2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது காணாமல் போனவரின் சடலம் கரையொதுங்கியது

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 03 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சி.அன்சார்,எஸ்.மாறன்)

அக்கரைப்பற்று - பொத்துவில் பிரதான வீதியின் சின்னமுகத்துவார பாலத்தடியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நபரொருவர் கடலில் தவறி வீழ்ந்து காணாமல்போன நிலையில் இன்று வியாழக்கிழமை காலை அவரது சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று ஐந்தாம் பிரிவு பொது வீதிப் பிரதேசத்தினைச் சேர்ந்த முகம்மது ராசீக் முகம்மது பைரூஸ் (வயது 35) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். குறித்த நபருக்கு ஏழு வயது ஆண் பிள்ளையும் நான்கு வயது பெண் பிள்ளையும் உள்ளனர்.

குறித்த நபர் நேற்று புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் பாலத்தடியில் வீச்சு வலை மூலம் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது வலை சிக்கியதாகவும் அதனை இழுக்க முற்பட்டபோது குறித்த நபர் கடலில் தவறி விழுந்து கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாகவும் பொலிஸார் கூறினர்.

இவரது சடலத்தை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து மேற்கொண்டிருந்த நிலையிலேயே இச்சடலம் இன்று வியாழக்கிழமை காலை கரையொதுங்கியது.

சடலத்தை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  படங்கள்:ஹனீக் அஹமட்


You May Also Like

  Comments - 0

  • faroos Thursday, 03 November 2011 10:03 PM

    யா அல்லாஹ் இவருடைய பாவங்களை மன்னித்து மண்ணறையை சுவனத்தின் பூஞ்சோலையாக ஆக்குவாயாக.

    Reply : 0       0

    vanndu Thursday, 03 November 2011 11:05 PM

    நீ கஷ்டப்பட்டு ஹலாலா சம்பாதிக்க நினைத்தாய். இறைவன் உன்னை சுவனத்தில் இருக்க வைப்பானாக. ஆமின்.

    Reply : 0       0

    firthous Saturday, 05 November 2011 05:35 AM

    யா அல்லாஹ் உனது punitha mathathil maranithavarin paavankalai mannippayaga.

    Reply : 0       0

    satham Monday, 07 November 2011 07:13 PM

    நீரில் மூழ்கி இறந்தவர்கள் சஹீதுகள் (இஸ்லாத்தில்) என்பார்கள்...
    இவர் சகீதாகி விட்டார்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .