2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

திண்ம கழிவுகளை சேகரிப்பதற்கான கொள்கலன்கள் வழங்கல்

Super User   / 2011 நவம்பர் 04 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேச ஹோட்டல்கள் மற்றும்  சிற்றுண்டிச்சாலைகளிலிருந்து கழிவாக அகற்றப்படும் திண்ம கழிவுகளை சேகரிப்பதற்காக கொள்கலன்களை கையளிக்கும் வைபவம் நேற்று வியாழக்கிழமை கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப், கல்முனை மாநகர  ஆணையாளர் எம்.ஜே..லியாகத் அலி, பொறியியலாளர் ஹலீம் ஜௌசி மற்றும் யுனெப்ஸ் நிறுவன திண்மக்கழிவு  தொழில்நுட்ப முகாமையாளர் பீ.குருபரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

திண்ம கழிவுகளை சேகரிப்பதற்கான கொள்கலன்கள் யுனெப்ஸ் நிறுவனத்தினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • pasha Friday, 04 November 2011 09:53 PM

    கொழும்பை போன்று இக்கொள்கலன்கள் ஒவ்வொரு வீட்டிட்கும் வழங்க வேண்டும் .

    Reply : 0       0

    ullooran Friday, 04 November 2011 10:01 PM

    வாழ்த்துக்கள் மேயர் ...! எமது நகரை சுத்தப்படுத்துங்கள். மனிதர்களும் சுத்தமாகிவிடுவார்கள்......
    குறிப்பு; மழைகாலம் என்பதால் வடிகான்களை சுத்தம் செய்தால் பெரும் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமே !

    Reply : 0       0

    meenavan Friday, 04 November 2011 10:22 PM

    வழங்கப்பட்ட கொள்கலன்களை கழிவுகளை சேகரிப்பதற்கு பதிலாக வேறு தேவைகளுக்கும் நம்மவர் பாவிப்பர் (நீர் சேகரிப்பு) அதையும் கவனித்துக்கொள்ள வேணும்.

    Reply : 0       0

    RISADMI Saturday, 05 November 2011 02:48 AM

    பிளாஸ்டிக் வாளி கொடுப்பது சரி வடிகால் அமைப்பது எப்போது ?

    Reply : 0       0

    mbm Saturday, 05 November 2011 03:10 PM

    சுத்தம் செய்வோம்! ஆனால் செய்யமாட்டோம்! கொள்கலன் கொடுப்போம். ஆனால் நாங்க பாவிக்கவும் மாட்டோம். பாவிக்கப்படுகின்றதா என பார்வையிடவும் மாட்டோம்! இதுக்கப்புறம் யாருக்கு தெரியப்போகின்றது எது எந்த கொள்கலன் என்று! வாங்கினவர்களும் மறந்துடுவார்கள்! கொடுத்தவர்களும் மறந்துடுவார்கள்! இனி நீங்கள் நகரும் ஒவ்வொரு அடியும் மக்கள் பார்வையில் உண்டு என்பதை மறந்திடாதீங்க அரச அதிகாரிகளே...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .