Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 31 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்,எம்.எம்.றம்ஸான்)
கல்முனை மாநகரசபையின் முதலாவது முதல்வர் ஏ.ஆர்.அஸ்மிரின் நிழற்படம் கூட்ட மண்டபத்தில் கொழுவப்படாததனால் மாநகரசபையின் புதிய நிர்வாகத்தின் முதலாவது அமர்வு ஒரு மணித்தியாலயம் தாமதமாகி ஆரம்பமானது.
கல்முனை மாநகரசபையின் முதல்வர் எம்.எஸ்.சிராஸ் தலைமையிலான முதலாவது அமர்வு இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருந்தது. இருப்பினும் கூட்ட மண்டபத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்கள் கொழுவப்பட்ட இடத்தில் மாநகரசபையின் முதலாவது முதல்வர் ஏ.ஆர்.அஸ்மிரின் நிழற்படம் தொங்கவிடப்படாததனால் சபைக்கு வருகை தந்த உறுப்பினர்கள் சிலரும் பார்வையாளர்களும் அதிருப்தியடைந்தனர். முன்னாள் முதல்வர் ஏ.ஆர்.அஸ்மிரின் நிழற்படம் காட்சிக்கு வைக்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதனையடுத்து மாநகரசபையின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு முன்னாள் முதல்வர் ஏ.ஆர்.அஸ்மிரின் நிழற்படம் தொங்கவிடப்பட்டதைத் தொடர்ந்து அமர்வு தாமதமாகி 10.30 மணிக்கு ஆரம்பமானது.
19 உறுப்பினர்களைக் கொண்ட கல்முனை மாநகர சபையின் முதலாவது அமர்வுக்கு 11 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் 4 தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் 3 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களும் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும் சமூகமளித்தனர்.
முதல்வர் தமது கொள்கைப்பிரகடனத்தை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு உரையாற்றினார். அப்பிரகடனத்தை பிரதி மேயர் நிஸாம் காரியப்பர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் வரவேற்று வாழ்த்தி உரையாற்றினார்கள்.
hameed Tuesday, 01 November 2011 01:21 AM
கைபட்டாலும் குற்றம் கல் பட்டாலும் குற்றம் என்று இருக்கற இடத்தில் முன் ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தவில்லையா ? இவர்கள் முதல் முதல்வரை அவமதிக்கவில்லை, அவருக்கு வாக்களித்த மக்கள் ளாகிய எங்களை அவமதித்துள்ளார்கள்.
Reply : 0 0
uooran Tuesday, 01 November 2011 06:03 PM
'கல்முனையூ சொல்வதைப் பார்த்தால் உறுப்பினர்கள் எல்லோரும் மாண்பு மிகு மேயருக்கு சல்யுட் அடிக்கணும் போல. எங்களது வாக்கினால் இந்த சபைக்கு சென்றவர்கள் எங்களது பிரச்சினையை கவனிக்கவே அவர்கள். எங்களது வரிப்பணத்தில் சம்பளம் பெறப்போபாவர்கள். அது ஒரு சதம் என்றாலும் சரியே.
Reply : 0 0
kareem Tuesday, 01 November 2011 04:55 PM
மாநகர சபையில் குண்டடூசி குறைந்தாலும் கணக்கில் வரணும் இல்லன்ன கரீம் வருவான்.
Reply : 0 0
kalmunaiyaan Tuesday, 01 November 2011 12:22 PM
குழப்பம் பண்ணுவதை விட்டுப்போட்டு .....மாண்புமிகு மேயர் சிராஸ் சொல்லுவதை நேரத்துக்கு செய்து மக்களினதும் மாண்புமிகு மேயரினதும் நல்லப்பிராயத்தினை மிக விரைவில் பெற பிரதி மேயரை வாழ்த்துகிறோம்....
Reply : 0 0
porali Tuesday, 01 November 2011 12:17 PM
அஸ்மி படம் தொங்குவதில் யாருக்கும் மறுப்பில்லை.........ஆனா சபையில் குழப்பம் பண்ணுவது மேயர் மேலுள்ள மக்கள் செல்வாக்கினை அவமதிப்பதாகும்......
Reply : 0 0
makkal 1st Tuesday, 01 November 2011 05:22 AM
anpu, பிரதி மேயர் படம் முக்கியமில்லை நாங்கள் கேட்பது முதல் மேயரின் படத்தை ... வரலாற்றை ஏன் மறைக்கணும்? வயதில் சிறியவர் மேயரானால் அவரை வரலாற்றில் இருந்து அழிப்பதா? நீதி என்றால் சமமாக இருக்கேனும் ஊத்தை வேலை கூடாது ....
Reply : 0 0
UMMPA Tuesday, 01 November 2011 04:19 AM
அடுத்த அமர்வில் சனாதிபதியின் படம் வேண்டும் என்பார்கள். இருந்து பாருங்கள்.
Reply : 0 0
ullooran Tuesday, 01 November 2011 04:14 AM
பழையதை எல்லாம் விட்டுவிட்டு புதிய மேயருக்கு தங்களது ஒத்துழைப்புக்களை வழங்கி, கல்முனை மாநகரை அபிவிருத்திப்பாதைக்கிட்டுச் செல்ல எல்லோரும் முன்வாருங்கள்...!
பிரிந்து நின்று எதையும் செய்ய முடியாதுதானே !...
Reply : 0 0
Deen Noor Tuesday, 01 November 2011 02:34 AM
முட்டாள் தனம், மூட நம்பிக்கை........
Reply : 0 0
vanndu Tuesday, 01 November 2011 01:28 AM
அன்று ஒரு நாள் தேசியக்கொடி பறக்க விடும்போது கீழே விழுந்தது. இன்று பழைய மேயர் நிழற்படம் இல்லையாம்.
Reply : 0 0
ummpa Monday, 31 October 2011 08:52 PM
இதுதான்!
இந்த அஸ்மிர் போட்ட பிச்சைதான் அடுத்த மேயர் ஆவதுக்கு காரணமாகியது. அதக்குள் மறந்துவிட்டார்கள் ! இதுக்குதான் பழையதை மறந்து விடாதப்பா என்று சொல்வது.
Reply : 0 0
anpu Tuesday, 01 November 2011 01:08 AM
பிரதி மேயரின் படத்தினை தொங்க விட்டிருந்தால்..... இந்த முதல் மேயரின் படத்தினை பற்றி வினா வந்திருக்குமா?
Reply : 0 0
makkal 1st Tuesday, 01 November 2011 01:02 AM
நிசாம் காரியப்பர் இருக்கும் வரை மாநகர சபையில் நீதி இருக்கணும் ..இல்லாட்டி இப்படிதான் நியூஸ் வரும் ...கொஞ்சம் கவனம் பழைய மேயர் !!
Reply : 0 0
kulathooran Monday, 31 October 2011 11:46 PM
நெஞ்சு பொறுக்குதில்லையே நெறி கெட்ட மாந்தரின் செயலினை நினைக்கையிலே. ஆங்கில அரிச்சுவடியின் ஆரம்ப எழுத்தை பெயராக தொடங்கும் அஸ்மி போட்டோவை தொங்கவிடுவதில் ஏன் இந்த காழ்ப்பு? மாநகரின் கன்னி மேயர் அவர். காங்கிரசின் சித்து விளையாட்டில் பலியாகி வெளிநாட்டில் வாழ்கிறார்.
Reply : 0 0
jaks Monday, 31 October 2011 11:03 PM
தேசியக்கொடி ஏற்றுதலில் ஆரம்பமான தடங்கல் தொடர்ச்சியாக நீடிக்குமோ?
Reply : 0 0
Maruthoor. A.R.M Monday, 31 October 2011 10:17 PM
முடியல்ல............ இதெல்லாம் ஒரு பிரச்சனையா ஐயா ....???
Reply : 0 0
uooran Monday, 31 October 2011 09:36 PM
இதுவரை கல்முனையை நிர்வகித்த மேயர்களுடன் புதிய மேயரும் இணைந்துள்ளார். இங்கு சுவரில் மாட்டப்பட்டுள்ள போடோக்களில் நமது முதல் மேயரின் போட்டோவில் தான் முஸ்லீம் காங்கிரஸ் வாடை வீசுகின்றது. சிராசுக்குப் பின்னால் நீலமும் மசூர் மவ்லானாவுக்குப்பின்னல் பச்சையும் ஹரீசுக்குப் பின்னல் இளம் நீலமும் அஸ்மிருடன் பச்சை மஞ்சளும் அதுதான் முஸ்லீம் காங்கிரஸ் வாடை வீசுகின்றது. இப்போது போட்டோக்கள் முக்கியமில்லை வேலைய பாருங்கய்யா!
போட்டோ இல்லையம் ஒரு மணித்தியாலம் ஒத்தி வைப்பாம்! அபிவிருத்தியை செய்யுங்க சார்.
Reply : 0 0
mbm Monday, 31 October 2011 09:34 PM
இப்பவே கண்ணக்கட்டுதே.. ஏங்க போட்டோவ கொளுவாம இவங்க இத்தனை நாளாய் என்ன செஞ்சிட்டு இருந்தாங்க... கொடி விழுந்தது முதல் போட்டோ கொளுவாத வரை பிரச்சினை. முதல் கோணல் முற்றிலும் கோணல் சரிதான் போல... மாநகர சபையை தூசு தட்டும் ஒரு காலம் வரும். அப்போ விளங்கும். போட்டோதான் பிரச்சினையா? போட்டோவில இருந்தவங்கஇ இருக்கிரவங்களால பிரச்சினையா என்று... கல்முனை தோற்றால் இலங்கை வாழ் முஸ்லிம்களும் சேர்ந்துதான் தோற்பார்கள் என்பது இவர்களுக்கு தெரியாதா? கல்முனை பத்திரம்பா.... கவனமா பார்த்துக்கங்க!
Reply : 0 0
pasha Monday, 31 October 2011 09:32 PM
சபையின் முதல் முதல்வரை மறந்தது ஏன்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
45 minute ago
2 hours ago