2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சடயந்தலாவ பிரதேசத்தில் அபிவிருத்திப்பணிகள் முன்னெடுப்பு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 01 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

அம்பாறை மாவட்டத்திலுள்ள சடயந்தலாவ பிரதேசத்தில் 89 இலட்சம் ரூபா செலவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அபிவிருத்திப்பணிகள் நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டன.  

விவசாய மீளெழுச்சித் திட்டத்தின் கீழ், சடயந்தலாவ மேல்கண்ட வாய்க்கால் அபிவிருத்திக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தியினூடாக 2776 ஏக்கர் விவசாயக் காணிகள் நேரடியாக நீரை பெற்றுக்கொள்வதுடன், பல ஆயிரக்கணக்கான மக்கள் இதனால் நன்மையடையவுள்ளனர்.

மேலும் இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்காக 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு அதற்கான வேலைகள் தற்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு நீர்பாசனத்துறை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

நற்பிட்டிமுனை முஹம்மதியா விவசாய அமைப்பின் தலைவர் அதிபர் கபூர் தலைமையில் நடைபெற்ற இதற்கான வைபவத்தில்  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு நீர்பாசனத்துறை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர், எம்.எல்.துல்கர் நஹீம், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட நிகழ்ச்சித்திட்ட பிரதிப் பணிப்பாளர் பீ.ஏ.பள்ளியகும்புற, நீர்பாசனத் திணைக்களத்தின் பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் யூ.எல்.ஏ.நாஸர், நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர் ஏ.எம்.சமட் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .