Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 30 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்,எஸ்.எம்.எம்.றம்ஸான்)
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கரையோரத்தின் தாழ்நிலங்கள் பலவற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
பல வீதிகளுக்கு மேலாக வெள்ளநீர் பாய்ந்து செல்கின்றன. அத்துடன், கல்முனை - அம்பாறை பிரதான வீதியின் மாவடிப்பள்ளி தாம்போதியின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
பெரும்போக நெல் விதைப்பு வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், விதைக்கப்பட்ட வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
makkal 1st Monday, 31 October 2011 05:07 AM
ஒவ்வொரு முறையும் மாவடிப்பள்ளி பாலம் வெள்ளத்தில் மூழ்கிறது. அதற்கு மாற்று வழியாக புதிய பாலம் அமைக்க நமது எம்.பி மார் நடவடிக்கை எடுப்பார்களா?
Reply : 0 0
hamsad Monday, 31 October 2011 02:12 PM
அக்காலத்தில் , அவர்கள் கொழும்பில் இருப்பார்கள் .. ஹ ஹ ஹ ...
Reply : 0 0
ar.nilaakp Monday, 31 October 2011 03:00 PM
மக்கள் அவர்களே யார் வாப்பா உங்கள் எம்.பி நேரடியாகக் கேட்கேலாமே ?
Reply : 0 0
mbm Monday, 31 October 2011 03:26 PM
மக்களே... மழை பெய்வதையோ! வெள்ளம் வருவதையோ! யாரும் தடுக்க முடியாது. ஆனால், நீ கட்டுவதா? நான் கட்டுவதா? என்ற போட்டியில் யாரும் கட்டாமலே...விட்டுவிட்டார்கள். அடுத்த தேர்தலில் மக்கள் ஒரு காட்டு காட்டினா புரியும். வெகு விரைவில் மக்கள் நேய ஆட்சி! மக்களை நேசிக்கும் ஆட்சி! வரும் கண்ணா...!
Reply : 0 0
razeek kalmunai Tuesday, 01 November 2011 01:29 AM
எம் .பி. எம் கொலும்பில் இருந்து வந்தது வாரத்தில் மூன்று நாட்களா நீங்கள் சொல்லும் ஆட்சி பண்ணுவது ....?
Reply : 0 0
ala Tuesday, 01 November 2011 01:55 AM
சாதாரனமான காலங்களிலேயே இந்த பாலத்தால் நீர் மட்டம் உயர்ந்து தான் காணப்படுகிறது உண்மையில் அந்த வீதியை உயர்த்தி பாலம் போடத்தான் யாரும் இல்லை எந்த எலக்சன் வரட்டும் அப்போது பார்க்கலாம்.
Reply : 0 0
vaasahan Wednesday, 02 November 2011 12:23 AM
வெள்ளவாய - காரைதீவு காபெட் ரோடு போடக்கள எல்லா சிங்கள ஊர் பாலங்களும் தாம்போதிகளும் செஞ்சாங்கதான். ஆனா மாவடிப்பள்ளி பாலம் மட்டும் அந்த சீமான்மார்ட கண்ல படல்ல. மக்கள்கூட என்ன எது என்டச்சும் கேட்டாங்களா. எம்பீமார் இருந்தா கேட்டிருப்பாங்க இல்லியா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
36 minute ago
2 hours ago