2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அதிபர்களுக்கான ஆளுமை விருத்தி செயமலர்வு

Kogilavani   / 2011 நவம்பர் 04 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே,எம்.ஹனீபா)

தேசிய கல்வியமைச்சின் கலாசார விழுமியங்களுக்கான கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் சம்மாந்துறை வலய முஸ்லீம் பாடசாலை அதிபர்களுக்கான ஆளுமை  விருத்தி தொடர்பான செயலமர்வு நேற்று வியாழக்கிழமை சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குட்பட் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வையும், நட்பையும்  ஏற்படுத்தும் வகையில்  இச்செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இச்செயமலர்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், தேசிய கல்வியமைச்சின் கலாசார விழுமியங்களுக்கான உதவி பணிப்பாளர் ஏ.அஹமட், ஜனாதிபதியின் இணைப்பதிகாரி எம்.எம்.ஏ.காதர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.அஸீஸ் முகைதீன், உதவிக் கல்விப் பணிப்பாளர் கவிஞர் எச்.எம்.பாறுக் உட்பட அதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .