2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

திவிநெகும அங்குரார்ப்பண வைபவம்

Super User   / 2011 ஒக்டோபர் 28 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பத்து இலட்சம் மணைப்பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் 'திவிநெகும' இரண்டாம்கட்ட அங்குரார்பண வைபவம் தேசிய ரீதியில் நாடு முழுவதும் வியாழனற்று (27) நடைபெற்றது.

இதிதிட்டத்தின்கீழ் சம்மாந்துறைப் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட 51 கிராம சேவகர் பிரிவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மலையடிக்கிராமம் -2ம் பிரிவில் முக்கிய பயிர் நடுகை விழாவும் கூட்டமும் நடைபெற்றது.

மௌலவி முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தின் கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், தலைமை சமூர்த்தி முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன், மாவட்ட சமூர்த்திப்பிரிவிலிருந்து வருகைதந்த அஜீத், சமூர்த்தி முகாமையாளர் எஸ்.எல்.எம்.மசூர், விவசாய போதனாசிரியர் ஏ.அப்துல்மஜீட், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.அஹமதுநிஷh, கிராம உத்தியோகத்தர் எம்.ரீ.எம்.நஸீர் மற்றும் பெருந்தொகையான கிராம மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .