Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 25 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட வீட்டுத்தோட்ட முயற்சியாளர்களுக்கு பயிர் விதைகள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
சாய்ந்தமருது கமநல சேவை மத்திய நிலையத்தில் சாய்ந்தமருது விவசாய போதனாசிரியர் எம்.எம்.எம்.ஜெமில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உலக உணவு விவசாய நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.மார்க்கண்டு பிரதம அதிதியாகவும் சாய்ந்தமருது பிரதேச செயலக உதவித்திட்ட உத்தியோகத்தர் ஏ.எல்.ஏ.மஜீட், சாய்ந்தமருது கோட்ட பாடசாலைகளின் சுற்றாடல் மேம்பாட்டு இணைப்பாளர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான அவசர உதவி, விவசாய மீட்சி திட்டத்தின் கீழ் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் உலக உணவு விவசாய நிறுவனம் இந்நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago