Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2011 நவம்பர் 01 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
வெள்ளத்தினால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைப்பதற்காக அரசினால் வழங்கப்பட்ட நிதியினை மோசடியாகப் பயன்படுத்தி அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்தின் முக்கிய உறுப்பினர் தனது காணிகளினூடாக வீதிகளை அமைத்துள்ளதாகவும், ஆனால், அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் கடந்த வெள்ளத்தின் போது சேதமடைந்த பல வீதிகள் இன்னும் புனரமைக்கப்படாமல் உள்ளதாகவும் அட்டாளைச்சேனைப் பிரதேசசபை உறுப்பினர் எஸ்.எல். முனாஸ் குற்றம் சாட்டினார்.
அட்டாளைச்சேனைப் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு – சபையின் தவிசாளர் ஏ.எல்.எம்.நசீர் தலைமையில் நேற்று சபைக் காரியாலயக் கட்டிடத்தில் இடம்பெற்றது. இவ் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, உறுப்பினர் முனாஸ் மேற்கண்ட குற்றச்சாட்டினைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உiராயாற்றுகையில்ளூ
'அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் கடந்த வெள்ளத்தின் போது சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்கும் பொருட்டு 'வேலைக்கான பணம்' திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்துக்கு அரசாங்கம் 30 லட்சம் ரூபாவினை வழங்கியது.
ஆனால், கடந்த வெள்ளத்தின் போது இப்பிரதேசத்தில் சேதமடைந்தும், வெள்ள நீரை வெளியேற்றுவதற்காகத் தோண்டப்பட்டுமிருந்த பல வீதிகள் இன்னும் புனரமைக்கப்படாமல் அப்படியேதான் கிடக்கின்றன.
இது தொடர்பாக, பிரதேச செயலாளரைச் சந்தித்து – சேதமடைந்துள்ள வீதிகளைப் புனரமைத்துத் தருமாறு நான் பலதடவை வேண்டுகோள் விடுத்துள்ளேன். செய்து தருவதாக பிரதேச செயலாளரும் வாக்குறுதியளித்திருந்தார். இருந்தபோதும், அடுத்த மாரிகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் - இன்னும் மேற்படி வீதிகள் புனரமைக்கப்படவேயில்லை.
இந்த நிலையில், அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் சேதமடைந்த வீதிகளைப் புனரமைப்பதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பணத்திலிருந்து – பிரதேச செயலகத்தின் முக்கிய உறுப்பினரொருவர் சம்புநகர் பகுதியிலுள்ள தனது காணியினுள் புதிதாக வீதிகளை அமைத்துள்ளார். இது மாபெரும் அநியாயமும் அதிகார துஷ்பிரயோகமுமாகும்.
ஒரு பிரதேச செயலகத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவரே இவ்வாறு தனது அதிகாரத்தினைத் துஷ்பிரயோகம் செய்வதனூடாக மோசடியான காரியங்களில் ஈடுபடும் போது, அவற்றினை வெறுமனே நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மக்களுக்குச் சேவை செய்யவும், இவ்வாறான அதிகாரிகளைக் கண்காணிப்பதற்காகவுமே மக்கள் நம்மைத் தேர்வு செய்து - இந்த சபைக்கு அனுப்பி வைத்துள்ளனர். எனவே, மக்களின் நம்பிக்கையை நாம் காப்பாற்ற வேண்டும்.
இதேவேளை, கடந்த வெள்ளத்தின் போது – உண்மையாகப் பாதிக்கப்பட்ட பலருக்கு பிரதேச செயலகத்தினால் இழப்பீடுகள் எவையும் வழங்கப்படவில்லை. மாறாக, சிலரின் வளவுகளில் அமைக்கப்பட்டிருந்த கோழிக்கூடுகளை குடிசை வீடுகள் எனப் பதிவு செய்து, அவற்றுக்கும் வெள்ள இழப்பீட்டினை இந்தப் பிரதேச செயலகத்தினர் வழங்கியுள்ளனர். இவ்வாறான அநியாயங்களையெல்லாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பற்காக நாம் இந்தச் சபைக்கு வரவில்லை.
எனவே, அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்தில் நடைபெறும் இவ்வாறான மோசடிகள் குறித்து மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் - கண்காணிப்புடன் இருக்க வேண்டும்' என்றார்.
ஊரான் Friday, 04 November 2011 04:24 AM
ரஹ்மானியா பாத், நீங்க சொல்வது போன்று மலக்குகள் வாக்குப்போட மாட்டாங்க. வழக்குத்தான் போடுவாங்க. இனிமேல்
கள்ளத்தனமான எந்த வேலையும் செய்யும் ஆட்கள் சபைக்கு வரவில்லை. அதனால் எல்லாம் நேராத்தான் நடக்கும். பொறுத்திருந்து பாருங்க ஆவேசம் இல்லாத வேலையாட்கள்தான் இவர்கள்
பொதுச்சந்தை பொதுச்சந்தையாக வரும் பார்த்திருங்கள். நாங்கள் கட்ட வைப்போம்.
Reply : 0 0
rahumaniyabath Wednesday, 02 November 2011 06:35 PM
ஊரான், உங்களுக்கு உங்கட முனாசின் அரசியல் பிரவேசம் தெரியாமல் நேத்து வந்தவர் என்று உள்ளீர்கள் அவர் தலைவர் அஷ்ரப்பின் காலம்தொட்டு அரசியலுக்கு வந்தவராம். நீங்கள் நினைக்கும் பள்ளியை மறைத்து கட்டப்படும் மார்கட் கட்டப்படாது பள்ளியின் அழகுமுகம் என்றும் மறையக்கூடாது என்பதற்காக ஒரு பிரதேசசபை கட்டிடத்தை உடைத்த நேரம் தாங்கள் வெளிநாட்டிலா ?? வரலாற்றின் தவறுகளை என்றும் அமைச்சர் செய்ய மாட்டார் ஒரு நாள் வரும் அமைசரை நினைவு கூறுவோம் என்பதில் சந்தேகம் இல்லை.
Reply : 0 0
Munas.A.R. Wednesday, 02 November 2011 06:41 PM
களங்கமில்லா உன் பணி தொடர வாழ்த்துக்கள் சகோ முனாஸ்.
Reply : 0 0
safa Wednesday, 02 November 2011 06:47 PM
மிக்க மகிழ்ச்சி முனாஸ்....
ஊரின் நலனுக்காக நீங்கள் செய்யும் சேவைகளுக்கு எப்போது எங்கள் துணை இருக்கும் வாழ்த்துக்கள்.
Reply : 0 0
waasith Wednesday, 02 November 2011 08:03 PM
ஊரின் நலனில் அக்கறை கொண்டவர்கள் நிச்சயமாக சேவையின் பக்கம் நிற்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் தன் பக்கட் நிறைந்தால் போதும் என்று நிற்பவர்கள் பற்றி பொது மக்கள் அவதானமாக இருக்கவும். குறிப்பாக சகோதரர் முனாஸ் அரசியலுக்கு புதியவர் என்பது எனக்குத்தெரியாது ஆனால்
அவர் பொதுச்சேவையில் நல்ல திறமை சாலி. அவரின் பெயரில் நற்பணி மன்றமே தொடங்கி நல்ல பல சேவையினை அனைவருக்கும் கல்விக்கும் செய்வது பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள் முனாஸ். நல்லவற்றை இன்றே செய் நன்றாய் செய்.
Reply : 0 0
Add - 7, ooraan Wednesday, 02 November 2011 08:34 PM
Mr. Rahumaniyabath, பள்ளிவாசல் ஒன்றும் கோவிலில்லை, வீதியால் செல்லும்போது கைகூட்டி கும்பிட,. இது இறைவனின் இல்லம். நாம் அதனை தேடி சென்றுதான் தொழவேண்டும். அவர்கள் பள்ளிவாசலை இடித்துவிட்டு சந்தை அமைத்தால்தான் அது வரலாற்று துரோகம்... எங்கள் ஊர்மக்கள் செய்த வரலாற்று துரோகம் என்னவென்றால் இன்னும் ஊழல் செய்து கொண்டிருக்கும் அரசியல் வாதியை (உ) விட்டுவைதிருப்பதுதான், பொறுத்திருங்கள் இன்னுமொரு தேர்தல் வராமலா போகுது...
முனாசின் அரசியல் பிரவேசம் இவர்களுக்கெல்லாம் ஒரு முன்னுதாரணம்.
Reply : 0 0
சிறாஜ் Wednesday, 02 November 2011 09:46 PM
ஊரான் சொல்வது முற்றிலும் ஏற்றுக்கொள்ளும் விடையம்தான். ஏன்னா, பள்ளி அதன் புனிதத்துடன் அழகாக இருக்கிறது. அதனை காரணம் காட்டி ஊருக்கு வந்திருக்கும் பொதுச்சந்தையை தூக்கி எறிவதா? இது ஊருக்கு (உ..) செய்யும் துரோகம் அல்லவா..?
ஊர் மக்களைக்கூட்டி கொடுக்கும் அரசியல் வாதிகளுக்கு சிறந்த பாடம் கற்பிக்க மாகாண சபை வருகிறது ஓட்டம் பிடிக்க இருக்கிறார்கள் சிலர் பிச்சை வேணாம் நாயைப்பிடி என்று சொல்லிக்கொண்டு நாங்களும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ஊருக்கு துரோகம் பண்ணாதீர்கள் இதுதான் எங்களது வேண்டுகோள்.
Reply : 0 0
rahumaniyabath Friday, 04 November 2011 02:49 AM
ad07 ஊரான், அமைசர் இறங்கிய எந்த தேர்தலிலும் அவர் தோக்கவில்லை. இன்ஷா அல்லா இனியும் தோக்க மாட்டார். வாக்குப் போட மலக்குகுகள் இருக்கு என்று சொல்லும் தலைமையின் கீழ் உள்ளோம் என்பது தெரியாதாக்கும். பகிரங்க சவால் விடுகின்றேன் இயலுமானால் (ந) மார்கட் கட்டி பார்க்கட்டும். இந்த மாகாணத்தில் அரசியலில் உச்ச பதவியே அமைசரை தேடி வந்த பின் இன்னும் எதற்கு பதவி ? முதலமைச்சர் தவிர வேறு ஒண்டும் ஆக முடியாது பிறந்த கிழக்கின் முதல் முஸ்லிம் முதல் அமைசர் என்ற சரித்திம் அவருக்கு போதும் ராசாக்கள்.
Reply : 0 0
sun Friday, 04 November 2011 03:06 AM
சிராஜ், நீங்க சொல்லும் அமைசருக்கு வாக்களிக்க அம்பாறை மாவட்டத்தின் அணைத்து மக்களும் காத்துக்கொண்டிருக்கார்கள் ஆகவே உங்கட செல்லுபடி இல்லாத வாக்கு தேவையில்லை. மீண்டும் அக்கரையூர் மக்கள் அவரை சிம்மாசனத்தில் உக்கார வைத்து அட்டளைச்சேனையின் alahai ரசிக்கத்தான் போறோம் என்பதை மறக்க வேண்டாம்.
Reply : 0 0
s.m.ithrees Wednesday, 02 November 2011 05:46 PM
வாழ்த்துக்கள் முனாஸ்.
Reply : 0 0
ரஹ்மானியாபாத்தில் இருந்து Friday, 04 November 2011 04:28 AM
நல்லது செய்வதனை தடுப்பதுதான் உங்க வேலை என்பதனை உங்களது கொமண்ட் மூல அறிந்து கொண்டேன். எனவே இனிமேல் நீர்ங்கள் என்ன சொன்னாலும் ஊர் மக்கள் உறுதியாய் இருக்கினம். எனவே ஊளையிடுவதனால் ஏதும் ஆகாது தைரியமான அரசியல் வாதிகள் இப்ப சபைக்கு அனுப்பி இருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் மனாபும் இருக்கிறார் உங்களுக்கு மகாத்மா காந்தி மாதிரி பதில் சொல்வதற்கு,
முனாஸ் இருக்கிறார் ஆதாரங்களுடன் பதில் சொல்வதற்கு
நசீர் இருக்கிறார் தைரியமாக கையாலும் வாயலும் பதில் சொல்வதற்க்கு போதுமே...
Reply : 0 0
சிறாஜ் Friday, 04 November 2011 05:15 AM
இத்தனையும் பார்க்கும் போது இங்கு யார் தேர்தலில் வெல்லுவார் என்று அழகா விளங்குது றஹ்மானியா பாத்இ நல்லது செய்வோம்ம் நன்றாகச் செய்வோம்.
கள்ளத்தனம் இல்லாமல் வாழ்வோம் மக்களை நேசிப்போம்.
Reply : 0 0
sun Friday, 04 November 2011 07:34 PM
சிராஜ் நசீரின் அரசியல் எங்கிருந்து ஆரம்பித்தது என்று தெரியுமா? அதாவின் பாசறையில் வளர்க்கப்பட்டவர் யாரும் பிழை செய்யமாட்டார்.
நசீர் சரீயாக செய்வார் என்பதில் நானும் தெளிவாக இருக்கிறேன்.
Reply : 0 0
zarjoon Friday, 04 November 2011 07:53 PM
அட்டளைச்சேனையின் வரலாறு தலைவர் அஸ்ரப் காலம் தொட்டு ரகுமாநியாபாத் மகன்தான் ......... ஆண்டு வருவதும் அந்த மண்ணில் பிறந்த எவருக்கும் கள்ள தனம் இல்லை என்பதற்கு உ+ம்
அட்டளைச்சேனை முழு மக்களும் ரஹ்மாநியாபாத் மகனையே விசுவாசிப்பதும் கடந்த தேர்தல் முடிவு காட்டுவதும் தெரியாதா?
Reply : 0 0
சிறாஜ் Friday, 04 November 2011 09:01 PM
நசீர் அதாவின் பாசறையில் உண்மையில் அது..... பழகியது எனக்கு த்தெரியும் ஆனால் இப்ப ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸில் இருக்கிறார். அப்படியானால் கட்சி சரியாக நிதானமாக வளர்ந்துக் கொண்டிருக்கிறது.. புரிந்து கொள்ளுங்கள்.
Reply : 0 0
Add - 7, ooraan Friday, 04 November 2011 11:48 PM
Mr. rahmaniyabath, நாங்களும் இந்த ஊரில் பிறந்தவர்கள்தான், அமைச்சர் (உ) எப்படி அரசியலுக்கு வந்தார் என்பது ஊரறிந்த விடயமே. இத மறந்துட்டீங்களா?
Reply : 0 0
zaro Saturday, 05 November 2011 02:02 AM
அப்படி யாருப்பா சர்ஜோன் றஹ்மானியா பாத் மகன் எங்களுக்குத் தெரியாத ஒருவர் அங்கு இருக்காரா? அப்படி என்றால் அவரின் வீட்டுக்குரிய அரசியல் செய்கிறார் என்று நினைக்கிறேன். ஏன் என்றால் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற மூன்று உள்ளூராட்சித்தேர்தலிலும் நீங்கள் கூறும் (உ) அவர் படுதோல்வி அடைந்தது இப்பவும் அப்பவும் உங்களுக்குத் தெரியாத விடையமா?
அப்படி இருக்கும் போது எப்படி ரஹ்மானியாபாத் அரசியல் புளுமூட்டை என்னும் கதை கனவில் நினைக்கலாம், நடக்காது விடமாட்டோம்.....
Reply : 0 0
zaro Saturday, 05 November 2011 08:21 PM
அப்படி யாரும் இல்ல. அதனால்தான் பதிலே வரல. எனவே யாரும் சட்டம்பி காட்ட வேண்டாம். என்பதனை கவனத்தில் கொள்ளவும்.நல்லது செய்ய நினைக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Reply : 0 0
senaiyuran Wednesday, 02 November 2011 01:13 AM
யஸீர் சரோ கூறிய கருத்து உண்மை என்றாலும் ஒரு பக்கம் சாடி இன்னும் ஒருவரின் கருத்து போன்று சொல்லாமல் சொந்த கருத்தை சொந்த பெயரில் சொல்லுங்கள். சேனை ஊருக்கு அமைச்சர் செய்யாதது என்ன ? அட்டளைச்சேனையின் வாக்குகளை அள்ளி போடா விட்டாலும் நன்றி marantha சமூகமாக மாறக் கூடாது.
Reply : 0 0
நண்பன் Tuesday, 01 November 2011 10:54 PM
நல்ல கருத்தினை சொல்லியிருக்கும் உறுப்பினர் முனாஸ் அவர்கட்கும் செய்தியாளருக்கும் நன்றி....
தொடரட்டும் உங்கள் பணி ஊழலை ஒழிப்போம். வாழ்த்துக்கள்.
Reply : 0 0
நண்பன் Tuesday, 01 November 2011 10:55 PM
நல்ல கருத்தினை சொல்லியிருக்கும் உறுப்பினர் முனாஸ் அவர்கட்கும் செய்தியாளருக்கும் நன்றி....
தொடரட்டும் உங்கள் பணி ஊழலை ஒளிப்போம் வாழ்த்துக்கள்.
Reply : 0 0
safa Tuesday, 01 November 2011 11:10 PM
வீதிகளை புனரமைத்தல் ..... ஆ .. அது ஒரு நல்ல செயல்தான். முதலில் அதற்கு நன்றி... அவைகளை புனரமைக்கும் அந்த வடிகான்களும் அமைத்து கொடுத்தால் இன்னும் பிரயோசனமாக் இருக்கும். அதையும் கொஞ்சம் உங்கள் சிந்தனையில் வைக்கலாமே.
Reply : 0 0
நண்பன் Tuesday, 01 November 2011 11:42 PM
நல்ல துடிப்பான செய்தி வாழ்த்துக்கள் முனாஸ் சார்.
Reply : 0 0
சிறாஜ் Tuesday, 01 November 2011 11:46 PM
வாழ்த்துக்கள்.
Reply : 0 0
நலம் விரும்பி Tuesday, 01 November 2011 11:49 PM
ஊழல் அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றை இங்கே கெளரவ உறுப்பினர் முனாஸ் கூறியிருப்பது போன்று கட்டாயம் தட்டிக்கேட்க வேண்டும் அதனை விட்டுட்டு தோளில் கைபோட்டுத்திரிவது சரியாகுமா?
எனவே மக்களின் ஆணையினைப் பெற்று வந்த அரசியல் வாதிகள் மக்களுக்கான வேலையினை ஆரம்பியுங்கள் துடிப்புடன் நடவுங்கள்.
வாழ்த்துக்கள் முனாஸ், தைரியமாக பேசியிமைக்கு.
Reply : 0 0
zaro Wednesday, 02 November 2011 12:04 AM
ஊரில் எத்தனையோ விடையங்கள் இன்னும் இருக்கு. நல்லா பாருங்க. ஊரில் உள்ள அமைச்சரை அனுசரித்து போங்க. எல்லாம் சரியா நடக்கும்.
ஆளும் கட்சிக்கு வாங்க முதல்ல சேவை செய்யலாம். இல்லையேல் அறிக்கை மட்டும்தான் விடலாம்.
Reply : 0 0
addalaichenai ooraan Wednesday, 02 November 2011 12:32 AM
ஊரிலே நடக்கின்ற (ஊழல்) அணைத்து விடயங்களையும் முனாஸ் அவர்கள் மிக தைரியமாக சுட்டிக்காட்ட வேண்டும்...
எவரையும் அனுசரித்து போக வேண்டிய அவசியம் எவருக்கும் கிடையாது... ஆளும் கட்சி அமைச்சர்கள் எமது ஊரில் இருந்து செய்த அனைத்தையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம், எந்த விடயமும் உருப்படியாக நடைபெறவில்லை. முனாஸ் போன்ற சிறந்த அரசியல்வாதிகள் எப்பவோ வந்திருக்கவேண்டும்.
Reply : 0 0
avathaani Tuesday, 01 November 2011 10:43 PM
முனாஸ் உங்கள் குரல் பலமாக ஒலிக்கட்டும், ஆனால் செயலக உறுப்பினர் அமைச்சரின் செல்வாக்கு உடயவரென்றால் நிலைமை சிரமம்தான். ஊரவர்களின் ஒத்துழைப்புடன் உங்கள் போராட்டத்தை தொடருங்கள்.
Reply : 0 0
zarjoon Wednesday, 02 November 2011 01:19 AM
முனாஸ் அவர்களின் பணி தொடர என் வாழ்த்துக்கள். அநீயாயத்துக்கு துணை போகாமல் நிமிர்ந்து நின்று கேள்விகள் தொடரட்டும் சேனையூர் மக்களுக்காக.
Reply : 0 0
zarjoon Wednesday, 02 November 2011 01:25 AM
ஊரான், ஆளும் கட்சி அமைசர் உங்கே ஊருக்கு உருப்படியாக என்ன செய்ய வேண்டும் என்று நீங்க நினைகீங்க என்று சொன்னால் அதையும் எடுத்து செல்வதற்கு அமைச்சர் தயாராக உள்ளார் என்பது தங்களுக்கு தெரியாதுபோல...
Reply : 0 0
Add - 7, ooraan Wednesday, 02 November 2011 02:08 AM
சர்ஜூன்,,, உங்களது ஆளும் கட்சி அமைச்சர் ஊருக்கு எதுவும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. செய்பவர்களை தடுக்காமல் இருந்தாலே போதும், இனி ஊர் உருப்படும்.
Reply : 0 0
ஊரான் Wednesday, 02 November 2011 02:28 AM
ஊருக்கு சேவை யார் செய்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் .ஆனால் ஊரின் முன்னேற்றத்தை பின்னால் தள்ளும் சிலர் ஊருக்குத்தேவையா என்பதுதான் எனது கேள்வி.
நேற்று அரசியலுக்கு வந்த இந்த முனாசுக்கு தைரியமாக மக்களுக்கு குரல் கொடுக்க முடியுமென்றால் ஏன் மற்றவர்கள் மாவன்னாக்களாக இருப்பது ஊரில் அமைய விருக்கும் பொதுச்சந்தையை ஏன் இன்னும் அமைக்காமல் இருக்கிறீர்கள் ?
இந்த பொதுச்சந்தைக்கு நிதி யாரோ ஒதுக்கி இருக்கும் போது எவரும் இதில் ஏன் தலையிடனும்? இவர்கள் ஊருக்கான சேவையாளர்களா..
Reply : 0 0
ullooran Wednesday, 02 November 2011 02:40 AM
டாக்டர் ஜலால்தீன் (எம்.பி) காலத்திலிருந்து இன்றுவரைக்கும் பல அபிவிருத்தித் திட்டங்கள் நடந்துள்ளது. ஆனால் நாம் யாருக்கும் நன்றி கூறியதே கிடையாது. அதற்குப் பின்னர் எமதூருக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக்கூட பெறமுடியாமல் தவிக்கின்றோம், பல முறை ஏமாந்தும் இருக்கின்றோம். ஆகவே இனிவரும் காலங்களிலாவது கட்சி பேதமின்றி எமதூரின் அபிவிருத்திக்கு நாம் எல்லோரும் முன்னின்று உழைப்போம் ...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Reply : 0 0
zaro Wednesday, 02 November 2011 03:45 AM
நான் சொன்னதில் என்ன தப்பு என்று கேட்கிறேன் ஊருக்கு தேவை சேவை சேவை வேனும் என்றால் முனாஸ் நீங்கள் ஊர் அமைச்சருடன் வந்து இணைந்து ஒற்றுமையாக சேர்ந்து சேவை செய்யுங்கள்.
சும்மா எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு ஒன்ரும் செய்ய முடியாது என்பதனை தெரிந்தும் ஏன் சும்மா இருக்கிங்க.
Reply : 0 0
S.L.MUNAS Wednesday, 02 November 2011 03:49 AM
இங்கு விமர்சனம் பண்ணியிருக்கும் அனைவருக்கும் நன்றி. அட்டாளைச்சேனை பிரதேசத்தின் முன்னேற்றத்தில் நான் என்னாலான முழுப்பங்களிப்பையும் வழங்கி ஊருக்கான வெற்றிப்பாதையில் பயனிக்க அனைவரும் கைகோர்த்து நிற்குமாறு அன்பானவர்கள் அனைவரிடமும் வேண்டி நிற்க்கிறேன்.
நன்றி.
Reply : 0 0
najeeb Wednesday, 02 November 2011 03:52 AM
வாழ்த்துக்கள் மிஸ்டர் முனாஸ்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
39 minute ago
2 hours ago