Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 29 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்,அப்துல் அஸீஸ் )
அம்பாறை மாவட்டத்தில் நேற்று வெள்ளி இரவு முதல் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இரவு வீசிய காற்றின் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடுகள் சிலவும் பாடசாலை கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதோடு வெள்ளநீரும் தேங்கிக் காணப்படுகிறது.
இன்று(29) காலை 7.30 மணி உடன் முடிவுற்ற 24 மணித்தியாலத்தில் அம்பாறை மாவட்டத்தில் 28.8 மில்லிமீற்றர்ர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும்இ தொடர்ந்தும் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடிய காலநிலையே காணப்படுவதோடு கடலும் கொந்தளிப்பாகக் காணப்படுமெனவும் பொத்துவில் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரியான எம்.ஐ.ஏ.நயீம் தமிழ் மிரருக்குத் தெரிவித்தார்.
மேலும் இந்நாட்களில் மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் பொதுமக்கள் அவதானமாக இருக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.
Rinos Saturday, 29 October 2011 08:52 PM
எலி மூத்திரம் பெய்தாலும் எமது Zahira College - Kalmunai, குளம் போல் காணப்படும். அரசியல்வாதிகளே, அதிபர்களே, ஆசிரியர்களே, ஊர் பிரியர்களே கல்முனை சாய்ந்தமருது என்ற பிரதேசவாதத்தை விட்டுவிட்டு முதலில் நாம் படித்த , நம் முன்னோர் படித்த, நமது பிள்ளைகள் படிக்க போகும் எமக்கு கல்விப்பால் தந்த எமது பாடசாலை இது; ஒவ்வொரு வருடமும் இதே நிலைமை எமது பிள்ளைகளின் கல்வியை கொஞ்சம் கருத்தில் கொண்டு; இதற்கொரு சிறந்த வடிகாலமைப்பு செய்து எமது பாடசாலைக்கு உங்களது அபிவிருத்தி திட்டத்தில் முதல் இடத்தை வழங்குக.
Reply : 0 0
Rinos Saturday, 29 October 2011 08:54 PM
எலி மூத்திரம் பெய்தாலும் எமது Zahira College - Kalmunai, குளம் போல் காணப்படும். அரசியல்வாதிகளே , அதிபர்களே, ஆசிரியர்களே, ஊர் பிரியர்களே கல்முனை சாய்ந்தமருது என்ற பிரதீசவாதத்தை விட்டுவிட்டு முதலில் நாம் படித்த , நம் முன்னோர் படித்த , நமது பிள்ளைகள் படிக்க போகும் எமக்கு கல்விப்பால் தந்த எமது பாடசாலை இது; ஒவ்வொரு வருடமும் இதே நிலைமை எமது பிள்ளைகளின் கல்வியை கொஞ்சம் கருத்தில் கொண்டு ; இதற்கொரு சிறந்த வடிகாலமைப்பு செய்து எமது பாடசாலைக்கு உங்களது அபுவிரித்தி திட்டத்தில் முதல் இடத்தை வழங்குக.
Reply : 0 0
mbm Saturday, 29 October 2011 09:23 PM
அல்லாஹ் பெரியவன்! அவனை பயந்து கொள்ளுங்கள்.
Reply : 0 0
M.I.M.FARSAN Sunday, 30 October 2011 04:55 AM
உங்களுக்கு வேற வேலை இல்லையா ? ஏன் இந்த பிரதேசவாதம்!
Reply : 0 0
mbm Monday, 31 October 2011 04:23 PM
கொந்துராத்துகாரர்களையும் காணோம்! கொந்துராத்து அரசியல்வாதிகளையும் காணோம்! ஒருவேளை மழைக்கு ஒதுங்கிட்டங்களோ? இது சாய்ந்தமருதூரானோ கல்முனையானோ படித்த, படிக்கும் பாடசாலையல்ல. இது நாம படித்த பாடசாலை. பிரதேசவாதம் கல்வியில் தலைதோங்க கூடாது. ஊருக்கெல்லாம் வடிகான் போறீங்க. நம்ம பதின்மூன்று வருடம் வாழ்ந்த நம்மட வீட்டுக்கு ஒரு வடிகான் போட ஏங்க தயங்குறீங்க? தாமதிக்கிறீங்க?
Reply : 0 0
ummpa Wednesday, 02 November 2011 04:45 AM
முதல் வீதி மீண்டும் தோண்டப்பட்டு ஒரு அடி ஆழமா வீதி அமைப்பதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் , இல்லாவிட்டால் எல்லாருடைய வளவுக்குள்ளும் நீர் தேங்கி நிற்பத்தை தவிர்க்கமுடியாது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
40 minute ago
2 hours ago