2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கல்முனை மாநகர முதல்வர் களத்தில்

Super User   / 2011 ஒக்டோபர் 26 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

( எஸ்.எம்.எம்.றம்ஸான் )

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பட்டிமுனை மருதமுனை கல்முனை சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களிலிருந்து முதல்வரின் கவனத்திற்கு மக்களால் கொண்டுவரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக கல்முனை மாநகர முதல்வர்  சிராஸ் மீராசாஹிப் நேற்று செவ்வாய்க்கிழமை சம்மந்தப்பட்ட இடங்களுக்கு விஜயம் ஒன்றை மேற் கொண்டார். இதன்போது மாநகர ஆணையாளர் எம்.ஜே.லியாக்கத் அலிஇ மாநகரசபை பொறியியலாளரர் ஹலிம் ஜௌஸி உட்பட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

கல்முனை மாநகரசபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர்களான எம்.சாலித்தின் உமர் அலி சட்டத்தரணி ஏ.எம்.றக்கிப் மற்றும் எம் .அமீர் ஆகியோரும்  இதில் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • uooran Thursday, 27 October 2011 02:55 PM

    பீர் முகம்மதுவின் வழிகாட்டுதலின் கீழ் உங்களது பயணம் ஹ ஹ ஹ ......
    நமது பாராளுமன்ற உறுப்பினர் தந்த கடிதத்துக்கு என்ன நடந்தது அங்கு சென்று பார்த்தீர்களா? முதலில் அவரது பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள்.

    Reply : 0       0

    M.B.M.Nazeem Friday, 28 October 2011 03:22 AM

    Well appreciated your journey, but don't be under obligation to anybody. think yourself if it's correct pray 2 rakath sunnath and go ahead. Because Sri Lanka politics is a garbage, specially in our own community. Be good with your deputy and build up the Muslim community unity. Follow our leader Prophet Mohamed (pbuh) you will never fail. Other than him we don't have any leader for Muslims.

    Reply : 0       0

    iqbal Friday, 28 October 2011 02:11 AM

    கல்முனை mayor அவர்களே !!!! பிரதேசவாதமற்ற நீங்கள் சாய்ந்தமருது வரவேற்பு கோபுரத்தில், (கல்முனை மாநகரசபை வரவேற்கிறது) என்ற வாசகத்தை நீங்களாவது உங்களுடைய பதவிகாலத்தில் செய்து முடிப்பீர்கள் என நம்புகிறோம்.

    Reply : 0       0

    faizmohamed Friday, 28 October 2011 12:59 AM

    மக்களுக்கு சேவைதான் முக்கியம்

    Reply : 0       0

    zar Thursday, 27 October 2011 09:34 PM

    என்ன எதிர்வரும் மாகான சபையில் இறங்கும் ஐடியா ஏதாவது .....

    Reply : 0       0

    செம்பகம் Thursday, 27 October 2011 09:02 PM

    தம்பி ஈஸ்டேர்ன்கய் அக்கரைப்பற்று மேயரை சொல்லுகின்றீரே? உமக்கென்ன அப்ப கல்முனை உருப்படாது. அங்கயே ஆயிரம் பிரச்சினை. எங்க போய் சொல்வது?

    Reply : 0       0

    uooran Thursday, 27 October 2011 08:24 PM

    அக்கரப்பத்து மேயரிடம் ஆலோசனை கேட்டால் சபைக்கிட்ட கேட்காம டென்டர் கோல் பண்ணுற ஆலோசனை தருவார்.

    Reply : 0       0

    easternguy Thursday, 27 October 2011 06:07 PM

    சிராஸ் சார் ,,,,,,,,, உங்களுக்கு தேவை எனில் அந்த AKKARAIPATTU புது மேயரிடம் ஆலோசனை கேளுங்கள்........ அபிவிருத்தி செய்வது எப்படி என உங்களுக்கு சொல்லுவார்............

    Reply : 0       0

    ziyath Thursday, 27 October 2011 04:54 PM

    ரம்சான் உங்களுக்கு செய்தி இல்லாமல் இப்படியா?
    கவலையாய் உள்ளது இதையும் ஒரு செய்தியாய் சொல்வது.

    Reply : 0       0

    mbm Thursday, 27 October 2011 03:02 PM

    முதல்வர் நல்லது செய்ய ஆரம்பித்து விட்டார் என நம்புகின்றேன். இதுவரை மாநகர சபையால் தேடப்பட்ட விடயங்கள் அனைத்தும் வெறும் அறிக்கையாகத்தான் மாறி இருக்கின்றன. நீங்களாவது பாரபட்சமின்றி உங்கள் தேடலை செயற்திறனாக மாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான் அனைத்து மக்களும் இருக்கின்றார்கள். "திருடனுக்கு கூட இருந்தால் நிறைய படிக்கலாம், ஆனால் நாம் திருடனாகிவிட கூடாது" இதனை நீங்களும் பின்பற்றுவீர்கள் என நம்புகிறேன். இது அரசியலில் நுழைபவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்.! குட் லக் முதல்வரே...

    Reply : 0       0

    நண்பன் Thursday, 27 October 2011 12:47 AM

    நல்லது மேயர் அவர்களே. ஆனால் உங்களுடன் இருக்கும் சக உறுப்பினர்களையும் அழைத்துச்செல்ல வேண்டியது உங்கள் கடமை. யாரின் சொல்லுக்கும் இல்லாமல் மக்களின் சேவைக்கு உறுதியாய் நில்லுங்கள். உங்களை அறிமுகப்படுத்திய ஜமீலையும் அனுசரித்து நடங்கள். அவரும் உங்களுக்கு மூத்தவரும் வழிகாட்டியுமாவார்.

    Reply : 0       0

    loganathan Thursday, 27 October 2011 12:01 PM

    அதுவும் சரிதான் உம்பா, ஒன்றுக்கும் இங்கே பைசா இல்லையே .
    நான் கொண்டு வருகிறேன் என்று தம்பி சொல்லுவாராக்கும் , இப்போ அவர் அரச தரப்பு தானே
    மீண்டும் மடயனாகாதீங்கோ.

    Reply : 0       0

    UMMPA Thursday, 27 October 2011 05:42 AM

    புதுமணம், இனி சந்திப்பு, அடுத்து அரங்கேற்றம் , ஒன்றுமே நடக்க மாட்டாது . ஏன் இது ஒரு பெளத்த நாடு , நீங்கள் எல்லாம் சிறுபான்மை எதுவுமே முடியாதுப்பா! வரலாற்றை சற்று விளங்கமல்தான் வெளிநாடுகள். இருந்தும் திரு சம்பந்தன் ஐயா அமெரிக்கா பயணம் . ஏதும் நடந்தால் சூரியன் மேற்கில் உதிக்கும் ............

    Reply : 0       0

    mca fareed Thursday, 27 October 2011 05:14 AM

    சபாஸ்,இந்த இடத்தில் எனக்கு உமர் (ரழி) அவர்களின் ஆட்சி ஞாபகத்திற்கு வருவது தவிர்க்க முடியாததே. மேயர் அவர்களே உங்கள் முயற்தொடரட்டும். அல்ஹம்துலில்லா.

    Reply : 0       0

    ansar Thursday, 27 October 2011 04:47 AM

    சின்ன சின்ன விடயங்களையெல்லாம் செய்தியாக்காமல், சலசலப்பில்லாமல் பலகாரம் சுடுவது ஆரோக்கியமானது.

    Reply : 0       0

    Sanoon Mohideen Thursday, 27 October 2011 04:11 AM

    நிச்சயம் பாராட்டப் படவேண்டிய செயற்பாடு . பிரதி மேயரும் இணைந்து கொன்டிருந்தால் அல்லது இணைக்கப்பட்டிருந்தால் மேலும் ஒத்துழைப்புடன் செயற்படலாமே...

    Reply : 0       0

    loganathan Thursday, 27 October 2011 02:26 AM

    மேயரும் புதுசு ஆணையாளரும் புதுசு ஆனால் மற்றையவர்கள் பழசு. மிகவும் அவதானம் . கடந்த காலம் உங்களுக்கு படிப்பிணை.

    Reply : 0       0

    razeek kalmunai Thursday, 27 October 2011 02:12 AM

    இப்படியான விஜயத்தில் முதல்வர் அவர்கள் தயுவு கூர்ந்து கல்முனை ஜூம்மா பள்ளிவாசல் முன்னால் இருக்கும் கால்வாயை கட்டாயம் ஒரு முறை பார்க்க நம் (சந்தை அருகில்). பலமுறை மக்கள் முறைப்பாடு செய்தும் பயன் இல்லாமல் உள்ளது ..... ........

    Reply : 0       0

    loganathan Thursday, 27 October 2011 01:46 AM

    உங்களுடை முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை . இன்றைய விஜயத்தின் பொது நீங்கள் எல்லா வற்றையும் அறிந்திருப்பீர்கள். ஊழல்களுக்கு, சீர் கேடுகளுக்கு யார் யார் பொறுப்பாளிகள் என்று மக்களே கூறி இருப்பார்கள்.

    Reply : 0       0

    சிறாஜ் Thursday, 27 October 2011 12:56 AM

    நிச்சயமாக மேயர் அவர்களே மாகாண சபை உறுப்பினர் ஜமீல்தான் மலேசியாவில் வைத்து நானும் பக்கத்தில்தான் இருந்தேன் உங்களை தலைவரிடம் அறிமுகப்படுத்தும் போது கட்சியில் சேர்த்து வைக்கும் போதும். எனவே அவரை மறக்க வேண்டாம், அனுசரித்து செல்ல வேண்டிய பொறுப்பு உங்களுடையது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஒற்றுமையாக பயனியுங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .