Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 25 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) 'கடந்த வந்த பாதை தொடரவிருக்கும் பாதை' என்ற தொனிப்பொருளினான மக்களை தெளிவுபடுத்தும் அம்பாறை மாவட்ட கருத்தரங்கு, இன்று செவ்வாய்க்கிழமை அம்பாறை நகரசபை மண்டபத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் திகாமடுல்;ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்;ஸ தலைமையில் நடைபெற்றது.
ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
அநுரகுமார திஸாநாயக்க அங்கு உரையாற்றுகையில், 'எமது கட்சிக்குள் எவ்வித பிரச்சினையும், பிளவும் காணப்படவில்லை. எவராலும் மக்கள் விடுதலை முன்னணியினை பிளபடுத்தவும் முடியாது' என நீண்ட உரையினை ஆற்றினார்.
இக்கருத்தரங்கின் போது மக்கள் விடுதலை முன்னணி கடந்து வந்த பாதை தொடர்பிலும், எதிர்வரும் காலங்களில் மக்கள் விடுதலை முன்னணி பயணிக்க வேண்டிய முறைமை குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதுடன், அது குறித்து மக்களுக்கும், கட்சி ஆதாரவாளர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டது.
அத்துடன் மக்கள் விடுதலை முன்னணி உருவாகுவதற்கான காரணம், திறந்த பொருளாதாரக் கொள்கையினால் நாட்டுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் சோசலிசத்தின் அவசியம் ஆகிய குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இதில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி அமைப்பளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago