Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 30 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ், ஏ.ஜே.எம்.ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாகவும், திடீரென ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினாலும் ஆழ்கடல் மீனவர்கள் தங்களது மீன்பிடிப் படகுகளை வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு சென்று தரித்து வைக்கும் தேவை தோன்றியது.
மீன்பிடிப் படகுகளை வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் தரித்து வைத்துவிட்டு மீண்டும் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கல்முனை பிரதேசத்திற்கு வரவேண்டியுள்ளதனால் மீனவர்களுக்கு பல அசௌகரியங்களும் மேலதிக செலவுகளும் ஏற்படும் நிலை காணப்பட்டது.
இந்த நிலைமையை தவிர்க்கும் முகமாக அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் கவனத்திற்கு இப்பிரச்சினையை கொண்டுவந்தனர்.
இதனை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி விக்கிரமவினை நேற்று சந்தித்து மீனவர்கள் எதிர்நோக்கும் இப்பிரச்சினைகளை எடுத்துக் கூறியதன் பயனாக, மீனவர்களின் மீன்பிடிப்படகுகளை ஒலுவில் துறைமுகத்தில் தற்காலிகமாக தரித்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இவ்வறிவித்தளினை அடுத்து அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்கள் தங்களது மீன்பிடிப்படகுகளை ஒலுவில் துறைமுகத்தில் தரித்து வைக்கும் நடவடிக்கைகளை இன்று மேற்கொண்டனர்.
firthous Monday, 31 October 2011 04:11 AM
இந்த பிரச்சினையை யார்தான் கவனிப்பார்?
Reply : 0 0
mbm Monday, 31 October 2011 03:51 PM
இப்படி மாற்றி மாற்றி கட்டி கொண்டிருந்தால் எப்போ நமது பிரதேசத்தில் கட்டி வைப்பது? தேவை மீனவர்களுக்கு (மட்டும்) தானே... என எல்லா அரசியல்வாதிகளும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதுதான் அடிக்கடி பல் தேவை கட்டிடம் என்ற பெயரில் வெறும் கட்டிடத்தை கட்டி மீனவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பாவமையா நீங்கள்.!
Reply : 0 0
faizmohamed Monday, 31 October 2011 08:26 PM
நிரந்தர முடிவு வேண்டும்.
Reply : 0 0
Maruthoor. A.R.M Monday, 31 October 2011 10:19 PM
நிரந்தர தீர்வுக்கு மீனவர்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
Reply : 0 0
razeek kalmunai Tuesday, 01 November 2011 12:18 AM
நிரந்தர தீர்வு தலைவர் ரவுப் ஹக்கீம் தான் தரனும். முஸ்லிம் காங்கிரஸ் மாநகர சபை அல்லவா இது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
38 minute ago
2 hours ago