2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மண்ணின் சேவகனுக்கு மகுடம் சூட்டும் நிகழ்வு

Super User   / 2011 நவம்பர் 05 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

"மண்ணின் சேவகனுக்கு மகுடம் சூட்டுவோம்" எனும் தொனிப்பொருளில் சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரட்ன மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் ஆகியோருக்கான பாராட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விஷன் பெஸ்டர் எனும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு கல்முனை அல் - பஹ்ரியா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதன்போது சிரேஷ்ட அமைச்சர் தயாரட்ன கடந்த 35 வருட காலமாக நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுகின்றமை மற்றும் மாநகர சபை உறுப்பினர் றியாஸ் தொடர்ச்சியாக இரண்டு தடவை கல்முனை மாநாக சபையின் எதிர்க்கட்சி உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டமை ஆகியவற்றிற்காக பாரட்டப்பட்டனர்.

இந்நிகழ்வில் மாகாண மட்ட கலை மற்றும் கலாசார போட்டிகளில் வெற்றியீட்டிய கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • ullooran Saturday, 05 November 2011 07:16 PM

    வெற்றி நடைபோட வாழ்த்துக்கள்.........!

    Reply : 0       0

    Goerge Saturday, 05 November 2011 07:29 PM

    தனக்கு தானே parattikkoranga

    Reply : 0       0

    razeek kalmunai Sunday, 06 November 2011 01:13 AM

    முன்னாள் அமைச்சர் மன்சூர் சார் அவர்களுக்கு பின் அபிவிருதிக்காக பாராட்டபட வேண்டியவர் மக்கள் நாயகன் ரியாஸ்தான்............. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தலைவா

    Reply : 0       0

    zaro Sunday, 06 November 2011 02:02 AM

    என்ன செய்ய அவருடைய அமைப்பே அவரைப் பாராட்டுது.

    Reply : 0       0

    ummpa Saturday, 12 November 2011 11:16 PM

    மகுடம் ரியாசுக்கு சூட்டத்தான் வேண்டும். அவரின் தனி முயற்சியும் தனிமையான பயணமும் தான் இந்தளவுக்கு அவரின் பயணம் தொடரட்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .