2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கடாபியின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கரைப்பற்றில் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 28 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.மாறன்)

லிபிய அதிபர் கேணல் முவம்மர் கடாபி கொலை செய்யப்பட்டதை கண்டித்து அக்கரைப்பற்றில் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்று நடத்தப்பட்டது.

கேணல் முவம்மர் கடாபியின்  படுகொலைக்கு எதிராக அமெரிக்கா, மற்றும் அதன் நேசநாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்ட ஊர்வலத்திற்கு எம்.வை.ஏ. அஸீஸை செயலாளர் நாயகமாகக் கொண்ட மக்கள் ஜனநாயக முன்னணி  அழைப்பு விடுத்ததையடுத்து அக்கரைப்பற்று நகர பள்ளிவாசல் முன்னால்  இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கடாபியின் படுகொலையை இலங்கை முஸ்லிம்கள் வண்மையாக கண்டிப்பதாக தெரிவித்தனர்.

'அமெரிக்காவின் இரத்தவெறியை நிறுத்துக', 'சர்வாதிகார போக்கிற்கு எதிராக விழித்தெழுவோம்' என்பன போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகையை ஏந்தியவாறு  ஆர்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றினர்.


You May Also Like

  Comments - 0

  • Anwer Noushard Saturday, 29 October 2011 01:53 AM

    நல்லது செய்ய நமக்குத்தான் திராணி இல்லன்டாலும் மத்தவனுக்கு இடைஞ்சல் இல்லாமலாவது இருக்கலாமே. நல்ல சகோதர மனப்பாங்கு. அக்கரைப்பற்று சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    azeem Tuesday, 01 November 2011 02:57 PM

    வேலைய பாருங்கோ..............

    Reply : 0       0

    AA Sunday, 30 October 2011 06:57 AM

    முர்சலீன் Kakka parthathu verry happy.
    AKP -USA living

    Reply : 0       0

    hutha Saturday, 29 October 2011 05:44 PM

    முஸ்லிம்களின் குரல் ஓங்கட்டும்.

    Reply : 0       0

    faizmohamed Saturday, 29 October 2011 05:28 PM

    அக்கறைக்கு புதிய kachcheya?

    Reply : 0       0

    avathaani Saturday, 29 October 2011 04:31 PM

    Nusky சியார விடயங்களில், கந்தூரி விடயங்களில் மிக ஈடுபாடு உள்ள அமைச்சர் அதா தான் அதை செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அரசுடன் இணைந்தவராச்சே? எப்படி செய்யலாம்?

    Reply : 0       0

    onlinenowfal Saturday, 29 October 2011 03:41 PM

    டியர் நுசிகி, ஆர்பாட்டம் செய்வதுக்குதான் செய்யணும். நீங்க சொல்லுவது போல செய்தால் இலங்கைளில் கலவரம் நடந்து பல முஸ்லிம் மக்கள் அழிந்தொழிந்திருப்பார்கள். வைட்லஸ் ஆக சிந்திக்க பழகிகொள் டியர்.... போராட்டம் இஸ் ஓவர். மேட்டர் கம் டு ஆல் மீடியாஸ், லிபியன் வெப்சைட் ஷோவின் அவர் நியூஸ், சோ தமிழ் மிர்ரருக்குத்தான் நாம் முதலில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

    Reply : 0       0

    mbm Saturday, 29 October 2011 03:14 PM

    நல்லாத்தான் இருக்கு. ஆனா...சும்மா டைம் பாஸ்க்கு இப்படி ஒரு முயற்சியா? நல்லவரோ, கெட்டவரோ தொடர்ச்சியாக முஸ்லிம் தலைவர்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிரார்கள். அதுதான் கவலையான விடயம். அதனை நிறுத்த இந்த பதாதைகள் மூலமாக ஏதாவது வழி கிடைக்குமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஆமாம், இந்த போடோக்களில் நம்ம ஊரு ஜாம்பவான்கள் ஒருத்தரையும் காணோமே...!

    Reply : 0       0

    ar.nilaakp Saturday, 29 October 2011 02:56 PM

    nusky உங்கள் கருத்தை பாராட்டுகிறேன். sapas சபாஸ் சபாஸ்.

    Reply : 0       0

    Nusky Saturday, 29 October 2011 05:38 AM

    அனுராதபுரத்தில் சியாரம் (எங்களுக்கு தான் தெரியும் அது சியாரம்னு உடைத்தவர்களுக்கு அது இஸ்லாமியர்களின் பள்ளி ) உடைக்கப்பட்டபோது அக்கரைப்பற்றில் இப்படி ஒரு ஆர்ப்பாட்டம் செய்தார்களா...???

    Reply : 0       0

    zamroodh Saturday, 29 October 2011 04:33 AM

    எப்பதான் இந்த மக்கள் திருந்துவார்களோ!!!இந்த ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு உலகத்தில் நடப்பவற்றை தெளிவுபடுத்துவதற்கு யாருமில்லையா ?

    Reply : 0       0

    Thazeem Saturday, 29 October 2011 03:21 AM

    நல்ல விஷயம் , வேலை இல்லாதவர்கள்.......

    Reply : 0       0

    vaasahan Saturday, 29 October 2011 03:14 AM

    பலவீனமான குரல்தான். நதி ஒரு துளியோடு ஆரம்பிக்கும்தானே.

    Reply : 0       0

    nowfal Saturday, 29 October 2011 02:12 AM

    மிகவும் பாராட்ட தக்க செயல். மாஷா அல்லாஹ் நன்றி மறவாத இலங்கை முஸ்லிம்கள். தொடரட்டும் போராட்டம். இன்று நமது சகோதரனுக்கு நடந்தது போல் நாளை நமக்கு நடக்காது இருக்க அல்லாஹ்வை தொழுவோம்.

    Reply : 0       0

    ahamed satham Saturday, 29 October 2011 02:08 AM

    date போயிட்டு bass

    Reply : 0       0

    nowfal Saturday, 29 October 2011 02:00 AM

    Masha Allah
    wishes for Akkaraipattu PEOPLES DEMOCRATIC FRONT
    Allahu akbar……………..

    Reply : 0       0

    razeek kalmunai Friday, 28 October 2011 10:22 PM

    யாருக்கு இந்த எதிர்ப்பு.......? சும்மா டைமா ............ பண்ணாம வீட்டுக்கு போய் நல்லா சாப்புட்டுவிட்டு தூங்குங்கள்....

    Reply : 0       0

    அக்கரைபற்றின் குடிமகன் Saturday, 29 October 2011 01:17 AM

    கடாபி முஸ்லீம்களை அழிக்கும் போது இவர்கள் எங்கே போனார்கள்? அமெரிக்காவுக்கு எதிராக ஆர்பாட்டம் என்றால் சரி, ஆனால் கடாபியை கொன்றதற்காக ஆர்ப்பாட்டம் என்றால் அது மூடர்களின் வேலை. அமெரிக்கா ஒழிக............

    Reply : 0       0

    nawshad Saturday, 29 October 2011 12:55 AM

    ஊரிலே ஆயிரம் பிரச்சினை இருக்கு முதல்ல அத பாருங்கோ.do not waste the time.

    Reply : 0       0

    ar.nilaakp Saturday, 29 October 2011 12:41 AM

    razeek நல்லதை பாராட்டவும் யார் செய்தாலும். அதை விட்டுவிட்டு குறுகிய சிந்தனையே வேண்டாம். பரந்த கிலாபத்THAI நோக்கி கடுகளவாவதுது சிந்திப்போம்.

    Reply : 0       0

    jampavan Saturday, 29 October 2011 12:29 AM

    ஒரு ஏழை இஸ்லாமியனின் ஜனாஸா கூட சரியாக கௌரவத்துடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது . ஆனால் ஒரு முஸ்லிம் நாட்டில் 42 வருஷம் ஆண்ட தலைவனின் ஜனாஸா ஆறு நாட்கள் நாற்றம் எடுக்க வைத்தவர்கள் முஸ்லிம்கள் ..... அமெரிக்கர்கள் அல்ல .....வேறை வேலை இருந்தால் பாருங்க.

    Reply : 0       0

    Nafeel Saturday, 29 October 2011 12:26 AM

    நம்ம பக்கத்தில எத்தனையோ பிரச்சினை நடக்குது!

    Reply : 0       0

    Akkaraipattu Friday, 28 October 2011 11:59 PM

    @Razeek Kalmunai.......
    kalmunai வியாபாரிகளுக்கு மனிதாபிமானம் எங்க தெரியப்போகுது வாப்பா......

    Reply : 0       0

    Akkaraipattu Friday, 28 October 2011 11:57 PM

    இவிய சத்தம் போட்டா லிபிய பிரச்சின தீந்திருமாக்கும் ........சப்புட்டமா இ படுத்தமா எண்டு இல்லாம .....சும்மா நேரத்த வீண்டிக்கயலே ........

    Reply : 0       0

    AJ Friday, 28 October 2011 11:30 PM

    @razeek kalmunai : I LIKE UR COMMENTS :-))

    Reply : 0       0

    AJ Friday, 28 October 2011 11:19 PM

    ha ha ha funny. yes yes we must protest again US. any MR backs for protest? ha ha ha comedy people.

    Reply : 0       0

    ar.nila Friday, 28 October 2011 11:18 PM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    ar.nila Friday, 28 October 2011 11:09 PM

    வாழ்த்துகள்

    Reply : 0       0

    ameen Friday, 28 October 2011 10:44 PM

    இந்த ஆர்ப்பாட்டம் அவர்களுக்கு எட்டவா போகுது ?

    Reply : 0       0

    ajiwath Friday, 28 October 2011 10:35 PM

    கடாபி எதிர்ப்போ என்னவோ, முருசலின் காக்காவை படத்தில் கண்டத்தில் சந்தோசம். அது சரி jananayaka makkal Munnani இது enkirunthu முளைத்தது ?

    Reply : 0       0

    anas Friday, 28 October 2011 10:30 PM

    எஸ். ஹி இஸ் கரெக்ட்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .