Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 நவம்பர் 04 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
அண்மையில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக நாட்டின் சகல பிரதேசங்களிலும் உள்ள சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அறிவூட்டல் வேலைத்திட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன.
இதற்கு அமைவாக அம்பாரை மாவட்ட சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அறிவூட்டல் வேலைத்திட்டம் எதிர்வரும் 2011.11.05ஆம் திகதி சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.
இதனடிப்படையில் அம்பாறை தேர்தல் தொகுதி;க்குட்பட்ட உத்தியோகத்தர்களுக்கு அம்பாரை நகர மண்டபத்தில் காலை 9.00 மணிக்கும், பொத்துவில் தேர்தல் தொகுதிக்குட்பட்ட உத்தியோகத்தர்களுக்கு அட்டாளைச்சேனை கல்வி கல்லூரியில் காலை 9.00 மணிக்கும், சம்மாந்துறை தேர்தல் தொகுதிக்குட்பட்ட உத்தியோகத்தர்களுக்கு சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் பிற்பகல் 2.00 மணிக்கும், கல்முனை தேர்தல் தொகுதிக்குட்பட்ட உத்தியோகத்தர்களுக்கு சாய்ந்தமருது வள நிலையத்தில் பிற்பகல் 2.00 மணிக்கும் இரண்டு பிரிவுகளாக நடை பெறவுள்ளதாகஅம்பாறை மாவட்ட சமூர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார் தெரிவித்தார்.
இந்த அறிவூட்டல் வேலைத்திட்டத்தில் அதிதிகளாக அமைச்சர் ராஜித சேனாரட்ன, பிரதியமைச்சர் றோஹித அபேகுணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர்களான மனூஷ நாணயக்கார, ஜானக பக்கும்புர, மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கரா, மாவட்ட சமூர்த்தி உதவி ஆணையாளர் கிரிந்தகே உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago
1 hours ago