Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 நவம்பர் 04 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுனாமி அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த கல்முனை வாழ் மக்களுக்கு உதவ ஐக்கிய அரபு எமிரேடஸ் தயாராகவுள்ளதாக கல்முனை பிரதி மேயர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
கல்முனை பிரதி மேயராக சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் முதற் தடவையாக இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவரும் இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் அமைப்பின் தலைவருமான மஹ்மூத் முஹம்மட் அல் மஹ்மூதை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தினார்.
இதன்போது சுனாமி அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த கல்முனை வாழ் மக்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உதவும் என தூதுவர் உறுதியளித்ததாக நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த ஏழு வருடங்களாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய அரபு எமிரேடஸ் தூதுவரிடம் தெளிவுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மக்களுக்கு அவசரமாக மேற்கொள்ள வேண்டிய உதவி திட்டங்கள் தொடர்பிலான முன்மொழிவொன்றையும் தூதுவர் மஹ்மூதிடம் கையளித்ததாக நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கல்முனை வாழ் மக்களை நேரில் வந்து பார்வையிடுமாறு சட்டத்தரணி நிசாம் காரியப்பர் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட தூதுவர் விரைவில் கல்முனைக்கு விஜயம் மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கல்முனை பிரதி மேயராக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா ஏ. புட்டின், கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய முக்கியஸ்தர்கள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து கல்முனை அபிவிருத்தி தொடர்பில் பேச்சு நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
sano Friday, 04 November 2011 11:33 PM
வாழ்த்துக்கள் நிசாம் சேர். வெற்றி உங்களுடனேய இருக்கட்டும்.
Reply : 0 0
greenfield Saturday, 05 November 2011 12:33 AM
சலசலப்பு இல்லாமல் பணியாரம் சுடுங்க சார்.
Reply : 0 0
riyas Saturday, 05 November 2011 02:36 AM
நிசாமுக்கு பொருத்தமான பதவி கல்முனை மேயர். but முடியவில்லயே பொறுத்திருங்கள்.
Reply : 0 0
makkal 1st Saturday, 05 November 2011 05:04 AM
வாழ்த்துக்கள் இப்போது கல்முனை மாநகருக்கு வசந்த காலம் எனலாம். நம்ம மேயரும் பிரதி மேயரும் இணைந்து கல்முனையின் ஊத்தையை அகற்ற வேண்டும். இப்படி செய்தியில் மட்டுமல்ல செயலிலும் ..
Reply : 0 0
mbm Saturday, 05 November 2011 03:01 PM
இது வரை மற்றவங்க சொல்லிக்கொண்டே இருந்தாங்க. ஆனால், நீங்க ஆரம்பிச்சிட்டீங்க. உங்கள் முயற்சி நிறைவேறும் பட்சத்தில் மக்கள் மனதிலும், அவர்கள் செய்யும் பிரார்த்தனையிலும் உங்கள் நாமம் இருக்கும். மக்கள் ஆட்சி இதுதானே....
Reply : 0 0
zaro Saturday, 05 November 2011 08:11 PM
முதல்ல ஊரில் இருக்கும் ஊத்தையை வெளியேற்றுங்கள். மற்றது இனிதே நடக்கும்...
Reply : 0 0
kulathooran Saturday, 05 November 2011 09:10 PM
மேயருடன் தம்பி ஹரிசையும் சேர்த்து உங்கள் பணியை மேற்கொள்வது முகவெற்றிலை மாநகரை அபிவிருத்தியை இலகுவாக்கும். மு.கா. வின் மும்மூர்த்திகளாக (அடுப்பு) செயற்பட வாழ்த்துக்கள்.
Reply : 0 0
ummpa Saturday, 05 November 2011 10:28 PM
greenfield,
பணியாரம் சுடுவதுக்கு முதல் பொருட்களை தயார் படித்தினால் தானே முடியும், என்னவா கொடுமையா இருக்கு உங்கள் கூத்து . வாய மூடிக்கொண்டு கண்ணை திறந்து பாருங்க சார் !
Reply : 0 0
razeek kalmunai Sunday, 06 November 2011 01:26 AM
இந்த பகட்டு ஒன்றும் கல்முனனையில் எடுபடாது .... படம் புடிச்சி காலத்தை வீணடிக்காமல் முடிந்தால் ஏதாவது செய்துகாட்டுங்கள் பார்க்கலாம்.
Reply : 0 0
min Sunday, 06 November 2011 01:41 AM
கல்முனை மேயர் மற்றும் உதவி மேயர் !!!!!!! நன்றி உங்கள் முன்மாதிரியான சேவைக்கு::::
Reply : 0 0
faizmohamed Sunday, 06 November 2011 02:19 AM
வாழ்த்துக்கள். வளர்க உங்கள் சேவை.
Reply : 0 0
min Sunday, 06 November 2011 02:20 AM
என் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
Reply : 0 0
kalmunaiyaan Monday, 07 November 2011 08:56 PM
முடியும் என்றால் கொண்டு வந்து பாருங்க.....
Reply : 0 0
uooran Tuesday, 08 November 2011 06:25 PM
நிசாம் காரியப்பர் அவர்களே!
நீங்கள் செயல் வீரர் என்றால் செய்து காட்டுங்கள்.
தூதுவர்கள் போன்றோரை சந்தித்து எங்களது பிரச்சனைகளை பிரதி மேயரான உங்களால் முன்வைக்க முடியும் என்றால் எங்களது தம்பிக்கிளி என்னத்துக்கு இருக்கு.
எங்களது பிரதேசத்துக்கு உங்களால் சிறந்த எதிர்காலம் உண்டாகட்டும் .
Reply : 0 0
razeek kalmunai Tuesday, 08 November 2011 11:34 PM
இந்த நாலு வருட காலத்துக்குள் முக்கியமானவர்களுடன் நின்று படம் புடித்து பத்திரபடுத்திக்கங்கள். பின்னுக்கு உதவும் சார்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
26 minute ago
1 hours ago