Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 28 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.ஜெஸ்மின்)
கல்முனை மாநகரசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று காலை கொழும்பிலுள்ள நீதியமைச்சில் இடம்பெற்றது.
நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவருமான ரவுப் ஹக்கீம் முன்னிலையில் இடம்பெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் இகல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப் இ பிரதிமேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மற்றும் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
uooran Saturday, 29 October 2011 07:02 PM
இந்த வெற்றி முஸ்லீம் காங்கிரசின் வெற்றி இதற்கு காரணமானவர்கள் இந்த பதினோரு பேரும் மட்டும் அல்ல.
மீதி பதினான்கு பேரையும் நீங்கள் அழைத்திருக்க வேண்டும். அவர்களும் வீடு வீடாக சென்றார்கள், போஸ்டர் அடித்தார்கள், கூட்டம் போட்டார்கள், வாகன ஊர்வலம் போனார்கள், காசு செலவு செய்தார்கள். மறந்து விட்டீர்களே! ஏறி விட்டு ஏணியை உதைத்து விடுவதுதான் பண்பா! அடுத்த எலக்சன் வரும் வரை அவர்களுக்கு ஓய்வா!
Reply : 0 0
mbm Saturday, 29 October 2011 09:34 PM
ஊரன், உங்களுக்கு ஒன்னு தெரியாதா? அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா! நன்றி மறத்தல் நன்றன்று, இது அரசியலுக்கு மட்டும் உகந்ததன்று!
Reply : 0 0
mca fareed Sunday, 30 October 2011 01:16 AM
கல்முனையில் சத்தியப்பிரமானம் எடுத்தால் கௌரவம் குறைந்துவிடுமோ?
Reply : 0 0
naanum kalmunaiyan Sunday, 30 October 2011 04:26 AM
சத்தியப்பிரமாணம் எடுப்பதுக்கு அவர்கள் வர தேவை இல்லை. வென்றவர்களே சத்தியப்பிரமானம் எடுக்க முடியும். அவர்கள் வந்தால் போக்குவரத்து செலவு யாரு வாப்பா குடுக்கிற. யோசிக்காம பேசுறது உங்களுக்கு ஒங்களுக்கு பழகிடுச்சி....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago