Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 நவம்பர் 06 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
அம்பாறை மாவட்டத்தில் பருவ மழை பெய்துவருவதயையடுத்து பெரும்போக நெற் செய்கைக்காக விதைப்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இம்முறை பெரும்போகத்தில் அம்பாறை மாவட்டத்தின் 29 கமநல சேவைகள் மத்திய நிலையத்திற்குட்பட்ட 180,000 ற்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.
பெரும் போகத்தில் புதிய ரக நெல்லினங்களை செய்கை பண்ணுவதற்கான ஏற்பாடுகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கேற்ற வகையில் பிற மாவட்டங்களிலிருந்து விதை நெல் அம்பாறை மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதேவேளை கல்லோயா குடியேற்றவாசிகள் இம்முறை கூடுதலான ஏக்கர் நெற்காணிகளில் சம்பா நெற்சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
நெல் உற்பத்தியை மாவட்டத்தில் விஸ்தரிப்பதற்கு விவசாய திணைக்களம் புதிய இன விதைநெல்லினையும், உரம் போன்றனவற்றினை மானிய அடிப்படையில் வழங்கி வருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
23 minute ago
1 hours ago