ponru mayor kettu santai saiyye bus pitithu pohevillai. muthanmai vetpalar enru arivikkappattuvittu athatkuriye neethi kidaikatha enruthan murayide Senrarhel. mayor pathavi kidaikathe pothum nizam kariapper averhal makkalai vanmurayil eadupada vendam enruthan sonnar. but, avar vimarsenangalaium eatrukkollum pakkuvem udayevar ena nampuhiren.
Reply : 0 0
ruzny Thursday, 27 October 2011 01:02 AM
நீங்க சும்மா இருந்தா போதும் சேர் .. கண்ணாடியா இருக்க தேவை இல்ல ...
Reply : 0 0
Doc - KSA Wednesday, 26 October 2011 09:08 PM
In politics, everyone should feel the political drainage which never fulfill at least min. level of satisfactory. Like wise, in Kalminai mayoral drama, there were many things involved. Unfortunately, our community still being cheated by all fraction due to lack of awareness. If so, whom should we blame?
Reply : 0 0
SM Wednesday, 26 October 2011 08:51 PM
இலவச கண்ணாடி கொடுத்தவருக்கே கண்ணாடியா..... வேடிக்கையா இருக்கு.... விழுந்தும் மீசல மண் படல மாதிரி காரியப்பர் நானா பேசுறார்..... முதல்வருக்கு வழி விட்டு ஒதுங்குங்கப்பா.....
Reply : 0 0
sidique Wednesday, 26 October 2011 04:39 PM
what we want people with clean hand but what we have corrupted politician, let us think and support the people who can lead the society with clean hand and vision rather than supporting corrupted politicians.
Reply : 0 0
pasha Wednesday, 26 October 2011 03:08 PM
குரான் ஹதீஸ் படி அரசியல் செய்கிறார்களாம் ,மிக பெரிய பகடி இது. மக்களை மடயனாக்க பாவித்த சொல் தான் இந்த குரான் ஹதீஸ் அரசியல். அதை இன்னும் இவர்கள் சொல்வார்கள், நாங்கள் இன்னும் அதை நம்போனும்!
Reply : 0 0
hameed Wednesday, 26 October 2011 06:15 AM
கள்முனைக்கு நல்லேதோர் தலைமைத்துவம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. . வாழ்த்துக்கள் ... படித்தும் பதவி இருந்தும் எதுவும் செய்ய முடியாதவர்கள் வழிவிடட்டும்.
Reply : 0 0
ayoob kalmunai Wednesday, 26 October 2011 05:22 AM
பாரித், சரியாக சொன்னீர்கள்.
Reply : 0 0
razeek kalmunai Tuesday, 25 October 2011 04:55 PM
மக்களின் தீர்ப்பு இரண்டாம் இடம் என்றால் ஆதரவாளர்களுடன் தலைமையகம் நோக்கி போனது ...................?, சார் முலாம் பூசிய கண்ணாடியா ? இல்லை கருப்பு கண்ணாடியா ?
Reply : 0 0
faizmohamed Wednesday, 26 October 2011 04:52 AM
வாழ்க வளர்க்க வளமுடன். உங்கள் வரவு chenge.
Reply : 0 0
fareed Wednesday, 26 October 2011 04:16 AM
அரசியல் முதிர்வு என்ற வார்த்தையை ஏற்றுக்கொள்ள முடியாது,ஏனென்றால் bus பிடித்து மக்கள் மேயர் கேட்டுப்போனதை. வாய்துறக்காமல் பார்த்துக்கொண்டு இருந்ததை என்னவென்று சொல்வது. சட்ட இருட்டறையாகி விட்டதோ?
Reply : 0 0
nanpan Wednesday, 26 October 2011 02:45 AM
போராளி அவர்களே ஏன் சொந்தப்பணத்தை செலவிட வேண்டும் என்று உங்களிடம் கேட்கவேண்டி இருக்கிறது. ஒடுக்கப்படுகின்ற நிதியை ஒழுங்காக திட்டமிட்டு செலவிட்டால் சரிதானே? ஏன் கொந்துராது காரர்களின் பின்னால் போக வேண்டும்? சொந்த பணத்தை செலவிடுபவர் ஒழுங்கான நிர்வாகியுமல்ல, அரசியல்வாதிமல்ல. எந்த சட்டத்தில் அவ்வாறு இருக்கின்றது?
Reply : 0 0
ansa Wednesday, 26 October 2011 01:47 AM
தம்பி போராளி, உங்களை போன்றே மனிதர்களால்தான் இன்று எம் அரசியல் சாக்கடையை பொய் விட்டது. காசு, சாராயம், இதெல்லாம் காபிர்களின் வழி....
Reply : 0 0
uooran Tuesday, 25 October 2011 10:38 PM
தம்பி போராளி,
மக்களுக்கு சதங்களை செலவு செய்பாவர்கள் மட்டும் சமூக அக்கறை உள்ளவராக நாம் எவ்வாறு எடுத்துக்கொள்வது? அறிவு ரீதியாக உதவினாலும் அது நல்லது தானே?
Reply : 0 0
porali Tuesday, 25 October 2011 08:55 PM
இவர் ஒரு ரூபாயும் மக்களுக்காக, தனது சொந்த பணத்திலிருந்து செலவு செய்வாரா?
Reply : 0 0
meenavan Tuesday, 25 October 2011 08:22 PM
உமர் (ரலி) அவர்களது ஆட்சியை மனதில் வைத்து நிசாம் பேசியிருந்தால் வரவேற்கிறேன்.
Reply : 0 0
uooran Tuesday, 25 October 2011 07:28 PM
வாழ்த்துக்கள் காரியப்பர் சார்
உங்களது உரையில் சர்வதேச முஸ்லீம் தலைவர்களின் இன்றைய நிலையை கூறினீர்கள். மறைந்த தலைவரின் செயற்பாட்டைக் கூறினீர்கள். இன்றைய கல்முனை பற்றிச் சொன்னீர்கள். இங்கு நாங்கள் கண்டது உங்களது அரசியல் முதிர்ச்சியை. பிரதி மேயராகவும் நிறைய வேலைகள் செய்யலாம். நீங்கள் நல்லது செய்தால் மக்கள் உங்களுடன் இருப்பர். மக்கள் பிரயோசனப்பட கூடிய நீண்ட காலத்திட்டங்களை செயற்படுத்துங்கள். மேயராக பாராளுமன்ற உறுப்பினராக இருந்து சிலர் செய்யாததால் தான் இப்போது பிரித்து கேட்கிறார்கள். கவனத்தில் கொள்க.
Reply : 0 0
mbm Tuesday, 25 October 2011 06:41 PM
ஆணித்தரமான கருத்தை கூறிய நிசாம் சார்க்கு வாழ்த்துக்கள். மக்கள் நீதிமன்றம் இனியும் தூங்காது என நம்புகின்றேன். கல்முனையான் சாய்ந்தமருதூறான் என ஏன் பிரிக்கின்றாங்க என்றுதான் விளங்கல. எல்லோரும் முஸ்லிம். ரத்த, திருமண உறவுகளால் பின்னி பினைந்தவர்கள், அரசியல் என்றால், பிரச்சினை என்றால் வேறுபடுத்தி பார்க்கும் சமூகமாக மாறிவிட்டது. நெஞ்சில் வெஞ்சம் வைத்து வஞ்சம் தீர்க்கும் அளவுக்கு நாம் மாறியிருக்கிறோம் என்றால், நாம் இன்னும் உள்ளத்தால், இறையச்சத்தால் திருந்தவில்லை என்றே அர்த்தமாகும். மனிதனாக வாழ்வோம்.
Reply : 0 0
ansa Tuesday, 25 October 2011 05:39 PM
தலைவர் ஹக்கீமுக்கு இனிய வேண்LNfhs;...கட்சியில் ரொம்g கis வsர்ந்து விட்டது...அதை பிடுங்கும் நேரம் இது....டோன்ட் வேஸ்ட் டைம்.
Reply : 0 0
Nafeel Tuesday, 25 October 2011 05:28 PM
அப்பா அவருக்கு பார்வை கொஞ்சம் போதாது என்று ஒத்துக்கிறோம்.
Reply : 0 0
UMMPA Tuesday, 25 October 2011 05:11 PM
வெற்றி நிச்சயம் நம் பக்கம் தான் எனவே உங்களின் திடமான எண்ணங்கள் காலுன்றுமனால் நிட்சயம் மக்கள் உங்கள் பக்கம். முஸ்லிம் காங்கிரசை திடமாக பற்றிப்பிடிதுக்கொளுங்கள் பிரிந்துசென்றவர்கள் மீண்டும் இணைவார்கள் . வாழ்த்துக்கள் !
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
53 minute ago
2 hours ago