2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கல்முனையை சுகாதாரமான பிரதேசமாக மாற்றித்தருமாறு மக்கள் வேண்டுகோள்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 01 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

கல்முனை நகரின் மத்தியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குப்பை வண்டிகள் மற்றும் மலம் அகற்றும் இயந்திரம் போன்றவற்றினை மனித நடமாற்றம் குறைந்ததொரு ஒதுக்குப் புறமான பகுதியில் நிறுத்தி வைப்பதன் மூலம், அப்பிரதேசத்தினை சுத்தம் நிறைந்த பகுதியாகவும், சுகாதாரமுள்ள இடமாகவும் மாற்றித் தருமாறு கல்முனை மாநகரசபையிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பிரதேசத்திலுள்ள திண்மக் கழிவுகளையும், குப்பைகளையும் அகற்றி சூழலைச் சுத்தப்படுத்த வேண்டிய பொறுப்பைக் கொண்ட கல்முனை மாநகரசபையினராலேயே - கல்முனை நகரின் ஒரு பகுதி அழுகிய குப்பைகளால் துர்நாற்றம் வீசும் நிலைக்குள்ளாகியுள்ளதாக பொதுமக்களால் புகார் தெரிவிக்கப்படுகின்றது.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கல்முனை மாநகரசபையினர் - குப்பைகளை ஏற்றி இறக்கும் இயந்திரங்களையும், அதனோடிணைந்த பெட்டிகளையும் கல்முனை நகரின் மத்தியிலுள்ள பஸ் நிலையத்துக்கு அருகில் நிறுத்தி வைப்பது வழமையாகும்.

அவ்வாறு நிறுத்தி வைக்கப்படும் குப்பை வண்டிகளில் - சிலவேளை குப்பைகள் அகற்றப்படாமல் அப்படியே நாட் கணக்கில் போடப்படுவதால், குப்பைகள் அழுகி – அப்பிரதேசம் முழுக்க துர்நாற்றம் வீசுவதாக மக்கள் முறையிடுகின்றனர்.

குப்பை வண்டிகள் நிறுத்துமிடத்தின் ஒரு புறத்தில் கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் காரியாலயமும், முச்சக்கர வண்டித் தரிப்பிடமும் அமைந்துள்ளது. மறுபுறம் கல்முனைப் பொது நூலகம் அமைந்துள்ளது. மேலும், நாளாந்தம் இப்பகுதிக்கு பல்லாயிரக் கணக்கான மக்களும் வந்து செல்கின்றனர்.

இதேவேளை, குப்பை வண்டிகளை நிறுத்துமிடத்தில் மலம் அகற்றும் இயந்திரத்தினைக் கொண்ட வாகனமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை பொதுமக்களை மேலும் அருவருப்புக்குள்ளாக்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, மனித நடமாற்றம் குறைந்ததொரு ஒதுக்குப் புறமான பகுதியில் மேற்படி குப்பை வண்டிகள் மற்றும் மலம் அகற்றும் இயந்திரம் ஆகியவைகளை நிறுத்தி வைப்பதன் மூலம், அப்பிரதேசத்தினை சுத்தம் நிறைந்த பகுதியாகவும், சுகாதாரமுள்ள இடமாகவும் மாற்றித் தருமாறு கல்முனை மாநகரசபையிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • mbm Tuesday, 01 November 2011 10:29 PM

    ஒரு கேள்வி என்றாலும் உருப்படியான கேள்வி! மாநகர சபை நடவடிக்கை எடுக்குமா? எடுக்கணும் சொல்லிபுட்டன் ஆமா...

    Reply : 0       0

    meenavan Tuesday, 01 November 2011 10:34 PM

    ஒதுக்குப்புறமாக வாகனங்களை நிறுத்தி வைப்பதுடன் நில்லாமல், வாகனங்களின் பாதுகாப்பு தன்மையையும் உறுதிபடுத்திகொள்ள வேண்டும்.

    Reply : 0       0

    UMMPA Wednesday, 02 November 2011 04:39 AM

    திட்டமிடல் வேண்டும் ஐயா ! முதல் கல்முனை நகரத்தின் எதிர்கால கட்டிடங்கள், எப்படி இருக்கவேண்டும் எங்கு எந்த கட்டிடம் அமையவேண்டும் என்பதை முடிவெடுத்துவிட்டு இனி ஒழுங்குபடுத்தலை மேற்கொள்ளவும்.

    Reply : 0       0

    firthous Wednesday, 02 November 2011 04:57 AM

    எவ்வாரெல்லாம் ஊர் பழுதாகிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .