2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அம்பாறையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உபகரணங்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 25 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அம்பாறை மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் சுனாமி அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், மாணவர்களுக்கும் நீரிரைக்கும் இயந்திரம், மேசன் மற்றும் தச்சுத் தொழிலுக்கான உபகரணங்கள், விவசாய உபகரணங்கள் மற்றும் புத்தகப் பைகள் என்பன வழங்கும் வைபவம் இன்று அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர தலைமையில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர, விசேட அதிதிகளாக சிரேஸ்ட அமைச்சர் பீ.தயாரட்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ், பீ.எச்.பியசேன, சிறியாணி விஜேவிக்கிரம ஆகியோர் கலந்துகொண்டு உபகரணங்களை, புத்தக பைகளையும் வழங்கி வைத்தனர்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர்கள், உதவிச் பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பொது மக்கள், பாடசாலை மாணவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்த கொண்டனர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .